Skip to main content

சோனு சூட்டை கௌரவித்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம்!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

IAS

 

 

நடிகர் சோனு சூட்டை கௌரவிக்கும் விதமாக கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு ஆந்திராவில் உள்ள ஒரு ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் அவரது பெயரைச் சூட்டியுள்ளது. 

 

நடிகர் சோனு சூட் கரோனா கால ஊரடங்கின்போது பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். வெளியூரில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வழிவகை செய்தது, விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது, ஸ்பெயின் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப விமான வசதி ஏற்படுத்திக்கொடுத்தது, சண்டிகர் மாநிலத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கியது ஆகியவை பலரது பாராட்டையும் பெற்றன. அவரால் பலனடைந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

 

கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்து வரும் இன்றைய சூழலிலும், சமூக வலைதளம் வாயிலாக தன்னிடம் உதவி கோருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் செயல்பட்டு வரும் சந்திரா ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், நடிகர் சோனு சூட்டின் மனிதநேயப்பண்பை கவுரவிக்கும் விதமாக அந்நிறுவனத்தின் கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளது. இதனையடுத்து, சந்திரா ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'டென்ஷன் ஆகாதீர்கள்;பிரார்த்தனை செய்யுங்கள்''-சோனு சூட் ட்வீட்!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

'Don't be tense; pray' '- Sonu Suite Tweet!

 

நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலான நிலையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார்.

 

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பம் ஒன்றில் இரண்டரை வயது சிறுமி ஒருவர் பிறக்கும் பொழுதே நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்துள்ளார்.அறுவை சிகிச்சை மூலமே அவற்றை அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் வறுமை காரணத்தால் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணம் இல்லாமல் சிறுமியின் குடும்பத்தினர் தவித்து வந்தனர். இந்நிலையில் அச்சிறுமியின் வீடியோவை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து உதவி செய்ய முன்வந்துள்ளார். சிறுமியுடைய வயிற்றில் கூடுதலாக உள்ள கைகள் மற்றும் கால்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றத் தேவையான பரிசோதனையை மருத்துவர்கள் செய்யும் புகைப்படத்தையும், வீடியோவையும் ட்வீட் செய்துள்ள சோனு ''டென்ஷன் ஆகாதீர்கள் சிகிச்சை தொடங்கிவிட்டது. பிரார்த்தனை செய்யுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கரோனா நேரங்களில் பல்வேறு உதவிகளை செய்ததன் மூலம் மேலும் பிரபலமானவர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

வெளியான தகவல்... சோகத்தில் சோனுசூட் ரசிகர்கள்...!

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

Released information ... Sonu Sood fans in grief ...!

 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

நண்பகல் 12 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் வகித்து வந்த நிலையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 272 இடங்களிலும், சமாஜ் வாதி கட்சி- 121 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி-03 இடங்களிலும், காங்கிரஸ்-03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் சட்டமன்றத்தில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 89 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், அகாலிதளம் 06 இடங்களிலும் பாஜக 03 இடங்களிலும், மற்றவை 01 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 

கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து பிரபலமான நடிகர் சோனு சூட், பஞ்சாப் தேர்தலில் தனது தங்கையைக் களமிறக்கியிருந்தார். தனது தங்கை மாளவிகாவின் விருப்பத்தை தொடர்ந்து பஞ்சாப்பின் மேகா தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்நிலையில் மாளவிகா வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ''எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் எப்போதும் பொழியும் அன்பையும் மரியாதையையும் அவர்களுக்கு திருப்பி அளிக்க விரும்புகிறார் எனது தங்கை" என சோனுசூட் நம்பிக்கையுடன் கூறியிருந்த நிலையில் அவரின் பின்னடைவு தொடர்பாக வெளியான தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.