Skip to main content

சர்ச்சைக்குள்ளான அமலாபால் புகைப்படங்களை வெளியிட தடை...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

simbu

 

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அமலாபால். விஜய்யுடன் 'தலைவா', தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி', விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்'  என முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ளார். 'ஆடை' படத்தில் உடையின்றி நடித்து பரபரப்பைக் கிளப்பினார். 

 

நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவர்களின் திருமண உறவு நீண்டநாள் நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு அமலா பால் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

 

இந்த நிலையில், கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங், தனக்கும் அமலா பாலுக்கும் திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி சிலபடங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். இதைத்தொடர்ந்து அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகக் பேசப்பட்டது. ஆனால், இதனை மறுத்த அமலா பால், தனக்கு இரண்டாவது திருமணம் ஆகவில்லை என்றார். அதைத்தொடர்ந்து, அந்தப் படங்களை பாடகர் பவ்னிந்தர் சிங் தனது சமூகவலைதள பக்கத்திலிருந்து நீக்கினார்.

 

இதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில், அமலாபால், பவ்னிந்தர் சிங் தன்னோடு எடுத்த புகைப்படங்களை வெளியிடத் தடைகோரியும், பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதி கேட்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனக்கும், அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி பவ்னிந்தர் சிங், அவரோடு தொழில் ரீதியாக எடுக்கப்பட்ட என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், என்னைப் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்குவதாகவும் உள்ளது. எனவே அந்தப் புகைப்படங்களை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பவ்னிந்தர் சிங் மீது வழக்குத் தொடர அமலா பாலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அமலா பால், பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

 

ஒரு வருடமாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம், நடிகை அமலாபாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்கிற்கு தடை விதித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரம்மண்டமாக நடந்த அமலா பால் வீட்டு நிகழ்வு

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
amala paul baby showering photos

அமலா பால் தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை படம் பெற்று வருகிறது. இப்படத்தை தவிர்த்து தற்போது இரண்டு மலையாள படங்கள் கைவசம் வைத்துள்ளார். 

இதனிடையே கடந்த 2014ஆம்  ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின்பு 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பவ்நிந்தர் சிங்குடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியானது. மேலும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. ஆனால் இதை அமலா பால் அந்த புகைப்படங்கள் வெறும் ஃபோட்டோஷூட் தான் என மறுத்துவிட்டார். 

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். 

திருமணமான நான்கே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். அப்படி இருக்கும் நிலையில் கூட ஆடுஜீவிதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமானதை கணவருடன் பார்டி வைத்து கொண்டாடினார். அப்போது கணவருடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அமலா பாலுக்கு வளைகாப்பு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் நடந்த இந்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

Next Story

'இறைவனாய் தந்த இறைவியே…' - திருமண கோலத்தில் அமலா பால்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

 

 

அமலா பால், அவரது கடந்த பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். நேற்று நடந்த (05.11.2023) இந்த திருமணத்தில் மணமக்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.