Skip to main content

பாலிவுட்டுக்கு சென்ற அமலா பால்!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

rtjjgf

 

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடித்துவரும் நடிகை அமலா பால் நடிப்பில் வெளியான ‘பிட்ட கதலு’ தெலுங்கு இணைய தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது, பிரபல கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்சன் வடிவில் உருவாகியிருக்கும் (Kudi Yedamaithe) 'குடி எடமைத்தே' தெலுங்கு இணைய தொடரில், குடிக்கு அடிமையான நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அமலா பால். இந்த இணைய தொடர் 'Aha' ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 16 அன்று வெளியானது. இதில் அமலா பாலின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இப்படம் குறித்து அமலா பால் பேசும்போது....

 

"நான் திரைத்துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் ஓய்வே இல்லாமல், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். எனது தனிவாழ்வில் நிறைய பிரச்சனைகளையும் கடந்து வந்திருக்கிறேன். சினிமா நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. இப்போது இந்த இடத்தில் இருப்பது மகிழ்ச்சியே. இனி எனக்கு சவால் தரும் பாத்திரங்களிலும், மிக நல்ல படைப்புகளிலும் நடிக்க விரும்புகிறேன். தற்போது என்னை நானே புதுப்பித்துக்கொண்டிருக்கிறேன். எனது நடிப்பிற்காக, தனித்த முறையில் பாராட்டுக்கள் கிடைத்துவருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிகுந்த கவனத்துடன்தான், நான் நடிக்கும் படைப்புகளைத் தேர்வு செய்துவருகிறேன். இப்போது நிறைய நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்துகொண்டிருக்கின்றன.

 

‘பிட்ட கதலு’ தொடர் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதன் இயக்குநர் நந்தினி மூலம்தான், இயக்குநர் பவன் குமார் அறிமுகமும், இந்த வாய்ப்பும் கிடைத்தது. சிக்கலில் சிக்கிக்கொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரி என்பதைத் தாண்டி, இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது எனக் கேட்டேன். இந்த துர்கா எனும் காவல் அதிகாரி பாத்திரம், குடிக்கு அடிமையாகி மீளத் துடிக்கும் பாத்திரம். அது எனக்கு இன்னும் சுவாரஸ்யமாக, சவால்கள் நிறைந்ததாக இருந்தது. பவன் குமார் மிகச்சிறந்த படைப்பாளி. அவரது எழுத்தும், அதை அவர் திரைக்கு மாற்றும் வித்தையும் அபாரமானதாக இருக்கிறது. முடிந்தவரை அனைத்தும் இயல்பாக, தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ரசிகர்களை வசப்படுத்தும் வித்தை அவருக்குத் தெரிந்திருக்கிறது. 

 

இந்த தொடரில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இது டைம் லூப் சயின்ஸ் ஃபிக்சன், ரசிகர்களுக்கு ஒரு புதிதான அனுபவமாக இருக்கும். இதுவரையிலும் இந்த தொடரைப் பார்த்த ரசிகர்கள் என் கதாபாத்திரத்தைக் கொண்டாடிவருவது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி. தற்போது பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் தயாரிப்பில், 1970 காதல் கதை ஒன்றில் நடித்திருக்கிறேன். அந்த தொடர் விரைவில் வெளிவரவுள்ளது. எனது சொந்த தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிவரும் 'Cadaver' திரைப்படமும் விரைவில் நிறைவுபெறவுள்ளது. இனி என்னை, நிறைய புதுமையான பாத்திரங்களில் நீங்கள் ரசிக்க முடியும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரம்மண்டமாக நடந்த அமலா பால் வீட்டு நிகழ்வு

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
amala paul baby showering photos

அமலா பால் தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை படம் பெற்று வருகிறது. இப்படத்தை தவிர்த்து தற்போது இரண்டு மலையாள படங்கள் கைவசம் வைத்துள்ளார். 

இதனிடையே கடந்த 2014ஆம்  ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின்பு 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பவ்நிந்தர் சிங்குடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியானது. மேலும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. ஆனால் இதை அமலா பால் அந்த புகைப்படங்கள் வெறும் ஃபோட்டோஷூட் தான் என மறுத்துவிட்டார். 

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். 

திருமணமான நான்கே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். அப்படி இருக்கும் நிலையில் கூட ஆடுஜீவிதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமானதை கணவருடன் பார்டி வைத்து கொண்டாடினார். அப்போது கணவருடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அமலா பாலுக்கு வளைகாப்பு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் நடந்த இந்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

Next Story

'இறைவனாய் தந்த இறைவியே…' - திருமண கோலத்தில் அமலா பால்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

 

 

அமலா பால், அவரது கடந்த பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். நேற்று நடந்த (05.11.2023) இந்த திருமணத்தில் மணமக்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.