Skip to main content

தர்ணாவில் ஈடுபட்ட நடிகை; விரட்டியடித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குடும்பத்தினர்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

actress shanthini protest infront of former minister manikandan house

 

முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் தொடர்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு பின்பு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. 

 

அதனைத் தொடர்ந்து  இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார்  351 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப் பத்திரிகையில் ஏற்கனவே மணிகண்டன் மீது இருந்த 2 வழக்குகளோடு 342, 352 என இரண்டு பிரிவுகளை சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.  இதே சமயத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மணிகண்டன் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டது நீதிமன்றம். இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டனின் பெற்றோர் வீட்டுக்கு முன்பு நடிகை சாந்தினி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மணிகண்டனின் குடும்பத்தினர் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சாந்தினி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரின் நலன் கருதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தவறை ஒப்புக்கொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன், எனக்கு செட்டில்மென்ட் செய்வதாக கூறினார். அதன் அடிப்படையில் வழக்கைத் திரும்பப் பெற்றேன்.

 

வழக்கை வாபஸ் பெற்ற அடுத்த நாள் முதல் அவர் தலைமறைவாகிவிட்டார். 3 மாதங்களுக்கு மேலாகியும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. தற்போது அவர் மதுரையில் இருப்பதைப் பார்த்து, அவரைத் தொடர்பு கொண்டபோது என்னை கார் அருகில் செல்லுமாறும் தான் அங்கு வருவதாகவும் கூறினார். அவர் வராததால் அவரது வீட்டிற்கு சென்றேன். அவரது தாய் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் இங்கு இல்லை என்று கூறி என்னை தாக்கினர். என்னிடம் வழக்கை வாபஸ் பெறுவதாக வாக்குறுதி அளித்தபடி அவர் நடக்க வேண்டும். அதற்கு அவர் முதலில் என்னை சந்திக்க வேண்டும், அதுவரை நான் ஓயமாட்டேன். எனக்கு நீதி வேண்டும் அதுவரை போராடுவதாக தெரிவித்தார். 

 

இதன் பிறகு பஜார் காவல் நிலைய போலீசார் அவரை அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நடிகை சாந்தினி காரில் மதுரையிலுள்ள மணிகண்டன் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றார். இதன் காரணமாக முன்னாள் அமைச்சர் வீட்டின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.