Skip to main content

"அங்கிள் மிஸ் யூ ஸோ மச்" - நடிகை ஆர்த்தி உருக்கம்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

gdgdegse

 

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். இந்தநிலையில், இன்று (06/05/2021) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 74. 

 

பாண்டுவின் இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகை ஆர்த்தி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "பாண்டு அங்கிள் மிஸ் யூ ஸோ மச். நீங்கள் எங்களை மிகவும் சிரிக்க வைத்தீர்கள். நன்றி. ஆத்மா நமஸ்தே ஓம் சாந்தி" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அசிங்கப் பணி செய்த கயவனுக்கு அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" - நடிகை ஆர்த்தி கண்டனம்!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

fwfwgfwsgfws

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருவதையடுத்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாகக் கலந்துகொண்டது, மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் புகார்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட ராஜகோபாலன், தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

 

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இச்சம்பவத்தைக் கண்டித்து கருத்துத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், இதுகுறித்து நகைச்சுவை நடிகை ஆர்த்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆசிரியர் பணி, அறப்பணி என்பதை மறந்து அசிங்கப் பணி செய்த கயவனுக்கு அரசு கொடுக்கப்போகும் தண்டனை இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதபடி கடுமையானதாக அமைதல் வேண்டும். நாளைய தலைமுறையை உருவாக்கும் பள்ளிகளில் பாலியல் என்பதே பெரும் கேவலம். அதற்கு அந்தந்தப் பள்ளியே பொறுப்பேற்க வேண்டும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

"50 வருட உழைப்பு... தொண்டன் To CM" - நடிகை ஆர்த்தி பெருமிதம்!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

vfdfda

 

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்குப் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில், நடிகை ஆர்த்தி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "50 வருட உழைப்பு. தொண்டன் To CM. முடியாது என ஏளனம் செய்தவர்களின் முன் எடுத்துக்காட்டின் உதாரணமாக நிமிர்ந்து நிற்கிறீர். உளமார பெருமைகொள்கிறேன். இனி இந்த தமிழகமே உங்கள் குடும்பம். நல்லா பாத்துப்பீங்க. நம்பிக்கையிருக்கு" எனப் பதிவிட்டுள்ளார்.