Skip to main content

“மதம் பிடித்த யானை போல் கரிகாலன் வந்து கொண்டிருப்பான்” - வெளியானது பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

Published on 29/03/2023 | Edited on 06/04/2023

 

"Karikalan will come like a religious elephant"- Ponni's Selvan 2 trailer released

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இதனால் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'அக நக' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

'பொன்னியின் செல்வன் 2' படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 6 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் ட்ரெய்லர் இரவு 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது.

 

“அருள்மொழியை கடல் விழுங்கிவிட்டதாம்..” என்கிற வார்த்தைகளோடு ஆரம்பிக்கும் ட்ரெய்லர் பரபரவென செல்கிறது. சோழ நாட்டை மதுராந்தகருக்கும் கரிகாலருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று பெரியபழுவேட்டையரான சரத்குமார் சொல்ல, “பெற்ற தாயின் ஒரு மார்பை வெட்டி எடுத்துக்கொள் என்கிறீர்கள்” என, கரிகாலரான விக்ரம் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். முதல் பாகத்தில் அருள்மொழிவர்மனை காப்பாற்றிய ஊமை அரசி தான் என்று அருள்மொழிவர்மனே குந்தவையிடம் சொல்வதும், ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளுடனும் ட்ரெய்லர் அமைந்துள்ளது. இரண்டாம் பாகத்தில் நந்தினியின் வாழ்வில் நடந்த கதைகள் அவர் சோழ நாட்டை பழிவாங்கத் துடிப்பதன் காரணமும் விளக்கப்பட்டு இருக்கும் என நம்பலாம்.  

 

முதல் பாகத்தில் உலகமெங்கும் ஹிட்டடித்த பொன்னியின் செல்வன் பின்னணி இசையை ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே இசைத்து ஏ.ஆர்.ரஹ்மான் படத்தை மீதான ஆர்வத்தை எகிற வைக்கிறார். ஏப்ரல் 28 வரை தமிழ் சினிமா ரசிகர்களை ஹைப்பில் வைக்க பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் தவறாது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"மாற்றுக்கருத்து என்பது எல்லா படங்களுக்கும் இருக்கும்" - பொன்னியின் செல்வன் 2 குறித்து கமல்ஹாசன்

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

kamal about ponniyin selvan 2

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த 28.04.2023 அன்று வெளியான படம் பொன்னியின் செல்வன் 2. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 4 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. 

 

இந்த நிலையில் இப்படத்தை மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோரோடு இணைந்து பார்த்துள்ளார் கமல்ஹாசன். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நான் ஒரு சினிமாவின் ரசிகன். அது தான் என்னுடைய முதல் அடையாளம். சினிமா கலைஞன் என்பது இரண்டாவது அடையாளம். என்னுடைய முதல் ஆசை எல்லாம் சினிமாவை பார்க்க வேண்டும். அது நான் நடித்த படமென்றாலும் சரி, மற்றவர்கள் நடித்த படங்கள் என்றாலும் சரி. அது நல்ல சினிமாவாக இருக்க வேண்டும்.

 

அத்தகைய சினிமாவாக அமைந்திருக்கிறது பொன்னியின் செல்வன் 2. இதை ஒரே படமாக தான் நான் பார்க்கிறேன். ஏனென்றால் இரண்டு பாகங்களையும் பார்க்கும் போது ஒரு காவியம் என்று தான் சொல்ல வேண்டும். கருத்து வித்தியாசங்கள் மற்றும் மாற்றுக்கருத்து என்பது எல்லா படங்களுக்கும் இருக்கும். அது இப்படத்தில் இருந்தாலும் கூட மக்கள் இப்படத்தை ஆதரிக்கிறார்கள் என்பதை செய்திகள் மூலம் அறிகிறேன். 

 

தமிழ் சினிமாவின் பெருமையும் தமிழரின் பெருமையும் போற்றும் இத்தகைய படத்தை எடுக்க வேண்டும் என்பதற்கே தனி துணிச்சல் வேண்டும். அதை எடுத்து முடித்திருக்கும் முக்கியமான வீரன் மணிரத்னம். அவருக்கு உறுதுணையாக தோள் கொடுத்து வாள் கொடுத்து உதவியிருக்கிறது அந்த நட்சத்திர பட்டாளம். இது போன்று பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.

