Skip to main content

தோற்றத்தை மாற்றிய அருள்நிதி!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021
bfhfdhsdf

 

தயாரிப்பாளர் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சமீபத்தில் அருள்நிதியின் புதிய திரைப்படமான ‘டி பிளாக்’ திரைப்படத்தின் முழு உரிமைகளையும் கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது ​​அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார். எம்என்எம் பிலிம்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்கும் இப்படத்தை, பிரபல எரும சானி புகழ் யுடியூபர் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது...

 

"திரைத்துறையில் முன்னணி ஆளுமையாக வலம் வரும், இயக்குநர் பாண்டிராஜ் போன்ற ஒருவர், எங்கள் திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவது மிகச் சிறந்த தருணம் ஆகும். தமிழ் திரையுலகிற்கு  அவர் அளித்த பங்களிப்பு தனித்துவமானது. ஃபர்ஸ்ட் லுக்கை அவர் வெளியிட்டதில் எங்கள் படக்குழு  மிகவும் உற்சாகத்தில் உள்ளது. படத்தினை மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யத்  திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள்  அடுத்த சில நாட்களில் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்" என்றார். எம்என்எம் பிலிம்ஸ்  அரவிந்த் சிங் இப்படம் குறித்துக் கூறும்போது... "பாண்டிராஜ்  போன்ற முன்னணி இயக்குநர்  எங்கள் "டி பிளாக்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளோம்" என்றார். 

 

இப்படம் குறித்து இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் பேசியபோது... "இத்திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டமும், நேர்மறையான அதிர்வுகளைப் பெற்று வருவதால் எங்கள் முழு குழுவினரும் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். பி.சக்திவேலன் அவர்களின் சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம், எங்கள் திரைப்படத்தின் முழு உரிமைகளையும் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, ​​இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது பெருமையாக இருக்கிறது. அருள்நிதியுடன் படப்பிடிப்பில் இணைந்து நடித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அருள்நிதி தனது பாத்திரத்திற்காக மிகக்கடினமான  முயற்சிகளை மேற்கொண்டார். இப்படத்தில் ஒரு கல்லூரி மாணவரின் பாத்திரத்தில் நடிப்பதால், அவர் ஏழு கிலோவைக் குறைத்து மிக அழகான இளமையான தோற்றத்திற்கு மாறினார்" என்றார். அவந்திகா மிஸ்ரா (Shades of Kadhal music album புகழ்) இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். உமா ரியாஸ், தலைவாசல் விஜய், கரு பழனியப்பன், லல்லூ, கதிர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய அருள்நிதி படக்குழு

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Arulnidhi

 

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான 'தேஜாவு' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் இன்று கேக் வெட்டி கொண்டாடினர்.

 

'தேஜாவு' வெற்றி குறித்து அருள்நிதி கூறுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து, இதனை வெற்றிப் படமாக்கியுள்ளார். இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் 'தேஜாவு'  திரைப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும். இப்படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி" எனக் கூறினார்.

 

படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் விஜய் பாண்டி கூறுகையில் "எனது நிறுவனத்தின் முதல் திரைப்படமே தரமான வெற்றிப் படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. இப்படத்தினை எனக்கு அளித்த அருள்நிதிக்கும், இதனை தரமான படமாக அளித்த இயக்குநர் அரவிந்த் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் டீசர், ட்ரைலரை வெளியிட்டு படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்க காரணமாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

"தம்பி தவறவிட்ட 'நெஞ்சுக்கு நீதி' யை கைப்பற்றிய உதயநிதி" - ரகசியத்தைப் பகிர்ந்த ஆரி !

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

actor aari talk about nenjukku needhi movie

 

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த  வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். நேற்று (20.5.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சினிமா விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ஆரி கூறுகையில், "நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த பலரும் பாராட்டுகிறார்கள். சமூக நீதியை சரிசமமாக சொல்லும் படம் இது. ஒன்றை உயர்த்தி மற்றொன்றை தாழ்த்தி எடுக்கப்பட்ட படம் அல்ல. முக்கியமாக சாதி அரசியல் படம் அல்ல. நிறைய பேர் இந்த படத்தின் கதையை கேட்டு வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று மறுத்திருக்கிறார்கள். குறிப்பாக அதர்வா, அருள்நிதி உள்ளிட்ட நடிகர்களுக்கு  நன்றி. ஒரு வேலை அவர்கள் நடித்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.

மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னாடி சாதி இருக்கு. ஆனா இங்க பெயருக்கு பின்னாடி சாதி இல்லை.  அப்படி இருக்கையில் நீங்க ஏன் இப்படி சாதியை தூண்டுகிற வகையில் படம் எடுக்கிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். நாம் பெயரில் மட்டுமே சாதியை ஒழித்து விட்டோம் , ஆனால் நம் மனதில் சாதி அப்படியே தான் இருக்கிறது. சாதியை வெளியில் சொல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் சமூக நீதி பற்றிய புரிதலோடு இருப்பது ரொம்ப முக்கியம். நாம எந்த சாதியில் பிறந்தோம் என்பது பிரச்சனை இல்லை. ஆனால் அந்த சாதி பெருமையோடு மற்றவர்களை இழிவாக பாக்கிறதுதான் இங்க பிரச்சனை.  அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்த படம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் தம்பி அருள் நீதி தவறவிட்ட இந்த படத்தை அவரின் அண்ணன் நடித்து 'நெஞ்சுக்கு நீதி'யில் இருக்கும் சமூக நிதியை மக்களிடம் வெளிப்படுத்தியுள்ளார் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.