Skip to main content

படப்பிடிப்பில் ஏற்பட்ட ரத்தக்காயம்; பதறிய தனுஷ் - சம்யுக்தா பகிரும் சுவாரசியம்

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

 Bleeding injury during filming; A nervous Dhanush-Samyukta sharing an interesting

 

நடிகர் தனுஷ் நடிப்பில் 'வாத்தி' படம் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கேரளத்து வரவு நடிகை சம்யுக்தா வாத்தி பட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்... 

 

இயக்குநர் கற்றுத் தருவதற்கு மேல் கேரக்டர் வடிவமைப்பில் நீங்களாக சேர்த்த விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா?

'வாத்தி' பட மீனாட்சி கேரக்டர் ஒரு டீச்சர். பொறுப்பான ஒரு டீச்சராகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஜாலியாகவும் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் இயக்குநர் எனக்கு மிகவும் உதவினார். இந்த கேரக்டரின் லுக் போன்ற விஷயங்களுக்காக எனக்கென்று ஒரு டீம் இருந்தது. முழுமையாக ஒரு டீச்சராக நான் தெரியவேண்டும் என்பதற்காக அந்த டீமோடு இணைந்து நானும் வேலை செய்தேன். 'வா வாத்தி' பாடல் வெளியான பிறகு பலர் இன்ஸ்டாகிராமில் அந்தப் பாடலை வைத்து ரீல்ஸ் செய்தனர். அதில் அந்தப் பாடலில் என்னுடைய லுக்கை அப்படியே பிரதிபலித்திருந்தனர். மக்களோடு கனெக்டாக வேண்டும் என்று நான் நினைத்தது நடந்தது. இதைத்தான் வெற்றியாக நான் கருதுகிறேன்.

 

தனுஷ் போன்ற சிறந்த நடிகரோடு நடிக்கும்போது ஆரம்பத்தில் பயம் இருந்ததா?

தனுஷ் ஒரே டேக்கில் சிறப்பாக நடிக்கக் கூடியவர். அதனால் ஒவ்வொரு சீனையும் முந்தைய நாளே கேட்டு வாங்கி நான் பாடம் செய்து கொள்வேன். முதல் ஷாட்டுக்கு முன்னால் ஒரு பயம் இருந்தது. இரண்டாம் பாதியில் உள்ள கடினமான ஒரு காட்சியுடன் தான் ஷூட்டிங் தொடங்கியது. கேட்டைத் திறந்து நான் உள்ளே செல்லும் காட்சி. நான் நடித்துக் கொண்டிருக்கும்போது தனுஷ் சார் 'கட் கட்' என்றார். கேட்டைத் திறக்கும்போது அதிலிருந்த ஊசி என்மேல் குத்தி ரத்தம் வழிந்தோடியது. அது தெரியாமல் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அவர் சொன்னவுடன் தான் எனக்கே தெரிந்தது. அதன் பிறகு மருத்துவரை அழைத்து சிகிச்சை கொடுத்தார்கள். தனுஷ் சாருடைய அன்பு அந்த நிகழ்வின் மூலம் தெரிந்தது.

 

செட்டில் தனுஷ் எப்படி இருப்பார்?

அவர் ரிகர்சல் செய்து நான் பார்த்ததே இல்லை. தன்னுடைய கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். ஷாட்டில் நாம் கொடுக்கும் ஆச்சரியங்களுக்கு ஈடுகொடுக்க அவர் எப்போதும் தயாராக இருப்பார். நமக்கும் முழு சுதந்திரம் கொடுப்பார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“முதன் முதலில் கலைஞர் என்னை பார்த்து இவ்வாறு அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது”- நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
actor Dhanush says  It was a surprise when the artist called me this for the first time

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது. 

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமே இல்லை. ஒரு படத்தின் பூஜையின் போது நான் முதல் முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கே வந்திருந்த கலைஞர் என்னை பார்த்து ‘வாங்க மன்மத ராஜா’ என்று கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா? என ஆச்சரியமாக இருந்தது. அதை பார்த்து நான் நெகிழ்ச்சி அடைந்தேன். 

ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பதை நம்ப முடியாது. கலைஞரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். யாராவது சொன்னால் தான் அவர் மறைந்து விட்டார் என்று நினைவுக்கு வரும். இப்பவும் அவர் நம் கூட வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியன் பூங்குன்றனார் சொல்லிருப்பார். ஆனால், நம்முடைய கலைஞர் 2000ல் ‘நான் என்று சொன்னால், உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும்’ என்று சொன்னார். நாமாக வாழ்வோம் நலமாக வாழ்வோம்” என்று பேசினார்.