Skip to main content

'ஆட்டம் போட வைப்பவன்...' - ஜெயிலர் வெற்றி; அடுத்த பரிசு அனிருத்துக்கு

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

jailer success kalanithi maran gifted cheque to anirudh

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டது. 

 

வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 600 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை படைத்துள்ளதையடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து காசோலை அளித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பரிசாக இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை ரஜினிகாந்த்திடம் காட்டி ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளுமாறு சொல்ல, பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 மாடல் காரை தேர்வு செய்தார் ரஜினி. 

 

ரஜினியை தொடர்ந்து நெல்சனை சந்தித்த கலாநிதி மாறன், அவருக்கும் காசோலை வழங்கி போர்ச் (Porsche) கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தை நேரில் சந்தித்துள்ளார் கலாநிதி மாறன். ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக அவருக்கு காசோலை வழங்கி மகிழ்ந்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்