Skip to main content

ராக்கி பாயை முந்திய ஷாருக் பாய்; சில வினாடிகளில் டிக்கெட் க்ளோஸ்; தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

Gujarat Government assures a police protection for Shah Rukh Khans Pathaan movie

 

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடலாக வெளியான 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக காவி நிற உடை அணிந்து நடனமாடியிருக்கிறார் என்ற இந்துத்துவர்களின் விமர்சனத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது.

 

இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட பலரும் தங்களது எதிப்புகளை தெரிவித்திருந்தனர். ஆனால், அண்மையில் டெல்லியில் நடந்த பாஜக தேசியக்குழு கூட்டத்தில், இனி திரைப்படங்கள் குறித்து பாஜகவினர் யாரும் கருத்து கூற வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் ஒரு தகவல் வெளியானது.

 

இந்நிலையில், இப்படம் வருகிற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெர்மனியில் 8500 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையாகி 1.5 லட்சம் யூரோக்கள் வரை வசூலித்து, கேஜிஎஃப் 2 பட மொத்த வசூலை முன்பதிவின் மூலம் முறியடித்துள்ளது. இதனிடையே, நாக்பூரில் ஒரு திரையரங்கில் மொத்த டிக்கெட்டுகளையும் சில வினாடிகளில் ஷாருக்கான் ரசிகர் மன்றத்தினர் புக் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

குஜராத்தில் இப்படத்தை திரையிடக்கூடாது என அங்குள்ள திரையரங்கின் நிர்வாகத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் குஜராத் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் சார்பாக பாதுகாப்பு வேண்டி அம்மாநில முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரிஹானா கலை நிகழ்ச்சியும் ஷாருக்கானின் டான்ஸும் - வைரலாகும் வீடியோ

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
rihanna sharukhan anandh ambani wedding dance video

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடக்கிறது. குஜராத் ஜாம் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டுள்ளார். 

இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மேலும் இரவு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாலிவுட் நட்சத்திரங்களோடு நடனமாடினார். ஜான்வி கபூருடன் அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நிகழ்ச்சியில் ஷாருக்கான் ஆடிய வீடியோவும் வைராகி வருகிறது.  

பாப் பாடகி ரிஹானா கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அனுபவத்தை சொல்லும் ராஜ்குமார் ஹிரானி - ஷாருக்கானின் 'டங்கி'

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Shah Rukh Khan, Rajkumar Hirani in Dunki second trailer released

 

பிரபல இந்தி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் படம் 'டங்கி'. இதில் டாப்ஸி, போமன் இரானி மற்றும் விக்கி கௌஷல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரிக்கும் இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி வெளியாகிறது. 

 

இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வரை 64 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூட்யூபில் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னோட்டத்தில், பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகியோர் அடங்கிய லண்டனுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவை ஷாருக்கான் கதாபாத்திரம் சந்திக்கிறது. பின்பு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நான்கு நண்பர்களைப் பின்தொடர்ந்து இந்தக் கதை செல்கிறது. ஏற்கனவே இப்படத்தின்  ஒரு ட்ரைலரும் இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.