Skip to main content

"ஒரு இந்திய பையன், பிரிட்டிஷ் பெண்ணை லவ்..." - நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

 

"An Indian Boy Loves a British Girl...."- Actor Sivakarthikeyan Speech!


தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரின்ஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உக்ரைன் நாட்டு நடிகையான மரியா ரியாபோஷாப்கா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் 'பிரின்ஸ்' படக்குழுவினர் நேற்று (17/10/2022) செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "இந்தப் படத்தை தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய ரிலீஸ் கொடுத்த அன்பு அண்ணாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய வார்த்தைக்கும், அன்புக்கும் ரொம்ப, ரொம்ப நன்றி அண்ணா. நீங்கள் நிறைய படங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். எத்தனையோ வருடங்கள் இண்டஸ்ட்ரீயலில் இருக்கிறீர்கள். உங்களுடைய வெற்றிப் படங்கள் வரிசையில் எனது படமும் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துகள். 

 

பிரின்ஸ் படத்தை பொறுத்த வரைக்கும் மிக சிம்பிள் ஆன ஸ்டோரி. ஒரு இந்திய பையன், பிரிட்டிஷ் பெண்ணை லவ் பண்ணுகிறான். ஆனால், படத்திற்குள் அனுதீப் கொடுத்திருக்கின்ற காமெடிக்கான ட்ரீட்மெண்ட் தான் நாங்கள் புதுசாக பார்க்கக் கூடிய விஷயம். இப்படத்தில் நாங்கள் ஒரு ஊரைக் காட்டியுள்ளோம். அந்த ஊர் தமிழ்நாட்டில் கிடையாது. அது இவராக உருவாக்கிய ஊர். அந்த ஊர் எப்படி இருக்கும்; மக்கள் எப்படி இருப்பார்கள். அவர்கள் எல்லாருமே நாம் பேசுவதுதான் சரி என்று நினைக்கக்கூடிய ஆட்கள். அதில் இருக்கின்ற ஹீரோ, ஹீரோவுடைய அப்பா, அவனுக்கு அவன் ஊரில் இப்படி ஒரு லவ். இதனால் அந்த ஊரில் ஏற்படக்கூடிய பிரச்சனை. இதை ஜாலியாக பிரசண்ட் பண்ண வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த படக்குழுவின் முயற்சி. 

 

படத்தில் மூன்று பாடல்கள் உள்ளது. தீபாவளிக்கு குடும்பத்துடன் திரையரங்கத்துக்கு வந்து ஜாலியாகப் படம் பார்த்து ஜாலியாக வீட்டுக்குப் போகிற மாதிரிதான் படத்தை கிரியேட் செய்துள்ளோம். கலர்ஃபுல், ஃபன் ஜாலியான படம். அத்துடன், கார்த்தி நடித்த சர்தார் படம் வருகிறது. வெவ்வேறு ஜானரில் இரண்டு படம். மிகப்பெரிய பண்டிகைக்கு வருகிறது. சர்தார் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். மித்ரன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். இரண்டு படமும் வெற்றி படமாக இருக்கும்" எனத் தெரிவித்தார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 விஜயகாந்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் உருவான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013ஆம் ஆண்டில், காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம், ரசிகர்களை கவர்ந்த பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் ‘ரஜினிமுருகன்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், சிவகார்த்திகேயனுக்கும், பொன்ராமுக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

இதனை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சீமராஜா’ படத்தை பொன்ராம் இயக்கினார். வெற்றி கூட்டணி மூன்றாவது முறை இணைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதையடுத்து, பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி ஆகிய இரு படங்களும் படுதோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக, முன்னணி நடிகர்களுடன் பொன்ராம் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சகாப்தம்’, மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சண்முகபாண்டியன், தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
sivakarthikeyan ar murugadoss movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார்.