Skip to main content

"அந்த மூன்று பெண்களை பார்த்தாலே எரிச்சலாகும்" - இயக்குநர் சேரன் பேச்சு!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

cheran

 

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சேரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (06.12.2021) நடைபெற்றது.

 

ad

 

விழாவில் இயக்குநர் சேரன் பேசுகையில், "முதலில் படத்தின் இசையமைப்பாளர் சித்துவிற்கும் கவிஞர் சினேகனுக்கும் பாராட்டுகள். ‘பாண்டவர் பூமி’ படத்திற்கு டம்மி வரிகள் எழுதுவதற்காக வந்தவர்தான் சினேகன். ஆனால், அவருக்குள் வாழ்க்கையின் அத்தனை அர்த்தமும் இருந்தது. படத்தின் தயாரிப்பாளர் ரங்கநாதன் அவ்வளவு உழைப்பை இந்தப் படத்தில் போட்டுள்ளார். எதையும் சரியாகத் திட்டமிட்டு செய்யும் பண்பு அவரிடம் உள்ளது. அதனால் எடுக்கும் அத்தனை படங்களிலும் அவர் ஜெயிப்பார். இயக்குநர் நந்தா பெரியசாமி என்ற மனிதருக்காகத்தான் நான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இவ்வளவு கனவுகள் கொண்ட ஒரு மனிதர் தன்னுடைய வாழ்க்கையில் எங்காவது ஜெயித்துவிட வேண்டும் என்று நீண்டநாட்களாக நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவரிடம் எவ்வளவு கதைகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். இனி ஒவ்வொரு கதையாக, அந்தக் கதைகள் அனைத்தும் ஜெயிக்கும். இந்தப் படத்தில் அண்ணன் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டியாக நடித்துள்ள அந்த மூன்று பெண்களைக் கேரவேனிலிருந்து இறங்குவதற்கு முன்புவரை பிடிக்கும். கீழே இறங்கி ஸ்பாட்டிற்கு வந்துவிட்டால், அவர்களைப் பார்த்தாலே எரிச்சலாகும். அந்த அளவிற்கு கதாபாத்திரத்தை உள்வாங்கி அவர்கள் நடித்துள்ளனர். கௌதம் கார்த்திக் பார்ப்பதற்குத்தான் உயரமாக, ஹீரோ மாதிரி இருக்கிறார். ஆனால், பழகினால் ரொம்பவும் மென்மையான அன்பான மனிதராக இருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்குக் கிடைக்கும் பாராட்டு அவரை எங்கேயோ கொண்டுபோகும்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.