Skip to main content

"அன்புச்செழியனுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்?" - வருத்தத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம்

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. உலகம் முழுவதும் 300 கோடி வரை இப்படம் வசூல் ஈட்டியதாக தகவல் வெளியானது.
 

bigil vijay

 

 

இந்நிலையில் சமீபத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திலும், நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பிகில் படத்திற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனம் அன்புச்செழியனிடம் ஃபைனான்ஸ் பெற்றிருக்கிறது என்று ஒரு செய்தி பரவியது.

நெய்வேலி ஷூட்டிங்கிலிருந்த விஜய்யை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அவருடைய வீட்டில் எந்தவித சொத்துக்களோ பணமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று அறிக்கை வெளியானது.
 

day night


ஏ.ஜி.எஸ் நிறுவன அலுவலகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற சோதனைக்கு பின்னர் முறைகேடான சொத்துக்கள் குறித்து எந்த ஆவணங்களும் கிடைக்காத நிலையில் அதிகாரிகள் சோதனையை முடித்துக்கொண்டனர். அச்சமயத்தில் ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சுமார் 77 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறையினர்.

இந்நிலையில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரத்தில் ஐடி ரெய்ட் குறித்து விசாரித்தபோது, “முதல் படத்திலிருந்தே  ஏ.ஜி.எஸ் நிறுவனம் வெளியே ஃபைனான்ஸ் வாங்காமல் தங்கள் பணத்திலிருந்துதான் படம் பண்ணுகிறார்கள். பிகிலும் கூட அப்படி தயாரிக்கப்பட்ட படம்தான். அன்புச்செழியனிடம் ஃபைனான்ஸ் வாங்கி இந்தப் படத்தை எடுக்கவில்லை. அவருக்கும் பிகில் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதேபோல ஐடி ரெய்டும் வழக்கமாக நடைபெறும் சோதனையாகவே இருந்ததே தவிர, எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால், வெளியே வேறு மாதிரி செய்திகள் வருவதால் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினர் வருத்தத்தில் இருக்கின்றனர்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

10 வருடம் கழித்து நடக்கும் பிரதீப் ரங்கநாதனின் ஆசை

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
pradeep ranganathan next with ashwanth marimuthu

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படத்தை 'ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்' தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2022ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. 

இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவகியது. அந்த சூழலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை லலித் தயாரிக்க கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

pradeep ranganathan next with ashwanth marimuthu

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஓ மை கடவுளே பட இயக்குநர் அஷ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மே முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிரதீப் ரங்கநாதனும் அஷ்வத் மாரிமுத்துவும் நண்பர்கள் எனவும் இரண்டு பேரும் 10 வருடங்களுக்கு முன்பே இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டதாகவும் அந்த நினைவுகளைப் பகிரும் வகையில் இந்த வீடியோவை எடுத்துள்ளனர். மேலும் 10 வருடத்திற்கு முன்னால் எடுத்த ஃபோட்டோவை ரீ கிரியேட் செய்து அதே இடத்தில் தற்போது ஃபோட்டோ எடுத்து பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

Next Story

'கோமாளி' பட இயக்குநரின் அடுத்த படத்திற்கு விஜய் பட டைட்டில்

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

comali movie director pradeep ranganathan next movie titled as 'love today'

 

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'கோமாளி'. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். சமூக கருத்துக்களை கொஞ்சம் காமெடி கலந்து பொழுது போக்கு படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 'ஏஜிஎஸ் ப்ரொடக்ஷன்' தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கி அதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு  பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'லவ் டுடே' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். 'லவ் டுடே' என்ற தலைப்பில் ஏற்கனவே விஜய் நடிப்பில் 1997-ஆம் ஆண்டு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.