Skip to main content

பிரபல நடிகையின் 5ஜி வழக்கு; அபராத தொகையை குறைத்த உயர்நீதிமன்றம்

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

actress Juhi Chawla 5g case reduces fine delhi high court

 

1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற  ஜூஹி சாவ்லா பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிகை, தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட ஜூஹி சாவ்லா தற்போது ஷாருக்கானுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியின் முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.  

 

சமீபத்தில் நடிகை ஜூஹி சாவ்லா இந்தியாவில் 5ஜி சேவை அமல்படுத்தப்பட்டால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் பாதிக்கக்கூடும் எனக் கூறி அதை தடை செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததோடு நடிகை ஜூஹி சாவ்லாவிற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது.

 

இதனைத்தொடர்ந்து அபராதத்தை குறைக்க கோரி ஜூஹி சாவ்லா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அபராத தொகையை ரூ.2 லட்சமாக குறைத்ததுடன், நீதிபதி கூறிய கடுமையான வார்த்தைகளையும் நீக்கி உத்தரவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமலாக்கத்துறைக்கு எதிராக ஆம் ஆத்மி எம்.பி. வழக்கு

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Aam Aadmi MP's case against enforcement department

 

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியவை கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

 

அதே சமயம் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கின் டெல்லி வீட்டில் கடந்த 4 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து சஞ்சய் சிங், அமலாக்கத்துறையால் அன்றைய தினமே கைது செய்யப்பட்டார். இதனையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் சிங்கை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

 

இந்நிலையில் சஞ்சய் சிங் எம்.பி. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றம் தன்னைக் காவலில் வைக்க உத்தரவிட்டதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

 

Next Story

ஜெயிலர் படத்தில் சில காட்சிகளை நீக்குக - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

jailer movie rcb jersey issue

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.525 கோடி வசூலித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில் தற்போது ரூ.600 கோடியை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இப்படத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணியின் ஜெர்ஸியை குணச்சித்திர நடிகர்கள் அணிந்து வரும் காட்சியில், பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் ஒருவர் சில கருத்துக்களை பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதனால் தங்கள் அணிக்கு கலங்கம் ஏற்படும் வகையில் அக்காட்சி அமைந்துள்ளதாகவும் அணியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆர்சிபி அணி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த வழக்கு நீதிபதி பிரதிபா எம்.சிங் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சி அணிந்த காட்சிகளை நீக்கி திரையிட வேண்டும். மேலும் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு மற்றும் ஓடிடி தளங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.