Skip to main content

ராஜராஜ சோழன் இந்துவா? சினிமாவுக்கு வந்தோமா, வேலைய பார்த்தோமான்னு இருங்க.. - கஞ்சா கருப்பு காட்டம் 

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

kanja karupu talk about rajaraja chozhan

 

ஓங்காரம் படத்தின்  இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன், தயாரிப்பாளர் கே.ராஜன், கஞ்சா கருப்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இவ்விழாவில் பேசிய கஞ்சா கருப்பு, “ஒரு நாள் தயாரிப்பாளர்களாக இருந்து பாருங்கள், அவர்களுடைய வேதனை என்னவென்று உங்களுக்கு தெரியும். திடீர்ன்னு ஆப்பிள் கேட்கிறது, ஆரஞ்சு கேட்கிறது.. அங்க போய் சிக்கன் வாங்கிட்டுவான்னு சொல்லுவாங்க. சாப்பாடு தண்ணி இல்லாமல் நான் நடிக்க தயார் நீங்கள் நடிப்பீர்களா. கேமரா முன்னாடிதான் நான் சாகவேண்டும் என்று இன்றுவரை நினைத்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் சினிமாவுக்குத்தான் எனது மூச்சு, அவ்வளவு கஷ்டப்பட்டு, என் வீட்டை விற்று, காரை விற்று படம் தயாரித்தேன். ஆனால் கடைசியில் அந்த படம் பெருசா ஓடவில்லை. உடனே எங்க அம்மாகிட்ட போய் இப்படியெல்லாம் நடந்து விட்டது என்றேன். அதற்கு எங்க அம்மா, 'மகனே நீ பள்ளி கூடத்துக்கு போய் படிக்கல, அதுக்கு பதிலா இவ்வளவு காசு செலவழித்து உன் வாழ்க்கை படிச்சுருக்கன்னு நெனச்சுக்கோ, அடுத்த படத்துல விட்டதா புடிச்சிடலாம்'னு ஆறுதல்  சொன்னாங்க. போதும் இதோட நிறுத்திக்கலாம், ஏன்னா என்னுடைய சொந்த பிரச்சனையை பற்றி பேசினோம் என்றால் எக்மோரில் இருந்து மதுரை வரைக்கும் பேசலாம்.

 

சினிமா துறையில் ஏதாவது சொன்னோம் என்றால், அது பெரும் சர்ச்சையாக மாறி விடுகிறது. அதனால் சரியாக பேச வேண்டும். அதை விட்டுவிட்டு ராஜராஜ சோழன் இந்துவா... இல்லையா என பேசி வருகிறார்கள். இதெல்லாம் நமக்கு தேவையா, சினிமாவுக்கு வந்தோமா.. வேலைய பார்த்தோமா.. 10 வீட்டை வாங்குனோமா என்று இல்லாமல் எதற்கு தேவையில்லாத பேச்சு" என கூறினார்.

 

இறுதியாக படத்தின் கதாநாயகியை பற்றி பேசிய அவர், அந்த நடிகை ஒரு லட்சம் கொடுத்தால்தான் இசை வெளியிட்டு விழாவிற்கு வருவேன்னு சொன்னார்களாம். ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரியவில்லை. விழாவிற்கு வந்திருந்தாள் அவருக்கு ப்ரோமோஷன்தானே என்று சொல்லிவிட்டு முகம் சுளிக்கும் வகையான வார்த்தையால்  வசைபாடினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது கொஞ்சம் சர்ச்சையான விஷயம்” - வெளிப்படையாகப் பேசிய வெற்றிமாறன்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vettrimaaran speech in kalvan audio launch

ஜி.வி பிரகாஷ், பாராதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி.ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. மேலும் கடந்த வருட கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படம் வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் ட்ரைலர் மற்றும் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறனும் கலந்து கொண்டார் . அவர் பேசுகையில், “இந்த படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் இருக்கு. விடுதலை படத்தில் பாராதிராஜா சார் நடிக்க வேண்டும் என அவருக்கு ஹேரெல்லாம் ஷார்ட்டா கட் பண்ணிட்டு லுக் டெஸ்ட் எடுத்தேன். அப்புறம் லொகேஷன் பார்த்துட்டு, அந்த இடம் ரொம்ப குளிரென்றதால அவருக்கு சரியா வராது என சொன்னேன். என்னடா விளையாடுறியா, முடியெல்லாம் இப்புடி வெட்டிவிட்டுட்டு ஒத்துக்கவே மாட்டேன் என சொல்லிவிட்டார். என்ன ஆனாலும் நான் பண்றேன் என்றார். அப்புறம் நான் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன். 

