Skip to main content

“சனாதனம் இருந்ததால், இந்து மதம் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை” - எச்.ராஜா சர்ச்சை பேச்சு 

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

h raja talk about kamalhaasan speech

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் பொன்னியின் செல்வன் படம் குறித்து கலவையான விமர்சனத்தை வைத்து வருகின்றனர். 

 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, "ரோஜா படத்திற்கு பிறகு மணிரத்னம் கூட தேச பக்தி உள்ள படங்களை எடுக்கவில்லை. ஆனால் இது மணிரத்னத்தின் புதிய முயற்சி, தமிழ் சினிமாவிற்கு பொன்னியின் செல்வன் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கிறது.  வெறும் சாதியை வைத்துக்கொண்டு, சமூக நீதி என்ற பெயரில் எடுத்த படங்களின் ட்ரெண்டை மாற்றி, நம் மன்னர்கள், நம்முடைய பரம்பரையை பற்றி அறிய வேண்டிய படங்களை மக்கள் ரசிக்க தொடங்கி விடுவார்கள். ரசிகர்களின் ருசி மாறும் போது படைப்பாளிகளும் படைப்பை அதற்கு ஏற்றவாறு மாற்றி தான் கொடுக்க வேண்டும். 

 

ராஜராஜ சோழன் இந்து இல்லை என்று சொல்கிறார்கள். அதேபோல் மனுஸ்மிர்தி காலத்தில் இந்து இருந்ததா? என்ற பல கேள்விகள் இருக்கிறது. திமுக பாதுகாத்து வைத்திருக்கும் கும்பல்கள் தான் சிதைப்பதை மட்டுமே நோக்கமாக வைத்து பொன்னியின் செல்வன் படத்தை விமர்சித்து வருகின்றனர்.    படத்தில் இந்துத்துவாவை பற்றி எதுவும் இல்லை. பொன்னியின் செல்வன் நாவலில் என்ன இருக்கிறதோ அதைதான் மணிரத்னம் படமாக இயக்கியிருக்கிறார். தேசபக்தி, வலது சாரியை மையமாக வைத்து படம் எடுத்தால் ஓடாது என்று படம் எடுத்தவர்கள் பயந்துபோய் வேண்டுமென்றே இந்த மாதிரியான சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. 

 

பிராய்லர் கோழி உடம்புக்கு கெட்டது, நாட்டுக்கோழி நல்லது என்று நாம் சொல்கிறேம். பிராய்லர் கோழி வருவதற்கு முன்பு அது பெயர் கோழிதான், நாட்டு கோழி இல்லை. அது போலத்தான் இஸ்லாமும், கிருஸ்துவமும் இல்லாததால், இந்து மதம் மட்டும் இருந்த காரணத்தால் அதை தர்மம் என்று சொன்னார்கள். அது பழமையானதாக இருந்ததால் சனாதன தர்மம் என்று சொன்னார்கள். அதனால் அன்றைக்கு இந்து என்று இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. 

 

கமல்ஹாசன், ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் இல்லை, 8 ஆம் நூற்றாண்டில் தான் ஆதிசங்கரர் 6 மதங்களை இணைத்து இந்து மதம் என்று சொன்னதாக கூறினார். அதே மிகவும் தவறு. ராஜராஜ சோழன் ஆட்சிகாலம் 10 ஆம் நூற்றாண்டில்தான். அப்படி இருக்கும் பட்சத்தில் சோழர்காலத்தில் இந்து மதம் இருந்திருக்கும் தானே.  அப்புறம் ஏன் இந்து மதம் இல்லை என்று சொல்கிறார். ஆகையால் ஆதிசங்கரர் 8 ஆம் நூற்றாண்டில் இந்து மதத்தை இணைத்ததாக கமல் சொல்வது தவறு. இவர்களுக்கு இந்துவும், தெரியாது ஒன்னும் தெரியாது. தமிழன் மதமில்லாதவன், அவன் முஸ்லிமாக மாறினால் நாம் கேள்வி கேட்பதில்லை, கிறிஸ்தவனாக மாறினால் கேள்வி கேட்பதில்லை. ஆனால் இந்துவாக மாறினால் மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்" எனக் கட்டமாக பேசியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.