Skip to main content

மஞ்சிமா மோகனை கரம் பிடித்தார் கவுதம் கார்த்திக்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

gautham karthik manjima mohan wedding

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக வலம் வரும் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்தனர். 'தேவராட்டம்' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக இருவரும் காதலை அறிவித்த நிலையில் திருமணம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர். 

 

அதன்படி இவர்களது திருமணம் இன்று (28.11.2022) எளிய முறையில் நடைபெற்றுள்ளது. இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும், ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

கவுதம் கார்த்திக், இப்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்திலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஆகஸ்ட் 16 - 1947' படத்திலும் நடிக்கிறார். மஞ்சிமா மோகன், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' என்ற படத்தில் நடிக்கிறார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மயிலிறகே மயிலிறகே…’ - மணக்கோலத்தில் நடிகை நிலா

Published on 13/03/2024 | Edited on 13/03/2024

 

எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை நிலா. தமிழில் நிலா என்ற பெயரில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வந்தார். இவருடைய உண்மையான பெயரும் மீரா சோப்ரா என்பதும் பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ராவின் உறவினரின் தங்கை தான் மீரா சோப்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக தமிழில் பரத் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான கில்லாடி படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், தொழில் அதிபர் ரக்‌ஷித் கெஜ்ரிவால் என்பவரை மீரா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நடந்த இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். தற்போது, இவர்களுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.