Skip to main content

சித்ரா தேவிப்ரியாவுக்காக வருத்தப்படுறேன் - காஜல் அகர்வால்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

 KajalAgarwal interview

 

விரைவில் வெளிவரவிருக்கும் 'கோஸ்டி' படத்தின் நாயகி காஜல் அகர்வாலை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் தனது திரையுலக அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

 

இந்த நிலையில் நான் இருப்பதற்குக் காரணம் கடவுளின் ஆசி. என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், ரசிகர்கள் அனைவருடைய அன்பும் என்னை இன்னும் அதிகம் பணியாற்றத் தூண்டுகிறது. சென்னை எனக்கு மிகவும் பிடித்த இடம். இது என்னுடைய இரண்டாவது தாய் வீடு. கலாச்சாரம், உணவு, மக்கள் என்று இங்குள்ள அனைத்தும் எனக்குப் பிடிக்கும். இயக்குநர் கல்யாண் மிகவும் தெளிவான சிந்தனையுடையவர். இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.

 

முதல் படமான லட்சுமி படத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. அப்போது எனக்கு மொழி உட்பட தென்னிந்தியா குறித்து எதுவும் தெரியாது. மகதீரா படத்தில் ராஜமவுலி சாரோடு பணியாற்றியது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. துப்பாக்கி படம் எனக்கு மிகவும் பிடித்த படம். விஜய் சார், முருகதாஸ் சாரோடு அந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். துப்பாக்கி இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நிச்சயம் நான் நடிப்பேன். அஜித் சார் அற்புதமான மனிதர். அவருடைய சமையலை ஒருநாள் நான் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியன் 2 படத்தில் கமல் சார், ஷங்கர் சாரோடு பணியாற்றி வருகிறேன். ஷங்கர் சார் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்தது அவருடைய உழைப்பால் தான் என்பதை நேரில் பார்த்து வியந்து வருகிறேன். கமல் சார் ஒரு லெஜன்ட்.

 

சமந்தா, ரகுல், தமன்னா ஆகியோர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள். சினிமாவுக்கும் குடும்பத்துக்கும் ஒரு சேர நேரம் செலவிடுவது சவாலான காரியம் தான். ஆனால் இரண்டையும் ஒருவர் விரும்பினால் அது நிச்சயம் சாத்தியம். நான் வாழ்க்கையில் முயற்சி செய்த பெரும்பாலான விஷயங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் வரும் சித்ரா தேவிப்ரியாவுக்கு நடந்தது மாதிரி எனக்கு ஏமாற்றங்கள் நடந்ததில்லை. பாவம் அந்த கேரக்டர். அதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.