Skip to main content

‘சக்திமான்’ நாயகனுக்கு பாடகி சின்மயி கண்டனம்! 

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

chinmayi

 

90 -களில் பிறந்து சிறுவர்களாக வளர்ந்தவர்களுக்கு 'சக்திமான்' தொடர் என்பது தற்போதைய 'மார்வெல் டிசி' சூப்பர் ஹீரோ படங்கள் போன்றது. பலருக்கும் பிடித்தமான 'சக்திமான்' ஏற்படுத்திய தாக்கம் எண்ணிலடங்காதவை. இந்நிலையில், சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த முகேஷ் கண்ணா பெண்கள் குறித்துப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை வெளியில் சொல்லி குற்றச்சாட்டு வைப்பதுதான் மீடூ இயக்கம். இது ஹாலிவுட்டில் தொடங்கி படிப்படியாக பாலிவுட், கோலிவுட் என்று கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது. 

 

இந்நிலையில், நடிகர் முகேஷ் கண்ணா இந்த இயக்கம் குறித்து பேசுகையில், “பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீடூ பிரச்சனை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்கவேண்டும் என இன்று பெண்கள் பேசி வருகின்றனர்” என்று கருத்துக் கூறியிருந்தார்.

 

இவரின் இந்த கருத்து சமூக வலைதளத்தில் மிகப்பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் அவருடைய கருத்துத் தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டதாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 

இந்நிலையில், முகேஷ் கண்ணாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சின்மயி ட்வீட் செய்துள்ளார். அதில், “பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகுதான், 'மீ டூ' பிரச்சினை வந்ததாக முகேஷ் கண்ணா கூறியிருக்கிறார். ஆண்கள் தங்கள் கைகளைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதால் வரவில்லையாம். இவரை போன்ற மனநிலை உடையவர்களால் எனக்குச் சோர்வு வருகிறது. இவர்கள் மாறப்போவதும் இல்லை, நச்சுக் கருத்தை தங்களுக்குள் வைத்துக் கொள்ளப்போவதும் இல்லை” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இனி இவர்களை சுற்றியே எங்கள் பிரபஞ்சம்" - பாடகி சின்மயி நெகிழ்ச்சி!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

singer chinmayi mother twins

 

கடந்த 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார் சின்மயி. அதன்பிறகு ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள சின்மயி விண்ணைத்தாண்டி வருவாயா, 96, தள்ளி போகாதே உள்ளிட்ட பல படங்களின்  கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். 

 

இந்நிலையில் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து பாடகி சின்மயிக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அவர்களுக்கு திரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.  மேலும் இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த சின்மயி, இனி இவர்களைச் சுற்றியே எங்கள் பிரபஞ்சம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பாடகி சின்மயிக்கு த்ரிஷா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

Next Story

சின்மயி, லீனா மணிமேகலைக்கு இடைக்கால தடை!

Published on 20/01/2022 | Edited on 21/01/2022

 

Interim ban on Chinmayi and Leena Manimegala!

 

திரைப்பட இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமில்லாத கருத்துக்களை வெளியிட்டதாக கவிஞர் லீனா மணிமேகலை மற்றும் பாடகி சின்மயிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

கவிஞர் லீனா மணிமேகலை, சின்மயி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 'தனக்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை லீனா மணிமேகலை பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும், சமூக ஊடகங்களும் வெளியிட்டதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும். தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டதற்கு  ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும்' என இயக்குநர் சுசி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

Interim ban on Chinmayi and Leena Manimegala!

 

இந்த வழக்கில் சுசி கணேஷன் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், 'கவிஞர் லீனா மணிமேகலை மீது தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தங்கள் தரப்பை பழிவாங்கும் நோக்கில் லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைய உள்ள நிலையில் திரைத்துறையில் எனது நட்பை கெடுக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும்' வாதம் செய்தார்.

 

இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், சுசி கணேஷன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்ட லீலா மணிமேகலை, சின்மயி ஆகியோருக்கு சுசி கணேசன் தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். அதேபோல் இந்த வழக்கில் கவிஞர் லீனா மணிமேகலை, சின்மயி மற்றும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.