Skip to main content

சசிகலா புரொடக்ஷன்ஸ் நிறுவன துவக்க விழா

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

Launch of Sasikala Productions

 

தமிழ் திரையுலகில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ்  தயாரிப்பு நிறுவனம்.  ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கினுள் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் 'கா', கிஷோர் நடிப்பில் 'ட்ராமா' மற்றும் புதுமுகங்கள் நடிப்பில் 'லாகின்' படங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இப்படைப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இந்நிறுவனத்தின் துவக்க விழாவும் இன்று இனிதே நடைபெற்றது. 

 

இவ்விழாவில் சசிகலா புரொடக்ஷன்ஸ் சார்பில் சலீம்  பேசுகையில், "இங்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிறுவனத்தை புதிய நல்ல படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி" என்றார். 

 

“கா”  பட இயக்குநர் நாஞ்சில் பேசுகையில், " கா படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். இந்தப்படத்திற்கு நடிகர் சலீம் கௌஷல் மிகப்பெரும் உதவியாக இருந்தார். அவர் இப்போது இல்லாதது பெரிய வருத்தம். எனக்கு வாய்ப்பளித்த ஜான் மேக்ஸ் அவர்களுக்கும், படத்தை வெளியிடும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கும் நன்றி" என்றார். 

 

ட்ராமா இயக்குநர் அர்ஜூன் திருமலா  பேசுகையில், "தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லா படமும் எடுப்பது மிகவும் கஷ்டம் தான் ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் உள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி" என்றார்.

 

லாகின் திரைப்பட இயக்குநர் ராஜேஷ் வீரமணி பேசுகையில், "எங்கள் தயாரிப்பாளர் ஜேகே மற்றும் சசிகலா புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. 2 மணி நேரம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு கதையை உண்மையாக அர்ப்பணிப்புடன் சொல்லியுள்ளோம்" எனக் கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறனுடன் இணைந்த 'அறம்' பட இயக்குநர் - அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

aram movie director gopi nainar next movie announced

 

தமிழில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக வெற்றிமாறன் தயாரித்த 'அனல் மேலே பனித்துளி' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று (21.12.2022) ஆண்ட்ரியா தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

 

இதனைத் தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இப்படத்தை இயக்க வெற்றிமாறன் தயாரிக்கிறார். 'மனுசி' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'அறம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகும் 'மனுசி' படத்தை வெற்றிமாறன் தயாரிக்க ஆண்ட்ரியா நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

 

 

 

Next Story

தள்ளிப்போகும் பிசாசு 2 - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

pisasu 2 get postponed - latest information released

 

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாடலான 'நெஞ்சை கேளு' அண்மையில் வெளியானது.

 

இதனிடையே 'பிசாசு 2' படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பியதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழு சில காட்சிகளை நீக்கி யு/ஏ சான்றிதழ் வாங்க மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து விரைவில் படக்குழு விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.