 

நல்ல ஒரு பொற்காலம் துவங்கியிருப்பதாக நினைக்கிறேன். அதை நீங்களும் அவ்வழியே நடத்திச் செல்ல வேண்டும். படம் முடியும் போது எண்ட் கார்டில் வரும் பெயர்களைப் பார்த்தேன். ஆயிரக்கணக்கானோர் பாடுபட்டிருக்கிறார்கள். அதை பார்க்கும் போது தான் முழு இந்தியாவும் நம் கண் முன்னே நிற்கிறது. வட நாடு, தென்னாடு, தாய்லாந்து மற்றும் பல நாடுகளில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் பணியாற்றியுள்ளார்கள். இது சாதாரணமான விஷயம் அல்ல. இப்படம் போற்றப்பட வேண்டிய படம்" என்றார். 

 

 

Next Story

“பொன்னியின் செல்வன் எங்கள் இனத்தின் வரலாறு கிடையாது” - சீமான் 

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

Seeman addressed press after may 1 celebration

 

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

 

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “அண்ணாமலை தன்னை தானே கலைஞர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். என சொல்லி அடையாளப்படுத்திக்கொள்கிறார். பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளில் தலைவர் என சொல்ல முடியாது. ஏறக்குறையை ஒருவரை இரண்டுவருடங்கள் வைப்பார்கள். பிறகு வேறு ஒரு நபரை தலைவராக்குவார்கள். பொன் ராதாகிருஷ்ணன் எங்கே? அவர் கட்சிக்காக உழைக்காததா. தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசு என காங்கிரஸுக்கு பல தலைவர்கள். இந்திய ஒன்றிய கட்சிகள் எந்த மாநிலத்திலும் நிரந்தரமாக ஒரு தலைவரை வைக்காது. அதுவெல்லாம் பெருந்தலைவரோடு முடிந்துவிட்டது. அதிகபட்சம் அண்ணாமலையை இந்த பாராளுமன்றத் தேர்தல் வரை இழுத்துவருவார்கள். அதன் பின் அதில் ஏதும் முன்னப்பின்ன ஆனதென்றால் அவரை மாற்றிவிட்டு புதியதாக ஒரு தலைவரை கொண்டுவருவார்கள்” என்றார். 

 

தொடர்ந்து செய்தியாளர்கள், ‘ஆளுநர் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவரை ஆடையெல்லாம் கலைத்து சோதனை செய்தார்கள்’ என கேட்டனர். அதற்கு பதில் அளித்த சீமான், “இது மிகவும் கொடுமையானது. மானுட உரிமைக்கே எதிரானது. இன்னும் சிறை கூடங்களில் இவையெல்லாம் இருக்கிறது. நாங்கள் எல்லாம் சிறைக்கு செல்லும்போது, உடைகளை எல்லாம் கலைத்து நிர்வாணப்படுத்தி சோதித்து தான் அனுப்பினார்கள். நான் ‘அப்படியே உள்ளே போகிறேன்’ என்றேன். மக்களுக்காக போராடுபவர்களை ஏதோ சர்வதேச பயங்கரவாதி போல் நிர்வாணப்படுத்தி சோதிப்பார்கள்” என்றார். 

 

மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் தமிழர்களின் வரலாற்றை மிகவும் இழிவாக எடுத்திருக்கிறார்கள். ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்துகொள்வதுபோல் காட்சி படுத்தியிருக்கிறார்கள் என விமர்சனங்கள் எழுகிறதே’ என்று கேள்வி எழுப்பினர். 

 

அதற்கு பதில அளித்த சீமான், “இதை இவ்வளவு ஆய்வு செய்யவேண்டியது இல்லை. அது ஒரு புதினம். பொன்னியின் செல்வன் எங்கள் இனத்தின் வரலாறு கிடையாது. கற்பனையில் அதனை எழுதும்போது அதனை திரிவுடன் தான் எழுதினார்” என்றார்.