Skip to main content

"சினிமாவில் ரெண்டு பேரை பிடிக்கும்... ஒருத்தர் சூப்பர் ஸ்டார்; இன்னொருத்தர்..." - நடிகர் அஷ்வின் குமார் பேச்சு!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Ashwin kumar

 

ட்ரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில், ஹரிஹரன் இயக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் நாயகனாக நடித்துள்ள படம் 'என்ன சொல்ல போகிறாய்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அஷ்வின் குமார், தேஜஸ்வினி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வில் பேசிய நடிகர் அஷ்வின், "இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி. உங்கள் அன்பால்தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்புதான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன். ஆனால் இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை. உங்கள் அன்பால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. நானும் உங்கள் இடத்தில் இருந்து வந்திருக்கிறேன் என் இடத்தில் இருந்து பார்த்தால்தான் உங்கள் அன்பு புரியும். என்ன சொல்லப் போகிறாய் படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையை பிரிக்கலாம். விஜய் டீவி என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்திருக்கிறது, அவர்களுக்கு நன்றி. ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தருமா என நினைத்துக்கூட பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப்படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நல்ல நண்பன் இருந்தால் உங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும்.

 

ad

 

ரவி சார் யாராயிருந்தாலும் அவர் ஆபீஸில் சாப்பாடு போடுவார். அவர் ஆபீஸில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். முதலில் அவர் சொன்ன கதையை வேண்டாம் எனக் கூறிவிட்டேன். பெரிய நிறுவன வாய்ப்பை மறுத்து விட்டோம் என வருத்தமாக இருந்தது. நீங்கள் என் மேல் அன்பு வைத்து என்னை பார்க்க வருகிறீர்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கிவிடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் தான். ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் அட்டகாசமான இசையை தந்திருக்கிறார்கள். நாயகிகள் இருவருமே மிகுந்த நட்புடன் நடித்து தந்தார்கள். படம் பார்க்க பிரமாண்டமாக வந்திருக்கிறது. புகழ் இந்தப்படத்தில் அழகாக இருக்கிறார். எனக்கு சினிமாவில் ரெண்டு பேரை பிடிக்கும் சூப்பர் ஸ்டார். அப்புறம் சிம்பு சார். அவர் போன் செய்து என்னை வாழ்த்தினார் அவருக்கு நன்றி. சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷானாக இருந்திருக்கிறார். அவரை நினைத்து தான் என் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருக்கிறேன். என்ன சொல்லப் போகிறாய் படத்தை நீங்கள் பார்த்து கொண்டாடுவதை காண ஆவலாக இருக்கிறேன்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஸ்வின் நடிக்கும் புதிய படம்

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

Ashwin Kumar next movie update

 

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்பு கடந்த ஆண்டு வெளியான 'என்ன சொல்ல போகிறாய்' படம் மூலம் ஹீரோவாக ஆனார். பின்பு 'மீட் கியூட்' என்ற தெலுங்கு ஆந்தாலஜி ஜானர் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'செம்பி' படத்தில் நடித்திருந்தார்.  

 

இதனைத் தொடர்ந்து அஸ்வின் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். ரொமாண்ட்டிக் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், அருள்நிதி நடிப்பில் உருவான 'தேஜாவு' திரைப்படத்தை இயக்கியவர். பின்பு இந்த படத்தை தெலுங்கில் 'ரிபீட்' என்ற தலைப்பிலும் ரீமேக் செய்திருந்தார். 

 

 

Next Story

மதம் சார்ந்த விவகாரம்; மன்னிப்பு கேட்ட பிரபு சாலமன்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

prabu solomon sembi movie press show issue

 

தமிழ் சினிமாவில் மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரபுசாலமன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'செம்பி'. இதில் அஷ்வின் குமார், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாளை (30.12.2022) வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புக் காட்சி இன்று நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரபு சாலமன். 

 

அப்போது படத்தின் இறுதிக் காட்சியில், “உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிரானிடத்திலும் அன்பு கூறுவாயாக இயேசு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்தவ மதத்தைத் திணிப்பதுபோல உள்ளது எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த பிரபு சாலமன், "அப்படி எந்த நோக்கத்திலும் நான் சொல்லவில்லை. சிறு வயதிலிருந்தே நான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன். அதில் பழக்கப்பட்டவன்." என்றார். குறுக்கிட்ட செய்தியாளர்கள், “படம் எடுத்தது நீங்கள். இயக்கம் பிரபு சாலமன் என்று குறிப்பிட்டிருக்கலாமே” என்றனர்.

 

இதற்குப் பதிலளித்த பிரபு சாலமன், "கிறிஸ்தவம் என்பது ஒரு மதமும் கிடையாது. மதத்தைப் பரப்ப இயேசுவும் வரக் கிடையாது. அன்பு மட்டும்தான் எங்களுடைய நோக்கம். அதைத்தான் சொல்லியிருக்கோம்" என்றார். பின்பு செய்தியாளர்களுக்கும் பிரபுசாலமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு பிரபு சாலமன், "உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.