Skip to main content

"ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்" - ரஜினியின் புகழ்பாடிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

kuldeep yadav meets rajinikanth

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி நேற்று நடந்த நிலையில் அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. மூன்றாவது போட்டி வருகிற 22ஆம் தேதி நடைபெறுகிறது.

 

இதனிடையே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று கண்டு ரசித்தார். இந்த நிலையில் ரஜினியை சந்தித்து பேசியதாக இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் நேற்று நடந்த போட்டியில் 8 ஓவர்களை வீசி 48 ரன்களை கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். 

 

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தனது 170வது படத்தில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

Next Story

33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாகும் நடிகை 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
shobana to pair with rajini in thalaivar 171 after 33 years

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

 

shobana to pair with rajini in thalaivar 171 after 33 years

இந்த நிலையில் இப்படத்தில் ஷோபனா நடிக்க, அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் தளபதி படத்திற்குப் பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.