Skip to main content
Breaking News
Breaking

"என் பட டைட்டில் இதுதான் என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள்'' - ஜனநாதன்

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

விஜய்சேதுபதி - ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்க, இயக்குநர் ஜனநாதன் 'லாபம்' படத்தை அரசியலும், கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்ட நிலையில் அந்த கட்டடத்தை செட்டாக போடாமல் உண்மையான கட்டடமாக கிராமத்து மக்களுக்காக விஜய்சேதுபதி கட்டிக்கொடுத்துள்ளார். மேலும் இதைத்தொடர்ந்து இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில்....

 

laabam

 

"என் படத்தின் டைட்டில் 'லாபம்' என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள். இந்தப்படம் யாருக்கு லாபம் என்பதையும், எது லாபம் என்பதையும் பேசும். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்திதான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும் தான் பிரிட்டிஷ்காரன் கண்களை உறுத்தியது. நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத்தான் பிரிட்டிஷ்காரன் இங்கே 300 வருடம் டேரா போட்டான். விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம்நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது? தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால்? என்பதை என்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருக்கிறேன். 

 

 

இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை ஆகும். அதை படம் விரிவாகப் பேசும். இப்படத்தில் நாயகன் விஜய்சேதுபதி. நாயகி ஸ்ருதிஹாசன். மேலும் தெலுங்கு சினிமாவில் பல படங்களை தயாரித்த தயாரிப்பாளரின் மகன் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். கலையரசன், பிரித்வி, டேனி என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்" என்றார். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மிக வேகமாகவும், மிக பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகிறது. விஜய்சேதுபதி புரொடக்சனும், 7சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைஇணைந்து லாபம் படத்தை தயாரித்து வருகின்றன.

 

சார்ந்த செய்திகள்