Skip to main content

சர்ச்சைக்குரிய திரைப்பட தயாரிப்பாளர் பாலியல் வழக்கில் கைது

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

film producer Martin Sebastian arrested in women incident

 

மலையாள திரையுலகில் தயாரிப்பளராக வலம் வருபவர் மார்ட்டின் செபாஸ்டின். தொழிலதிபராகவும் பயணித்து வரும் இவர் பல வகைகளில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 1986-1992 ஆண்டு காலகட்டத்தில் ஊழல் வழக்கில் மார்ட்டின் செபாஸ்டியன் மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சர்ச்சைக்குரிய நபராக அங்கு அறியப்படுகிறார். 

 

இதையடுத்து தனது பெயரை சி.எஸ்.மார்ட்டின் என மாற்றிக்கொண்டு திரைப்படத் தயாரிப்புகளில் தீவிரமாக இருந்து வந்தார். இதனிடையே கேரளா திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மார்ட்டின் செபாஸ்டின் தன்னிடம் பாலியல் அத்துமீறலுக்கு முயன்றதாக கூறி அவர் மீது புகார் கொடுத்திருந்தார். 

 

அந்தப் புகாரில், "கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், பின்பு திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி வயநாடு, மும்பை, திருச்சூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டார். மேலும் ரூ. 78,60,000 மற்றும் 80 சவரன் தங்கத்தை என்னிடம் வாங்கியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மார்ட்டினுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்டாலும் விசாரணைக்காக விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜரான மார்ட்டினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“உண்மைக்குப் புறம்பானது” - ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
producer abdul malik jaffar sadiq case issue

மலேஷியாவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்து வருகிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல்வேறு மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையைப் பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது.

இந்த நிலையில் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டதாக காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும்  தனக்கும் தொடர்பு உண்டு என்று பிரபல யூட்யூப் சேனல் உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் 5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.