Skip to main content

''தயவுசெய்து எல்லோரும் கோடிட்டுக் காட்டப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்'' - பிரியங்கா சோப்ரா!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

bdsg

 

ஜூன் 1-ஆம் தேதி வழக்கமாக கேரளாவில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாகத் தொடங்கும் என இந்திய வானிலை மையம் கடந்த 15-ஆம் தேதி அறிவித்தது.
 


அதன்படி தற்போது அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற்றமடைந்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. 'நிசர்கா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயல் இன்று மும்பை குஜராத் இடையே கரையைக் கடக்கவுள்ளது. 1891ஆம் ஆண்டுக்குப் பிறகு மும்பையில் வீசவுள்ள இந்தப் புயலால் மஹாராஷ்ட்ராவில் பதட்டம் நிலவி வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் புயல் அடிக்கும் சமயத்தில் எடுக்கப்பட வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா 'நிசர்கா' புயல் குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

"இந்த ஆண்டு இடைவிடாமல் பிரச்சனைகளை உணர வைக்கிறது. தயவுசெய்து எல்லோரும் பாதுகாப்பிற்கான வழியை உறுதிசெய்து, முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகளோடு, கோடிட்டுக் காட்டப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். 'நிசர்கா' புயல், எனது அம்மா, சகோதரர் உட்பட 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் எனது அன்புக்குரிய சொந்த நகரமான மும்பையை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. 1891 ஆம் ஆண்டுக்குப் பிறகு மும்பை இப்படி ஒரு கடுமையான சூறாவளி நிலச்சரிவை அனுபவிக்கவில்லை. உலகம் மிகவும் அவநம்பிக்கையாக இருக்கும் இந்த நேரத்தில், இது கண்டிப்பாக பேரழிவை ஏற்படுத்தும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஆடைகளை அகற்றச் சொல்லி வற்புறுத்தினார்" - பிரியங்கா சோப்ரா பகீர் குற்றச்சாட்டு

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

priyanka chopra accusses bollywood film director

 

தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இப்போது பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள 'சீட்டடெல்' வெப் தொடர் கடந்த மாதம் 28 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 

 

இந்நிலையில் தனது திரைப்பயணத்தில் நடக்கும் அனுபவங்கள் குறித்து அவ்வப்போது பேட்டிகளில் பேசி வருகிறார். அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்களையும் பகிர்ந்திருந்தார். அண்மையில் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக பாலிவுட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாகக் கூறியிருந்தார். அந்த வகையில் மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவலை பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. 

 

இதனை ஒரு ஆங்கில ஊடகத்தில் சொன்ன அவர், இது பற்றி விரிவாகக் கூறுகையில், "2002-2003 ஆம் ஆண்டுகளில் ரகசிய ஏஜெண்ட்டாக ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வந்தேன். அப்போது ஒரு காட்சியில் ஒரு ஆணை வசியம் செய்ய வேண்டும். அதில் ஆடைகளை அவிழ்த்து உள்ளாடைகளுடன் அந்த நபரை மயக்க வேண்டும் என இயக்குநர் சொன்னார். அதனால் ஸ்கின் ட்ரெஸ் (Skin dress) அணிந்து கொண்டு நடிப்பதாகச் சொன்னேன். ஆனால், அந்த இயக்குநர் ஸ்கின் ட்ரெஸ் இல்லாமல் உள்ளாடைகளுடன் நடிக்க வேண்டும் என வற்புறுத்தினார். மேலும் இதைப் பார்க்கத் தான் ரசிகர்கள் வருவார்கள் என ஆபாசமாகப் பேசினார்" என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், "இந்த விஷயத்தை அந்த இயக்குநர் என்னிடம் சொல்லவில்லை. என் எதிரில் இருந்த ஒப்பனையாளரிடம் சொன்னார். அது ஒரு மனிதாபிமானமற்ற தருணம்" என்றார். பின்பு தனது அப்பாவின் அறிவுறுத்தலின் படி அப்படத்திலிருந்து விலகிவிட்டேன். மொத்தம் 2 நாட்கள் நடித்திருந்த நிலையில் அதற்கான செலவுகளை படக்குழுவிடம் திருப்பி கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். அந்த இயக்குநர் பெயரை பிரியங்கா சோப்ரா சொல்லாமல் தவிர்த்துவிட்டார்.

 

 

Next Story

நடிகை பரினீதி சோப்ரா & ராகவ் சதா எம்.பி நிச்சயதார்த்தம் - பிரபலங்கள் வாழ்த்து

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

Actress Parineeti Chopra Gets Engaged To Aam Aadmi Party Leader Raghav Sada Celebrities Congratulate

 

பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும்  ராகவ் சதா எம்.பியு நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் திருமணம் உறுதிசெய்யப்பட்டு இன்று (13.05.2023) நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. டெல்லியில் உள்ள கபுர்தலா மகாராஜாவின் முன்னாள் இல்லமான கபுர்தலா இல்லத்தில் நடைபெறுகிறது. 

 

மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் திருமண தம்பதிகளின் நண்பர்கள் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 150 பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இதற்காக அமெரிக்காவில் செட்டிலான பிரியங்கா சோப்ரா டெல்லிக்கு வந்து கபுர்தலா இல்லத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேலும் பல்வேறு திரை பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

 

நிச்சயதார்த்த மோதிரம் 8 மணியளவில் மணமக்கள் மாற்றி கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு பாலிவுட் திரை பிரபலங்கள் அவர்களுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.