Skip to main content

பிரபு சாலமனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

Ashwin Kumar

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பிரபு சாலமன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘காடன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிரபு சாலமன் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஷ்வின் நாயகனாக நடிக்க உள்ளார். கதாநாயகி பாத்திரம் இல்லாத இப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் மூலம் அஷ்வின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள நிலையில், அடுத்ததாக பிரபு சாலமனின் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிவரும் ‘ஓ மணப்பெண்ணே’ படத்திலும் அஷ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதம் சார்ந்த விவகாரம்; மன்னிப்பு கேட்ட பிரபு சாலமன்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

prabu solomon sembi movie press show issue

 

தமிழ் சினிமாவில் மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரபுசாலமன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'செம்பி'. இதில் அஷ்வின் குமார், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாளை (30.12.2022) வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புக் காட்சி இன்று நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரபு சாலமன். 

 

அப்போது படத்தின் இறுதிக் காட்சியில், “உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிரானிடத்திலும் அன்பு கூறுவாயாக இயேசு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்தவ மதத்தைத் திணிப்பதுபோல உள்ளது எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த பிரபு சாலமன், "அப்படி எந்த நோக்கத்திலும் நான் சொல்லவில்லை. சிறு வயதிலிருந்தே நான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன். அதில் பழக்கப்பட்டவன்." என்றார். குறுக்கிட்ட செய்தியாளர்கள், “படம் எடுத்தது நீங்கள். இயக்கம் பிரபு சாலமன் என்று குறிப்பிட்டிருக்கலாமே” என்றனர்.

 

இதற்குப் பதிலளித்த பிரபு சாலமன், "கிறிஸ்தவம் என்பது ஒரு மதமும் கிடையாது. மதத்தைப் பரப்ப இயேசுவும் வரக் கிடையாது. அன்பு மட்டும்தான் எங்களுடைய நோக்கம். அதைத்தான் சொல்லியிருக்கோம்" என்றார். பின்பு செய்தியாளர்களுக்கும் பிரபுசாலமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு பிரபு சாலமன், "உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது. 

 

 

Next Story

"நீங்கள் ஒரு நடிப்பு ராட்சசி" - கோவை சரளாவை புகழ்ந்த கமல்

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

kamalhaasan praises kovai sarala

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.  மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. 

 

இதனிடையே விக்ரம் படத்தின் வெற்றி பெற்றதற்காக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பிரபு சாலமன், கோவை சரளா, அஸ்வின் குமார் உள்ளிட்ட செம்பு படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது செம்பு படத்தின் ட்ரைலரை பார்த்து விட்டு படக்குழுவினரை வெகுவாக கமல் பாராட்டியுள்ளார். அத்துடன் செம்பி படத்தில் நடித்துள்ள கோவை சரளாவை நீங்கள் ஒரு நடிப்பு ராட்சசி  என்று கமல் புகழ்ந்துள்ளார்.