கொஞ்ச நாள் கழிச்சு, டேய், என்ன வேணான்னு சொன்னில்ல, இப்ப இதே கெட்டப்புல என்னை வைச்சி ஒருத்தன் படமெடுக்க போறான் என சொன்னார். அது தான் இந்த படம். நாங்க விடுதலை படம் ஷூட் பண்ண இடத்துல தான் இதே படமும் ஷூட் பண்ணாங்க. பாராதிராஜா சார், ஸ்க்ரீனில் இருக்கும் ஒரு தருணம் கூட ஃபேக்கானதா இருக்காது. அந்த மாதிரி சின்சியரான நடிகர்கள் குறைவாகவே இருக்காங்க. அதனால் தான் அவரை எல்லாருக்கும் பிடிக்குது. எந்த நொடியுமே நடிக்க முயற்சி பண்ணாமல், அந்த இடத்தில் அந்த கதாபாத்திரமாகவே இருப்பதால் தான் அந்த உணர்வை நம்முள் ஏற்படுத்த முடியுது.

இன்னொரு விஷயம். இது கொஞ்சம் சர்ச்சையானது. யானைய வைச்சு எடுத்தாலும் டைனோசரை வைச்சு எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும்” என்றார். 

Next Story

“என் அம்மாவின் அன்பு மாதிரி...” - இளையராஜா இசை குறித்து வெற்றிமாறன்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
vetrimaaran speech in ilaiyaraaja biopic event

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்த நிலையில், மேலும் தனுஷ், இளையராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எனக்கு ராஜா சார் இசையை எப்போது கேட்டாலும் ஒன்னுதான் தோணும். அது எங்க அம்மாவுடைய அன்பு மாதிரி. நிலையானது. எப்போதுமே மாறாது. வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்தாலும் அவரின் இசை ஏற்படுத்துகிற உணர்வு எப்போதுமே அப்படியே தான் இருந்துருக்கு. அவருடன் வேலை பார்ப்பது ரொம்ப இலகுவாக இருக்கும். சமமாக நம்மை நடத்துவார்.

அவர் முதல் படம் பண்ணும்போது எனக்கு ஒரு வயசு. ஆனால் என்னோடு அவர் பேசும்போது, படம் பார்த்துவிட்டு பரிந்துரை சொல்லலாமா எனக் கேட்டார். அவர் அப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆனால் கேட்டார். அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு இயக்குநரை அவர் வைத்து வேலை பார்ப்பார். அவர் இசையமைப்பதை பார்த்தால், இசையமைப்பது ரொம்ப ஈஸி என தோணும். சிரமமே இல்லாமல் வேலை பார்ப்பார். என்னுடைய பார்வையில் அவர் ஒரு மியூசிஷியன் என்பதை விட மெஜிசியன் தான். அவருடைய வாழ்க்கையை படமாக எடுப்பது நம் நாட்டினுடைய பெரிய ஆவணம்.

அவர் இப்போது வேலை பார்த்து வருகிற வாழ்க்கை, இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னால் இருக்கும் 40 வருட வாழ்க்கை, இவ்வளவு காலங்களையும் ஒரு நாட்டினுடைய வரலாற்று பதிவாக அவருடைய இசையில் நாம் சேர்க்க வேண்டும். எல்லாருடைய வாழ்க்கையிலும் தனிப்பட்ட முறையில் அவருடைய இசை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை படமாக உருவாகும் போது தமிழ் இசை கேட்டு வளர்ந்தவர்கள் அத்தனை பேருடைய படமாக இப்படம் இருக்கும். இந்த படத்தில் ஏதாவது ஒரு விதத்தில் நான் பங்காற்ற வேண்டும் என விருப்பப்படுகிறேன். அருணுக்கு இப்படம் ஒரு கிஃப்ட். தனுஷிற்கு மற்றுமொரு சவால். எந்த சவாலை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக தனுஷ் தாண்டி வருவார். இந்த படத்தில் ராஜா சாருடைய இசையை கேட்க ஆர்வமாக இருக்கேன்” என்றார்.