Skip to main content

அம்மா புகைப்படத்திற்கு முன்னால் நின்று தேவருக்கு எம்.ஜி.ஆர் பண்ணிக்கொடுத்த சத்தியம்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

mgr

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நீண்டகாலம் நெருங்கிய நண்பர்களாக இருந்து சிறு மனஸ்தாபம் காரணமாக நட்பை முறித்துக்கொண்ட எம்.ஜி.ஆரும் சாண்டோ சின்னப்பதேவரும் ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எவ்வாறு இணைந்தனர் என்பது குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"எம்.ஜி.ஆர், குண்டுமணி என்பவரை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சில படங்களில்கூட அவரைப் பார்த்திருப்போம். அவரை நாடகங்களிலும் எம்.ஜி.ஆர் நடிக்க வைப்பார். ஒருமுறை கும்பகோணத்தில் நடந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரும் குண்டுமணியும் இணைந்து நடித்தனர். உடல் முழுவதும் எண்ணெய் தடவிக்கொண்டு எம்.ஜி.ஆருடன் குண்டுமணி சண்டையிடுவது மாதிரியான காட்சியில், குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கி அந்தப் பக்கத்தில் எறிவதுபோல எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும். அந்தக் காட்சிக்காக குண்டுமணியை எம்.ஜி.ஆர் தூக்கும்போது எண்ணெய் பிசுபிசுப்பு காரணமாக எம்.ஜி.ஆர் கைநழுவிவிடுகிறது. குண்டுமணி கீழே விழவிருப்பதை நொடி நேரத்தில் சுதாரித்த எம்.ஜி.ஆர், தன்னுடைய காலைக் கொடுத்து தடுக்க முற்படுகிறார். எம்.ஜி.ஆர் காலில் குண்டுமணி விழுந்ததால் எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டுவிடுகிறது.

 

கால் முறிந்துவிட்டது... எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று பத்திரிகைகள் எல்லாம் எழுதத் தொடங்கிவிட்டன. அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் பணத்தைத் திரும்பிக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்தான் எம்.ஜி.ஆருக்கு வைத்தியம் பார்த்தார். பத்து நாட்களில் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். மூன்று மாதத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அளவிற்கு குணமடைந்துவிட்டார். குணமடைந்தவுடனேயே எம்.ஜி.ஆர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா... நேராக வாகினி ஸ்டூடியோ சென்று குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கி ஒரு புகைப்படம் எடுத்தார். நான் குணமாகிவிட்டேன்... என்னால நடிக்க முடியாதுன்னு சொன்ன பத்திரிகைக்கு எல்லாம் இதை அனுப்பிவிடுங்கடா என்றார். அந்தப் புகைப்படமும் பிறகு பத்திரிகையில் வெளியாகி பெரிய அளவில் பிரபலமானது.  

 

வாகினி ஸ்டூடியோ வாசலில் குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு எம்.ஜி.ஆர் நிற்கையில், சாண்டோ சின்னப்பத்தேவர் தன்னுடைய படத்திற்காக பாடல் ரெக்கார்டிங் செய்துவிட்டு வெளியே வருகிறார். தேவரைப்  பார்த்ததும், ‘அண்ணே...’ என எம்.ஜி.ஆர் கூப்பிட, பதிலுக்கு ‘ஏ.. முருகா’ என வந்து எம்.ஜி.ஆரை தேவர் கட்டிப்பிடித்துவிடுகிறார். இருவரது கண்களுமே கலங்கிவிட்டன. ஏழு வருடங்களுக்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்கின்றனர். கால் முறிந்தது பற்றி தேவர் எம்.ஜி.ஆரிடம் கேட்க, தேவரின் படத்தயாரிப்பு குறித்து எம்.ஜி.ஆர் கேட்க என இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர். தன்னுடைய படத்திற்காக பாடல் பதிவு வேலை நடப்பதாக எம்.ஜி.ஆரிடம் தேவர் கூறினார். நான் அந்தப் பாட்டைக் கேட்கலாமா என எம்.ஜி.ஆர் கேட்க, ‘உனக்கு இல்லாமலா முருகா...’ எனக் கூறி ஸ்டூடியோ உள்ளே அழைத்துச் சென்று, பதிவுசெய்த நான்கு பாடல்களையும் போட்டுக் காண்பிக்கிறார். பாடல்கள் அற்புதமாக உள்ளன எனப் பாராட்டிய எம்.ஜி.ஆர், ஹீரோ யார் என்று கேட்டுள்ளார். தனக்கு தொழில் தற்போது நலிவடைந்துவிட்டது என ஆதங்கப்பட்ட தேவர், கிடைக்குற நடிகர்களை வைத்து படம் எடுப்பதாகக் கூறியுள்ளார். ‘ஏன்... நான் இல்லையா’ என எம்.ஜி.ஆர் கேட்க, தேவர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

