Skip to main content

“திருமாவளவன் படங்களைப் பார்த்து பிஜேபி காரங்க கூப்பிட்டாங்க” - ஆடை வடிவமைப்பாளர் சத்யா என் ஜெ 

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

sathya nj

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி மற்றும் தற்போது வெளியான லெஜெண்ட் என பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர் சத்யா என் ஜெ. அவரை நமது  நக்கீரன் ஸ்டூடியோ யூ ட்யூப் பக்கத்திற்காக எடுக்கப்பட்ட பேட்டியில் அவர் எடுத்த போட்டோஷூட் பற்றி  பகிர்ந்தவை.. 

 

"முதலில் நான் நடத்திய போட்டோஷூட் இளையராஜா சாரை வைத்து; அவரை பார்க்க செல்வதற்கு முன் எல்லோரும் அதிகமாக பயமுறுத்தினர். ஆனால் மற்றவர்கள் சொல்வது போல் அவர் இல்லை. அவர் அதற்கு அப்படியே நேர்மாறாக இருந்தார். போட்டோஷூட் முடிந்ததும் என்னை மிகவும் வாழ்த்தினார். நான் அந்த போட்டோஷூட் எடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்பொழுது பார்த்தாலும் சரியான ஒன்றை மிக சரியாக செய்துவிட்டோம் என மிகத் திருப்தியாக உள்ளது. அவருக்குத் தெரிந்த ஒருவர் அவரைப் பார்த்து நன்றாக உள்ளது இதுவரை உங்களை இப்படி கண்டதில்லை என கூறியதும் "என் கிட்ட சொல்லாதீங்க அதோ அந்த பையன் தான் அவனுக்கு சொல்லுங்க" என என்னைக் கைகாட்டினார்.

 

பிரசாத் ஸ்டூடியோவில் அவர் சொன்னது இன்றும் நியாபகம் உள்ளது. அடுத்தது தொல். திருமாவளவன். அவரது கட்சியினரே எங்களை அழைத்தனர். அவர்களது திட்டம் இதுவரை கட்சித்தலைவர்கள் கொடுக்கும் போஸ் எப்படி இருக்குமோ அப்படி வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. ஆனால் நாங்கள் எடுத்த புகைப்படங்கள் அவர்களுக்கு பிடித்தது. அப்புகைப்படங்கள் அரசியல் தளத்தில் பேசப்பட்டதால் காங்கிரஸ் மற்றும் பிஜேபி என இரண்டு கட்சிகளிடம் இருந்தும் போட்டோஷூட்டுக்கான அழைப்பு வந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் அது அமையவில்லை.

 

அடுத்தது நாங்கள் போட்டோஷூட் நடத்த ஆசைப்பட்ட மனிதர் நாசர் சார். முதலில் அவருக்கு இதில் விருப்பமே இருக்கவில்லை. பிறகு நான் மனோபாலா சாரிடம் வேண்டிக்கொண்டதால் அவர் நாசர் சாரிடம் கேட்டதன் பேரில் சம்மதித்தார். இதை சொல்லியாக வேண்டும் நாங்கள் நடத்திய போட்டோஷூட்களில் அவராகவே போஸ் கொடுத்தது நாசர் சார் மட்டுமே. எந்த ஒரு காட்சிக்கும் நாங்கள் சொல்லித்தரவில்லை. செந்தில் சாரை வீடியோ ஷூட்டுக்காக காஸ்ட்யூம் செய்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. என் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு தான் அவருக்கு போனில் அழைத்து சொன்னேன். நேரில் அழைக்கவில்லை எனினும் பெருந்தன்மையாக திருமணத்திற்கு வந்து பரிசு கொடுத்து வாழ்த்தினார்.

 

விவேக் சாருடன் நான் போட்டோஷூட் நடத்திய பின் அவரிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவருடைய அடுத்தடுத்த திட்டங்களை கூறினார். அதில் இயக்குநர் ஆவதும் ஒன்று. அந்த போட்டோஷூட் பார்த்து அதே கெட்டப்பில் ஹீரோவாக ஒரு படம் நடிக்க வேண்டும் என பிரபல ஒளிப்பதிவாளர் அவரிடம் கேட்டார். அதை எல்லாம் நிறைவேற்றாமல் அவர் சென்றது மிகுந்த வேதனை அளிக்கிறது.

 

மன்சூர் அலிகான் உடன் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவரின் இயல்பே தன் முடியை களைந்துவிட்டுக் கொள்வதுதான்.ஆனால் எங்களுக்கு முறையாக வாரிய முடியலங்காரம் தேவைப்பட்டதால் அதற்கு மட்டும் சிறிது கஷ்டப்பட்டோம். சிகையை வடிவமைத்ததும் தன்னிச்சையாகவே களைத்து விட்டுக்கொள்வது அவரின் வாடிக்கையாக இருந்ததால் எங்கள் சிகையாலங்கார வடிவமைப்பாளர் அவரின் மேல் கோபப்பட்டார். பின் அவருக்கு எடுத்துச் சொல்லி அவரின் இயல்பே அது தான் என புரியவைத்து பின்னர் படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் நம்மிடம் இருந்திருக்கலாம் என்ற ஒன்றை தவிர்த்து வேறு எந்த வருத்தமும் இல்லை. அடுத்தக்கட்டமாக முற்றிலும் நடிகைகளை வைத்து போட்டோஷூட் நடத்த திட்டமிட்டுள்ளோம். சில வேலைகள் இருப்பதால் அதை முடித்து விட்டு தொடங்க தொடங்கலாம் என நினைக்கின்றோம்"

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திரிஷாவின் கண்டனம்; சில மணிநேரத்தில் வீடியோ வெளியிட்ட ஏ.வி. ராஜு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Trisha's Condemnation; AV released the video within an hour. Raju

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

mm

இந்நிலையில் ஏ.வி.ராஜு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.