Skip to main content

"எங்கள் கோரிக்கையை கவனிக்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்" - கார்த்தி வேண்டுகோள்!

Published on 02/07/2021 | Edited on 03/07/2021

 

yrhyrherher

 

திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 மசோதாவை கடந்த ஜூன் 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த மசோதாவுக்குப் பல்வேறு திரை பிரபலங்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், சுமார் 1,400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்கள். மேலும் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளத்தில் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், ஜூலை 2ஆம் தேதி (நேற்று) ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்யக் கடைசி நாளாகும். இதனால் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது பல்வேறு திரை பிரபலங்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். அதில்... 

 

"எந்த நேரத்திலும் ஒரு திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய மத்திய அரசை அனுமதிக்கும் ஒளிப்பதிவு (திருத்த) மசோதா 2021 (வரைவு) ஒவ்வொரு படத்திற்கும் பாதுகாப்பின்மை, வணிக வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் மற்றும் தொழில்துறையை பாதிக்கும் வகையாக அமைந்துள்ளது. எனவே அத்தகைய விதிகள் கைவிடப்பட வேண்டும். திருட்டுத்தனமாக படத்தை வெளியிடுவதை தடுப்பதற்கான வரைவு நடவடிக்கைகள் இதில் இருப்பது பாராட்டத்தக்கவை என்றாலும், நம்மைப் போன்ற ஒரு நாகரிக சமுதாயத்தில் கருத்துச் சுதந்திரத்தை நெரிப்பது என்பது மிகவும் விரும்பத்தகாதது. எனவே எங்கள் கோரிக்கையை கவனிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
mari selvaraj next with karthi

மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்பட பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படம் 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. இப்போது, வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரஜினியின் 172வது படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாரி செல்வராஜ் கார்த்தியுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கார்த்தி தற்போது நலன் குமாரசாமியுடன் ஒரு படம், பிரேம் குமாருடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். இதில் பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்றது. நலன் குமாரசாமி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.  

Next Story

கார்த்தியின் அடுத்த படக்குழு வெளியிட்ட அப்டேட்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
karthi 26 movie update

கார்த்தி தற்போது பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். கார்த்தியின் 27வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்தது.

இதனிடையே, நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கார்த்தியின் 26வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பூஜையில் சூர்யா, சிவகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கவுதம் கார்த்திக்கும் கலந்து கொண்டுள்ளார். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.