Skip to main content

அஜித், விஜய் ரசிகர்களுக்கு நடிகர் பார்த்திபன் வேண்டுகோள்! 

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

நடிகர், இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகளுக்குப் புகழ் பெற்றவர். ஏதேனும் ஒரு விழாவுக்கு விருந்தினராக அழைக்கப்படும்போதே அங்கு தனது பேச்சு புதுமையாக, வித்தியாசமாக, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி இருக்கவேண்டுமென மெனக்கிடுபவர். அவர் பிறருக்கு அளிக்கும் பரிசுகளும் அப்படித்தான் மிகுந்த சிரத்தையெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்கும். இப்படி சிறிய விஷயங்கள் தொடங்கி, தான் இயக்கும் படங்கள் வரை தான் தனித்துவமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்து அதில் வெற்றி பெற்றவர் பார்த்திபன்.

 

parthiban



'புதியபாதை' தொடங்கி தற்போது 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வரை தான் இயக்கிய படங்களில் அந்தந்த காலத்தில் புதுமையான பல விஷயங்களை முயன்ற பார்த்திபன், அந்த புதுமை முயற்சிகளாலேயே நல்ல வெற்றிகளையும் பேரையும் பெற்றவர். அதே நேரம், அதனாலேயே மிகப்பெரிய தோல்விகளை அடைந்து பொருளையும் இழந்திருக்கிறார். இடையிடையே பிறர் படங்களில் நடித்தாலும் மீண்டும் மனம் தளராமல் தனது முயற்சியை தொடர்வார். அவர் கடைசியாக இயக்கிய 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வெற்றி பெறவில்லை. அதற்கு முந்தைய படமான 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படம் சிறப்பான வெற்றியை பெற்றது.

தற்போது 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார் பார்த்திபன். உலகிலேயே முதல் முறையாக ஒரே ஒருவர் நடித்து அவரே இயக்கியுள்ள படமாக 'ஒத்த செருப்பு சைஸ் 7' வெளிவர இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெயிலரை வெளியிடும்போது அதனுடன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.


வீடியோவில் பார்த்திபன் பேசியது... "சூப்பர்ஸ்டாரின் தர்பார், உலகநாயகனின் இந்தியன் 2, மிஸ்டர் விஜய்யின் பிகில், மிஸ்டர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை... இப்படி பிரமாண்டமான படங்கள் தயார் நிலையில் இருக்கும்போது ஒரே ஒருத்தர் நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற படமும் வெளிவர இருக்கிறது. படம் பார்த்துட்டு மூணாவது நாளாவது நாள் நல்லா இருக்கு என்று சொல்வதற்கு பதிலாக முதல் நாளே ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஒரே ஆள் இயக்கி நடித்ததால் மட்டுமே இதை நான் விருதுகளுக்கு அனுப்புகிறேன். ஆனால், இது ஜனரஞ்சமான ஒரு படமாகத்தான் இருக்கும். உலகில் இதுவரை பனிரெண்டு படங்கள் மட்டுமே ஒருவர் நடித்த படங்கள். அவற்றை விட என் படத்தில் என்ன சிறப்பு என்றால் நானே இப்படத்தை இயக்கியிருப்பதுதான். படத்தைப் பார்த்த பெண்கள் இறுதியில் கண்ணீரை அடக்கமுடியவில்லை என்றார்கள். அந்த அளவுக்கு எமோஷனலான உங்களுடன் கனெக்ட் ஆகக்கூடிய ஒரு படமாக இது இருக்கும். என் படத்தை நானேதான் கூவி விற்க வேண்டும். அந்தக் கூவலின் ஒரு பகுதிதான் இந்த ட்ரெயிலர்."

பார்த்திபனின் இந்த முயற்சி திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் படம் மக்களின் பார்வைக்கு வெளிவர இருக்கிறது.

 

 

           

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.