Skip to main content

சக நடிகருடன் காதல்; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை தற்கொலை! விசாரணையில் பகீர் தகவல்!

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

actress Tunisha Sharma case co actor Sheezan Khan statement

 

இந்தி திரையுலகில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை துனிஷா சர்மா. சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி ‘அலி பாபா தஸ்தான் இ காபூல்’ எனும் தொடருக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது படப்பிடிப்பின் இடைவெளியில் மேக்கப் அறைக்கு சென்ற துனிஷா சர்மா, நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் படக்குழுவினர் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். 

 

உடனே துனிஷா சர்மாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துனிஷா சர்மாவின் தாயார், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் துனிஷா சர்மா, சக நடிகரான சீசன் கானை காதலித்து வந்ததாகவும், அவரால்தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் துனிஷாவின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் பேரில் நடிகர் சீசன் கான் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையில் சீசன் கான், சமீபத்தில் டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த வழக்கின் பின்விளைவுகளை கண்டு, தான் காதலித்து வந்த நடிகை துனிஷா சர்மாவிடம் தனது உறவை முறித்துக்கொண்டதாக கூறியுள்ளார். இருவரும் வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்ததாலும் வயது வித்தியாசம் காரணத்தினாலும் ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில், அவருடன் உறவை முறித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். சீசன் கானுக்கு 28 வயது என்பதும், நடிகை துனிஷாவுக்கு 20 வயது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் சீசன் கான், துனிஷாவிடம் உறவை முடித்துக்கொண்ட பிறகு அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த நேரத்தில் அவரைக் காப்பாற்றி துனிஷாவின் தாயாரிடம் துனிஷாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியதாகவும் போலீசாரிடம் சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

இதனிடையே நடிகையின் தாயார், நடிகர் சீசன் தனது மகளை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். அதேசமயம், சீசனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தும், அவர் துனிஷாவுடன் தொடர்பைத் தொடர்ந்தார். இது ஒருகட்டத்திற்கு பிறகு சீசன், துனிஷா சர்மாவுடன் தனது உறவை முறித்துக் கொண்டார். அவளை மூன்று நான்கு மாதங்கள் பயன்படுத்தினார். சீசன் தண்டிக்கப்பட வேண்டும், அவரைத் தப்பவிடக் கூடாது" என வீடியோ வெளியிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.