Skip to main content

ஷங்கர் மகளை கதாநாயகியாக்கும் சூர்யா!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Aditi Shankar

 

கிராம பின்புலம் கொண்ட கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடைசியாக வெளியான 'புலிக்குத்தி பாண்டி' திரைப்படம் நேரடியாக சன் டிவியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருந்த முத்தையா, கடந்த சில மாதங்களாக அப்படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகளில் ஈடுபட்டுவந்தார்.

 

இந்த நிலையில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘கொம்பன்’ கூட்டணியான கார்த்தி - முத்தையா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘விருமன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சூர்யா, இப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகும் அதிதி ஷங்கருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வில்லனாக அறிமுகமாகும் விஜய் பட ஒளிப்பதிவாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
cinematographer sukumar debut as actor

குட்டிப்புலி, கொம்பன், மருது என கிராமத்து பின்னணியில் படங்களை இயக்கி பிரபலமானவர் முத்தையா. அந்த வகையில் கடைசியாக ஆர்யாவை வைத்து 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

இதையடுத்து முத்தையா இயக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படமும் அவரது ஸ்டைலில் கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக அவரது மகன் விஜய் முத்தையாவை அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தில் கதாநாயகியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தில் பரத் வில்லனாக நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒளிப்பதிவாளர் சுகுமார், கும்கி, காக்கிச் சட்டை, பைரவா உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் இப்படத்தில் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் இப்படம் மூலம் நடிகராக அறிமுகமாவார்.

Next Story

கதாநாயனாக அறிமுகமாகும் முத்தையா மகன்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
muthaiya son vijay enter into cinema as hero character

குட்டிப்புலி, கொம்பன், மருது என கிராமத்து பின்னணியில் படங்களை இயக்கி பிரபலமானவர் முத்தையா. அந்த வகையில் கடைசியாக ஆர்யாவை வைத்து 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

இதையடுத்து முத்தையா இயக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படமும் அவரது ஸ்டைலில் கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக அவரது மகன் விஜய் முத்தையாவை அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தில் கதாநாயகியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.