 

தேவரை கையோடு வீட்டிற்கு அழைத்துச்சென்ற எம்.ஜி.ஆர், தன்னுடைய அம்மா புகைப்படத்தின் முன் நிறுத்துகிறார். ‘சத்தியா அம்மா மேல சத்தியம்மா சொல்றேன்ணா... இனி வருஷத்துக்கு ரெண்டு படம் உங்களுக்கு நான் நடிச்சுக்கொடுக்கிறேன்... கதை, வசனம் எதுலயும் நான் தலையிடமாட்டேன்’ என சத்தியம் பண்ணிக் கொடுக்கிறார். அதேபோல, நான் தொழில்பண்ணுகிற இடத்தில் தம்பி இருக்கக் கூடாது... தம்பி என்று சிவாஜியை குறிப்பிடுகிறார். ‘நான் நடிக்கும்வரை சிவாஜியை வைத்து படம் எடுக்கமாட்டேன் என நீங்களும் சத்தியம் பண்ணிக்கொடுங்கள்’ என்கிறார். தேவரும் சத்தியம் பண்ணிக்கொடுக்கிறார். தேவர் மிகப்பெரிய சிவாஜி ரசிகர்; எம்.ஜி.ஆருக்கு பண்ணிக்கொடுத்த சத்தியத்திற்காக சிவாஜியை வைத்து அவர் படம் எடுக்கவேயில்லை. பண்ணிக்கொடுத்த சத்தியத்திற்காக எம்.ஜி.ஆரும் 16 படங்கள் நடித்துக்கொடுத்து தேவரை மிகப்பெரிய கோடீஸ்வரனாக்கினார்".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஆர்.எம்.வீரப்பனுடனான அனுபவங்கள் - ரஜினி, கமல் உருக்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
rajini kamal about rm veerappan

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், அதிமுக தனி அணி உருவாகக் காரணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்கரான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், நக்கீரன் ஆசிரியர், இளையராஜா, பாரதிராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் வீரப்பன் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். 

ரஜினி பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேரும், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்.எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின்னால் போனவர் இல்லை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் வீரப்பனுக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் இப்போது இல்லை என்பது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்றார். 

கமல் பேசுகையில், “ஆர்.எம் வீரப்பனை சிறுவயதில் கலையுலகத்திலும் பின்பு அரசியல் உலகத்திற்கு அவர் சென்ற போதும், உயர்ந்த ஒரு உருவமாகத் தான் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு எம்.ஜி.ஆர் நடித்த அதே கம்பெனியில் நானும் வேலை செய்வேன் என நினைத்தது கிடையாது. அவருடைய பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமும் ஞானமும் எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. திரையுலகத்திலும், அரசியலிலும் அவர் மூதறிஞர். எம்.ஜி.ஆரின் வலது கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமல் என்றும் அவர் நினைவாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்” என்றார். ரஜினி, கமல் இருவரும் உருக்கமுடன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.