Skip to main content

"பெண்களை பார்த்து நான் ஆச்சரியப்பட்டது கிடையாது" - மணிரத்னம் 

Published on 22/05/2021 | Edited on 22/05/2021
cvsgsgsg

 

பெண் சாதனையாளர்களை கவுரவிக்க நான்காம் ஆண்டுக்கான சுயசக்தி விருதுகள் அறிவிப்பு நேற்று வெளியானது. பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் நேச்சுரல்ஸ், பிராண்ட் அவதார், எஸ்.எஸ்.வி.எம் இன்ஸ்டிடியூஷன்ஸ் மற்றும் சக்தி மசாலா ஆகியோர் இணைந்து 'Homepreneur Awards' ’சுயசக்தி விருதுகள்’ வழங்குகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டு செய்யும் பெண் தொழில்முனைவோர்களை கௌரவப்படுத்தும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் இந்த விருதுகள்’ வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழாவில் விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம், அழகு மற்றும் ஆரோக்கியம், கல்வி, உணவு மற்றும் பானங்கள், வீட்டுத் தேவை பொருட்களுக்கான சில்லறை வர்த்தகம், ஹெல்த்கேர், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, சமூக நலன் என பல்வேறு பிரிவிகளின்கீழ் பெண் தொழில்முனைவோர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. 

 

பல்வேறு துறை சார்ந்த பிரபல பெண்கள் அடங்கிய ஜூரி குழு விருது பெறுபவர்களைத் தேர்வு செய்கிறது. இந்நிலையில் நேற்று வீடியோ கான்பரன்சிங்கில் நடைபெற்ற விழாவில் இந்த ஆண்டுக்கான 'சுயசக்தி விருதுகள்’ அறிவிப்பும், விண்ணப்ப தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு விருதுக்கு தேர்வாகப் போகும் வெற்றியாளர்களை தேர்வு செய்யும் ஜூரி குழுவையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். சுயசக்தி விருதுகள் அறிவிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் ‘Homepreneurs Awards 2021’ அறிமுகப்படுத்தினார். அப்போது விருதுகள் பற்றி பேசிய மணிரத்னம், 

 

"பெண் சக்தி என்பது மிகவும் வலிமையானது. எனக்கு தெரிந்து பெண்கள் என்பவர்கள் பயனுள்ளவர்கள், விரும்ப்படக்கூடியவர்கள், பின்பற்றப்பட்ட வேண்டியவர்கள், போற்றப்பட்ட வேண்டியவர்கள் ஆவர். என் வாழ்வில் சாதித்த பெண்களை பார்த்து நான் ஆச்சரியப்பட்டது கிடையாது. சொல்லப்போனால் அவர்கள் பிறப்பிலேயே நம்மைவிட இன்னமும் திறமைசாலிகள். அப்படியாகப்பட்ட சாதனை பெண்களுக்கு இந்த மாதிரி நேரத்தில், இந்த மாதிரி விருதுகள் அறிவிக்கப்படுவதை அறியும்போது சந்தோஷமாக இருக்கிறது. நான் செய்யமுடியாத்தை எல்லாம் என் மனைவி செய்வதை பார்க்கும்போது அவரை போற்ற தோன்றுகிறது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதை செய்யக்கூடிய திறன் என் மனைவியிடம் உண்டு" என கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

”அவர் ரோடு போட்டுக்கொடுத்தால் நான் நல்லபடியாக வந்துவிடுவேன்” - மணிரத்னம் கலகல பேச்சு

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

Mani Ratnam

 

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.  

 

நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், “நான் பேச நினைத்ததையெல்லாம் பாலாஜி சக்திவேல் பேசிவிட்டார். இந்த விழாவிற்கு இவ்வளவு வாரியர்ஸை லிங்குசாமி அழைத்து வருவார் என்று எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் பொன்னியின் செல்வன் படத்திற்கான வார் சீன்ஸை இங்கு வைத்தே எடுத்திருப்பேன். ஹைதராபாத்வரை சென்று கஷ்டப்பட்டுவிட்டேன். லிங்குசாமி ரொம்பவும் பாசிட்டிவான மனிதர். அவர் மூலமாகத்தான் எனக்கு எல்லா இயக்குநர்களுடனும் தனிப்பட்ட அறிமுகம் கிடைத்தது. பொன்னியின் செல்வனை ஹைதராபாத்தில் ஷூட் பண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில் இந்தப் படத்தை லிங்குசாமியும் அங்கு ஷூட் பண்ணிக்கொண்டு இருந்தார். அவர் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டார். நாங்கள் மெதுவாக வந்துகொண்டு இருக்கிறோம். நீங்கள் ரோடு போட்டுக்கொடுத்தீர்கள் என்றால் நான் பின்னாடியே நல்லபடியாக வந்துவிடுவேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

ஓடிடியில் வெளியாகிறதா 'பொன்னியின் செல்வன்' ? விளக்கமளித்த படக்குழு

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

Ponniyin Selvan film to release theatres

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

 

இதனிடையே 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிவ ஆனந்த் பிரமாண்டமாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி முதலில் திரையரங்குகளில் வெளியாகும், அதன்பிறகு தான் ஒடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இப்படம் இந்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.