Skip to main content

"எனக்கு வந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார்" - 23 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பட வாய்ப்பை தவறவிட்ட மஞ்சு வாரியர்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Manju Warrier missed a Tamil film opportunity 13 years which plays Aishwarya Rai in Kandukondain Kandukondain

 

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தில் மூலம்  அறிமுகமாகி தமிழிலும் பிரபலமானார். இதையடுத்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'துணிவு' படத்தில் நடித்திருந்தார். மலையாளம், தமிழ் மொழியைத் தொடர்ந்து தற்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பதைத் தாண்டி பாடகியாகவும் வலம் வருகிறார். 

 

இந்த நிலையில், தான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அசுரன் படம் முன்பே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது பல மலையாள படங்களில் ஒப்பந்தமாகியிருந்தேன். அதனால் நடிக்க முடியாமல் போக பல தமிழ் படங்களின் வாய்ப்பை தவறவிட்டேன். அப்படி தவறவிட்ட படங்களில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படமும் ஒன்று. அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் இயக்குநர் ராஜீவ் மேனன் அழைத்தார். பின்பு என்னால் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு போனது." என தெரிவித்துள்ளார். 

 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் 2000 ஆம் ஆண்டு வெளியானது. அதில் மம்மூட்டி, அஜித்குமார், தபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்போது அஜித்தின் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மஞ்சு வாரியர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்திருந்தால் 23 ஆண்டுகளுக்கு முன்னரே அஜித் படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல நடிகையின் காரில் பறக்கும் படை சோதனை!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Popular actress car flying force test

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அந்த வழியாக தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் வந்துள்ளார். அப்போது அவர் வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதே சமயம் மஞ்சு வாரியரைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.