Skip to main content

"நீங்கள் வில்லனாக இருப்பதால்தான்" -நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு கங்கனா!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
kangana office

 

 

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் பல கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். அவர் தெரிவித்த சில கருத்துகளால், மஹாராஷ்டிரா அரசுக்கும் அவருக்கும் மோதல் வெடித்தது. கங்கனா ஒரு கட்டத்தில்,  மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல் மாறியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

 

இந்நிலையில் மும்பை மாநகராட்சி விதிகளை மீறி கங்கனா அலுவலகம் கட்டியுள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்தது. மேலும், இது தொடர்பாக அவர் அலுவலக வாசலில் நோட்டீசும் ஒட்டப்பட்டது. இதன்பின் அவரது அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள்  புல்டோசரை கொண்டு இடித்து தள்ளினர் . இதனால் ஆத்திரமடைந்த கங்கனா, அவரது அலுவலகத்தை இடித்து தள்ளும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, சிவசேனா அரசை கடுமையாக விமர்சித்ததோடு, தன் அலுவலகம் இடிக்கப்படுவது சட்டவிரோதம் எனவும், அதை நிறுத்த உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, கங்கனா அலுவலகத்தை இடிக்க, இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம். 

 

மும்பை மாநகராட்சி, கங்கனா, தனது அலுவலகத்தில் 14 கட்டட விதிமுறைகளை மீறியதாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. இதற்கு பதில்மனு தாக்கல்  செய்த கங்கனா ரனாவத், தன் அலுவலகத்தை இடித்தது சட்டவிரோதம் என்றும், அதற்கு நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "மும்பை மாநகராட்சி, குடிமக்களின் உரிமைக்கு எதிரான, தவறான அணுகுமுறையை கையாண்டுள்ளது. கங்கனாவின் அலுவலகத்தை இடித்தது, அவருக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்துடனேயே செய்யப்பட்டது" என கூறிய மும்பை உயர்நீதிமன்றம், கங்கனாவின் அலுவலகத்தை இடிக்க, மும்பை மாநகராட்சியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்துள்ளது. மேலும் கங்கனா  நஷ்ட ஈடு கோரியது சட்டப்படி செல்லும் என கூறிய நீதிமன்றம், அலுவலகத்தை இடித்த சேதத்தை கணக்கிட, மதிப்பீட்டாளர் நியம்பிக்கப்படுவர் எனவும், அவர் 2021 மார்ச் மாதத்திற்குள், நஷ்ட ஈடு தொடர்பாக முடிவெடுப்பார் எனவும் தனது உத்தரவில் கூறியுள்ளது.

 

இத்தீர்ப்பினை வரவேற்றுள்ள கங்கனா, இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "ஒரு தனிப்பட்ட நபர், அரசாங்கத்தை எதிர்த்து நின்று வென்றால், அது அத்தனிநபரின் வெற்றியல்ல. ஜனநாயகத்தின் வெற்றி. எனக்கு தைரியம் அளித்தவர்களுக்கு நன்றி. அதேபோல், எனது கனவுகள் உடைந்தபோது சிரித்தவர்களுக்கும் நன்றி. நீங்கள் வில்லனாக இருப்பதால்தான், நான் ஹீரோவாக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

சர்ச்சையான பேச்சு - ஆதாரத்தை வெளியிட்ட கங்கனா

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
kangana ranaut explained subhas chandra bose issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த நிலையில் இந்தியாவின் முதல் பிரதமர் குறித்து பேசியது சர்ச்சையானது. அவர் பேசியதாவது, “எனக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்துங்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.  

1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றிருந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் என கங்கனா கூறியிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி கங்கனாவை ஆதரித்து பா.ஜ.கவினரும் எதிராக காங்கிரஸை சார்ந்தவர்களும் மாறி மாறி கருத்து பகிர்ந்து வந்தனர். 

இந்த நிலையில் இந்த சர்சைக்கு ஆதாரமாக ஒரு பிரபல ஊடகத்தின் செய்தி குறிப்பை பகிர்ந்துள்ளார் கங்கனா. அந்த செய்தி குறிப்பில், “நேதாஜி என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர், அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் (சுதந்திர இந்தியா) என்ற அரசை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரின் போது சுபாஷ் சந்திர போஸ் தன்னைப் பிரதமர், மாநிலத் தலைவர் மற்றும் போர் அமைச்சராக அறிவித்தார்.

மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தவர் கேப்டன் டாக்டர் லட்சுமி சுவாமிநாதன். இந்திய தேசிய ராணுவத்திற்காக போராடும் பெண் வீரர்களின் படையான ராணி ஜான்சி படைப்பிரிவுக்கும் அவர் தலைமை தாங்கினார். ராணி ஜான்சி படைப்பிரிவு ஆசியாவிலேயே முதல் பெண்கள் மட்டும் போர் படைப்பிரிவு ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.