Skip to main content

வில்லன் நடிகர் சிராக் ஜானியின் ஜாலியான பேட்டி

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

Chirag Jani interview 

 

காப்பான், துணிவு, அகிலன் உள்ளிட்ட படங்களில் மிரட்டிய நடிகர் சிராக் ஜானி அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...

 

'துணிவு' படத்தை தமிழ்நாட்டு திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் மும்பையில் நான் படப்பிடிப்பில் இருந்ததால் அது முடியாமல் போனது. ஒரு வாரம் கழித்து மும்பையில் படம் பார்த்தபோதும் அஜித் சாரின் மீது அங்கும் மக்களுக்கு இருந்த கிரேஸ் புரிந்தது. கடலில் நடக்கும் குற்றங்கள் பற்றிய படம் இந்தியாவில் இதுவரை வந்ததில்லை. ஜெயம் ரவியின் 'அகிலன்' படம் அப்படிப்பட்ட ஒரு படமாக இருக்கும். தனக்கு எது வேண்டும் என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்தார். 

 

துறைமுகங்கள் குறித்த புரிதல் இந்தப் படத்திற்கு முன்பு எனக்கு இல்லை. இந்தப் படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். ஜெயம் ரவி எனக்கு அண்ணன் மாதிரி. அவரும் என்னைத் தம்பி என்றே அழைப்பார். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. சுற்றி இருக்கும் அனைவரையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வார். அவர் இருக்கும்போது செட் எப்போதும் கலகலப்பாக இருக்கும். மிகவும் டெடிகேட்டடான நடிகர். அகிலன் படத்தில் இதுவரை இல்லாத அளவு திரையில் அவர் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். ஒரு நடிகராக அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.

 

தென்னிந்திய நடிகர்களுக்கு சிறப்பான திறமைகள் இயல்பிலேயே இருக்கின்றன. நட்சத்திர அந்தஸ்தை அவர்கள் தலையில் ஏற்றிக் கொள்வதில்லை. 'காப்பான்' படத்தில் மோகன்லால் சாரை முதலில் சந்தித்தபோது நான் அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகன் என்பதை அவரிடம் வெளிப்படுத்தினேன். அதிகமான புகழ்ச்சியை விரும்பாதவர் மோகன்லால் சார். 'தர்பார்' ஷூட்டிங்கில் ரஜினி சாரை சந்தித்து அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டது மறக்க முடியாத அனுபவம். காப்பான் படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு அவரே என்னை அழைத்து சந்தித்தார். நான் ஒரு அழகான வில்லன் என்று பாராட்டினார்.

 

லோகேஷ் கனகராஜ் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். விக்ரம் படத்தைப் பார்த்துவிட்டு வியந்து போய் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். இந்திய அளவில் சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் லோகேஷ் ஒருவர். அவருடைய படங்களில் அனைத்து கேரக்டர்களுமே வித்தியாசமானவை. விக்ரம் படத்தில் கூட ஏஜென்ட் டீனா கேரக்டர் நம்மை சர்ப்ரைஸ் செய்தது. துணிவு படத்தில் அஜித் சாருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். அவர் எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர். அவர் போன்ற மனிதருடன் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மகிழ்ச்சி தான்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.