Skip to main content

"எங்க அப்பாவுக்கும் அப்படித்தான்... " - அறக்கட்டளை நிகழ்வில் கார்த்தி பேச்சு

Published on 12/09/2022 | Edited on 13/09/2022

 

karthi speech at Sivakumar Educational & Charitable Trust Awards 2022

 

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 43-வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது கார்த்தி பேசுகையில், "என்னுடைய இரண்டு வயதிலிருந்து இந்த விழாவை பார்த்துக்கொண்டிருக்கிறேன். 1979-ல் அப்பா இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தார். அடுத்த ஆண்டிலிருந்து பரிசு கொடுக்க ஆரம்பித்தார்கள். இதற்காக அப்பா தந்து ஒரு படத்தின் முழு சம்பளத்தை வங்கியில் (fixed deposit) போட்டு அதிலிருந்து வருகிற வட்டி பணத்தை வைத்து பரிசு தொகையை கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ரூ.2,500 முதல் தொடங்கி 25-வது வருடம் முடியும் போது ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்திருந்தார்கள்.அதன்பிறகு அகரம் அறக்கட்டளை இந்த பரிசளிப்பு விழாவை தத்தெடுத்தது. 

 

இன்றைக்கு கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய் வரை மாணவர்களுக்கு பரிசு அளித்தி வருகிறோம். இங்கு உள்ள முக்கால்வாசி மாணவர்களுக்கு அப்பா கிடையாது என்று எல்லாரும் சொன்னார்கள். எங்க அப்பாக்கும் அப்படிதான். அவருக்கும் அப்பா கிடையாது. அம்மா தான் சிரமப்பட்டு படிக்க வச்சிருக்காங்க. மாதம் 80 ரூபாய், அந்த பணத்தை அனுப்புவதே பெரிய விஷயம். அப்பாவின் சொந்தக்காரர்களின் உதவி மூலமாக அவரும் கஷ்டப்பட்டு வந்தவர். அப்பா பெரிய கனவு மற்றும் உழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் அனேகமாக நாங்களும் கஷ்டப்பட்டு தான் இருந்திருப்போம். அதாவது ஊரில் இருந்திருப்போம் ஏதோ ஒரு மில் வேலைக்கு போயிட்டு இருந்திருப்போம். படிக்க வச்சிருக்க முடியுமா என தெரியாது. எனவே நான் இங்கு துவண்டுபோக மாட்டோம் நான் எழுந்து வருவேன் என நம்பிக்கை வைத்தால் வந்துரமுடியும் என்பதற்கு அப்பாதான் பெரிய உதாரணம்.

 

அவர் ஒவ்வொரு தடவையும் எங்களுக்கு சொல்லிக்கொடுப்பது இதுதான். ஒரு இரயில் நிலையத்திற்கு சென்றால் கூட முன்னதாக போர்ட்டர்கள் (பெட்டி தூக்குபவர்கள்) இருப்பார்கள். இப்போதெல்லாம் இரயில் நிலையத்திற்கு போவதே அரிதாகிவிட்ட்டது. ஒரு பெட்டி தூக்கிட்டு போனால் 50 ரூபாய் கேப்பார்கள். எனக்கு, 20 ரூபாய் கேட்கிற இடத்தில் 50 ரூபாய் கேட்குகிறார்களே என்று ஆச்சிரியமாக இருக்கும். ஆனால் அப்பா, பரவாயில்லை வா என்று சொல்லி 100 ரூபாய் கொடுப்பார். நான் ஏன் அதிகமாக கொடுக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அப்பா, அவரு 100 ரூபாய் வச்சி என்ன வீடா கட்டிடுவார். இந்த ஒரு நாள் வேலை கிடைப்பதே அவருக்கு பெரிய விஷயம். 100 ரூபாய் கூடுதலாக கிடைத்தால் குழந்தைகளுக்கு ஸ்வீட் அல்லது சாப்பாடு வாங்கி கொடுப்பார் என்று சொன்னார்.

 

இது போன்ற சிந்தனைகளை சின்ன வயதிலிருந்தே வளர்த்தது அப்பா தான். அந்த வகையில் பணம் சந்தோஷமே கொடுக்காது என சொல்வார்கள். அது பொய். அடுத்தவங்களுக்கு கொடுத்தா ரொம்ப சந்தோசம் கொடுக்கும். அது போல் அடுத்தவங்களுக்கு கொடுக்கறப்போ சந்தோசம் நிறைய இருக்கு. நம்மிடம் இருந்து மற்றவர்களிடம் போகும் போது அந்த பணத்தின் மதிப்பு ரொம்ப அதிகமாகிறது என சிறுவயதில் சொல்லி கொடுப்பார்" என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

மீண்டும் பயணத்திற்கு அழைத்துப் போகும் கார்த்தி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இப்படப் பாடல்கள் இடம்பெற்று வருகிறது. 

இப்படத்தின் வெற்றி கார்த்தி மற்றும் தமன்னாவின் சினிமா கரியரில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. மேலும் இருவரின் காம்போ வெற்றி கூட்டணி என பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க லிங்குசாமி கடந்த ஆண்டு முயற்சி எடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை என அவரது தந்தை மற்றும் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்திருந்தார். பின்பு பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து ஹீரோவாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது.  

karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

இப்படி பையா 2 படம் பற்றி தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில் அண்மைக் காலமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில் பையா படம் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி போஸ்டரை வெளியிட்ட படக்குழு பையா பட ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி ரீ ரிலீஸாவதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதால், ஹிட்டடித்த நிறைய பழைய படங்கள் ரீ ரிலிஸாகி வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது பையாவும் இணைந்துள்ளது.

இப்படம் வெளியான சமயத்தில் பயணத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்தது ரசிக்கும்படியாக அமைந்ததாக ரசிகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்தப் பயணத்திற்கு தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.