Skip to main content

ஹாஸ்டலுக்கு செல்லும் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர்! 

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

vbfxbdf

 

பல வெற்றி படங்களை தயாரித்த ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு ‘ஹாஸ்டல்’ எனப் பெயரிடபட்டுள்ளது. அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

 

cscsc

 

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, விஜய் டிவி யோகி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘ஹாஸ்டல்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தோழி விடுதிகள்; முன்னேறும் மகளிர்க்கான முகவரி” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

thozhi Hostels An Address to Advancing Women Chief Minister M.K.Stalin

 

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 9 நகரங்களில் நவீன வசதிகளுடன் பெண்கள் தங்குவதற்காக ‘தோழி’ விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

 

இந்த விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, பார்க்கிங் வசதி, பயோ-மெட்ரிக் வசதி, இலவச வை- பை, பொழுதுபோக்கு அம்சங்கள், அயனிங் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தோழி விடுதி குறித்த முழுமையான விவரங்களை www.tnwwhcl.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். விடுதி அறைகளில் தனியாகவும், இருவர், நான்கு பேர்,  ஆறு பேர் என அறையை பகிர்ந்து கொள்ளும் முறையும் உள்ளது.

 

இந்நிலையில் தோழி விடுதிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “தோழி விடுதிகள் - இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி. மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது. டாக்டர் நடேசனாரின் 'திராவிடர் இல்லம்' போல், திராவிட மாடல் ஆட்சியின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைகொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் 72 வயது காப்பாளர் கைது

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

chennai kolathur children issue hostel warden action taken by pocso

 

சென்னை கொளத்தூர் தென் பழனி நகர் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் நலக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தின் காப்பாளராக அகஸ்டின் (வயது 72) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அரசு அங்கீகாரம் பெற்ற இந்த குழந்தைகள் நலக் காப்பகத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த ஆதரவற்ற 5 வயது முதல் 15 வயது வரை உள்ள 14 ஆதரவற்ற சிறுவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர்.

 

இந்நிலையில் இங்கு தங்கியிருந்த 13 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் குழந்தைகள் உதவி மையத்திற்குத் தொடர்பு கொண்டுள்ளான். அப்போது காப்பகத்தில் உள்ள காப்பாளர் அகஸ்டின் என்பவர் தனக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகத் தெரிவித்து இருக்கிறான். இதனைக் கேட்டு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிறுவனின் புகாரின் பேரில் சமூக நலத்துறை மற்றும் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காப்பகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுவன் கூறிய புகார் உண்மை எனத் தெரியவந்தது.

 

இதையடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் இது குறித்து புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அகஸ்டின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் காப்பகத்தில் மற்ற சிறுவர்களுக்கும் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.