Skip to main content

“இந்தியத் தயாரிப்பாளர், பாகிஸ்தான் இயக்குநர்; இருவராலும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன்” - நடிகை குற்றச்சாட்டு

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

actress Mehreen Shah complaint against indian director raj gupta and Ahsan ali Zaidi

 

பாகிஸ்தான் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மெஹ்ரீன் ஷா. இவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்தியாவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த இயக்குநர் அஹ்சான் அலி ஜைதி ஆகியோரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன் எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

 

மேலும் அவர் பேசுகையில், "நான் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் எஹ்சான் அலி ஜைதி மற்றும் ராஜ் குப்தா ஆகியோருடன் ஒரு படப்பிடிப்புக்குச் சென்றிருந்தேன். அங்கு சென்றவுடன் இருவரின் நடத்தையும் முற்றிலும் மாறியது. அவர்களின் கோரிக்கையை நான் ஏற்க மறுத்ததால், அவர்கள் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றனர். அலி ஜைதி மற்றும் ராஜ் குப்தாவுடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்தது.

 

ஆனால், அவர்கள் இங்கு வேலை செய்ய வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்களா என்பது தெரியவில்லை. இந்தியத் தயாரிப்பாளர் ராஜ் குப்தா என்னிடம் நெருங்கிப் பழக முயன்றார். ஆனால், நான் திட்டவட்டமாக மறுத்ததால், அவரது பாணி முற்றிலும் மாறிவிட்டது. அவர் எனக்கு உணவு கூட கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, படப்பிடிப்பின் போது எனது உடல்நிலை மோசமடைந்தது. இன்னும் அவர் என்னைப் பார்க்கவில்லை.

 

இதையெல்லாம் சொல்வதன் நோக்கம் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே. நான் அஹ்சான் அலி ஜைதியுடன் முதல் முறையாக வேலை செய்கிறேன். இதே போல் வேறு எந்த நடிகைகளும் இவர்களால் பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமுடன் உண்மையை மக்களுக்குச் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் இவர்களுடன் எந்த நடிகையாவது பணிபுரிய விருப்பப்பட்டால் அவர்களை நான் எச்சரிக்க வேண்டும். 

 

அலி ஜைதி மற்றும் ராஜ் குப்தா ஆகியோர் இரவில் தங்கள் அறைகளில் பாலியலில் ஈடுபட அழைக்கிறார்கள். தற்போது பாகிஸ்தானுக்குத் திரும்ப டிக்கெட் கூட வழங்கப்படவில்லை. இருவரின் செயல்பாடுகளால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இவர்களை மீறி டிக்கெட் பதிவுசெய்தால் அதனை கேன்சல் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்திலும் உள்ளேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.