Skip to main content

"படம் தோல்வின்னு மெசேஜ் அனுப்பினாங்க" - சம்யுக்தா குறித்து தயாரிப்பாளர் பதிவு

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

producer sandra thomas about samyuktha

 

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சம்யுக்தா தமிழில் களரி, ஜூலை காற்றில், எரிடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் தமிழில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இப்படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் சம்யுக்தா.

 

இந்த நிலையில் சம்யுக்தாவை பற்றி முன்பு நடந்த நிகழ்வு ஒன்றை தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதள பக்கத்தில், "எனது பன்னிரெண்டு வருட சினிமா அனுபவத்தை நான் எப்போதும் இங்கு குறிப்பிடப்படுவதற்கு கடமைப்பட்டுள்ளேன். ‘எடக்காடு பட்டாலியன்’ படத்திற்கு முன் 8 படங்களும் அதற்கு பின் இரண்டு படங்களும் தயாரித்த தயாரிப்பாளர் நான். எடக்காடு பட்டாலியன் படத்தில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்திருந்தார். 

 

பல மாதங்களுக்கு பிறகு படம் ரிலீஸ் நெருங்குகிறது. அந்த சமயத்தில் 65% மட்டுமே சம்யுக்தாவுக்கு சம்பளம் கொடுக்க முடிந்தது. சம்யுக்தாவிடம் ஃபோன் பண்ணி கொஞ்சம் அவகாசம் கேட்டேன். நம்ம படம் தானே பிரச்சனையில்லை என்று பதிலளித்தார். பின்பு படம் ரிலீஸான இரண்டாவது நாள் சம்யுக்தா எனக்கு படம் தோல்வின்னு மெசேஜ் அனுப்பினாங்க. நமது படம் வெற்றி பெறவில்லை என எனக்கு தெரியும். நீங்கள் நமது படத்திற்கு பொருளாதார ரீதியாக பயன் பெற்றிருக்க மாட்டீர்கள். எனவே நீங்கள் எனக்கு கொடுக்க வேண்டிய பேலன்ஸ் பணம் எனக்கு வேண்டாம். நீங்கள் என்னை எவ்வளவு கட்டாயப்படுத்தினாலும் நான் வாங்கமாட்டேன். அடுத்த முறை சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்றார். அவரது பெரிய மனதுக்கு தலை வணங்க வேண்டியிருந்தது.

 

ஒரு வருடத்திற்கு 300க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகும் கேரளாவில் 5% படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. மலையாள சினிமாவுக்கு இதுபோன்ற நடிகர்கள் தேவை இவர்களைத் தயாரிப்பாளர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இப்ப சொல்லணும் போல தோணுச்சு அவ்ளோதான்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

“உண்மைக்குப் புறம்பானது” - ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
producer abdul malik jaffar sadiq case issue

மலேஷியாவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்து வருகிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல்வேறு மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையைப் பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது.

இந்த நிலையில் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டதாக காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும்  தனக்கும் தொடர்பு உண்டு என்று பிரபல யூட்யூப் சேனல் உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் 5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.