Skip to main content

"என்றாவது ஒருநாள் அவரை சந்திப்பேன் என நம்பினேன்" - பாடகி சின்மயி வேதனை! 

Published on 18/08/2020 | Edited on 18/08/2020
fvdsg

 

 

இந்தியாவின் பழம்பெரும் பிரபல பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். 90 வயதான பண்டிட் ஜஸ்ராஜ் 1930-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியில் பிறந்தவர். பல இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஜஸ்ராஜ், பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத பாடகராக திகழ்ந்தவர். 2000-ஆம் ஆண்டு இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. கரோனா ஊரடங்குக்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்றிருந்த அவர், ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், மாரடைப்பால் இன்று அவர் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து, பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாடகி சின்மயி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்.."எத்தனை வருடங்கள் இந்த லட்சிய மனிதரின் பாடல்கள் கேட்டு, என்றாவது ஒருநாள் பண்டிட் ஜஸ்ராஜை ஒரு முறையாவது சந்திப்பேன் என்று நம்பினேன்... என் இதயம் நொறுங்கிவிட்டது" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இனி இவர்களை சுற்றியே எங்கள் பிரபஞ்சம்" - பாடகி சின்மயி நெகிழ்ச்சி!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

singer chinmayi mother twins

 

கடந்த 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார் சின்மயி. அதன்பிறகு ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள சின்மயி விண்ணைத்தாண்டி வருவாயா, 96, தள்ளி போகாதே உள்ளிட்ட பல படங்களின்  கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். 

 

இந்நிலையில் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து பாடகி சின்மயிக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அவர்களுக்கு திரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.  மேலும் இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த சின்மயி, இனி இவர்களைச் சுற்றியே எங்கள் பிரபஞ்சம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பாடகி சின்மயிக்கு த்ரிஷா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

Next Story

சின்மயி, லீனா மணிமேகலைக்கு இடைக்கால தடை!

Published on 20/01/2022 | Edited on 21/01/2022

 

Interim ban on Chinmayi and Leena Manimegala!

 

திரைப்பட இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமில்லாத கருத்துக்களை வெளியிட்டதாக கவிஞர் லீனா மணிமேகலை மற்றும் பாடகி சின்மயிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

கவிஞர் லீனா மணிமேகலை, சின்மயி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 'தனக்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை லீனா மணிமேகலை பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும், சமூக ஊடகங்களும் வெளியிட்டதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும். தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டதற்கு  ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும்' என இயக்குநர் சுசி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

Interim ban on Chinmayi and Leena Manimegala!

 

இந்த வழக்கில் சுசி கணேஷன் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், 'கவிஞர் லீனா மணிமேகலை மீது தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தங்கள் தரப்பை பழிவாங்கும் நோக்கில் லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைய உள்ள நிலையில் திரைத்துறையில் எனது நட்பை கெடுக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும்' வாதம் செய்தார்.

 

இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், சுசி கணேஷன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்ட லீலா மணிமேகலை, சின்மயி ஆகியோருக்கு சுசி கணேசன் தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். அதேபோல் இந்த வழக்கில் கவிஞர் லீனா மணிமேகலை, சின்மயி மற்றும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.