Skip to main content

"இதுபோன்ற நற்பணிகள் நான் செய்ய வேண்டிய கடமை" - கமல்ஹாசன் பேச்சு

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

68th birthday kamalhassan speech

 

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், கதையாசிரியர், நடனக்கலைஞர், பாடகர் என கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கமல்ஹாசன். இதுவரை 233 படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் அதிக தேசிய விருது வாங்கிய நடிகர் என்ற பெருமையைத் தக்கவைத்து வருகிறார். இந்திய அரசின் உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை வாங்கிய இவர். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதையும் வாங்கியுள்ளார். இதனிடையே 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சி தொடங்கி அதனை வழி நடத்தியும் வருகிறார். 

 

இந்நிலையில் தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் கமல்ஹாசன். இதனை முன்னிட்டு அவரது தொண்டர்கள் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொண்டு, பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் பேசுகையில், "பிறந்தநாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்குப் பெரிய நம்பிக்கை கிடையாது. வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும். அந்த ஒருநாள் தான் பிறந்தநாள். ஆனால் இதனைப் பெரிய கூட்டம் கூடிப் பண்ணுவதற்குக் காரணம், என் தோழர்களுக்கு இதை ஒரு காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்வதை வலியுறுத்தும் ஒரு வாய்ப்பாக நான் பார்க்கிறேன். இன்று பல இடங்களில் எனது ரசிகர்கள் நற்பணிகள் செய்து கொண்டு வருகிறார்கள். 

 

மய்யத்தின் சகோதரர்கள் அமெரிக்காவில் இருந்தும் சிறிய குக்கிராமங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 68 பள்ளிகளுக்குக் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். கழிப்பறைகள் முக்கியமா எனக் கேட்டால், அதுவும் முக்கியம் தான். அதாவது சுடுகாடும் முக்கியம், பிரசவம் பார்த்து சிகிச்சை பெரும் மருத்துவமனையும் முக்கியம். இது போன்ற நற்பணிகள் எல்லாம் நான் செய்ய வேண்டிய கடமைகள். எந்தப் பிரச்சனைக்கும் அரசாங்கத்தை எதிர்பார்ப்பதை விட நாம் அனைவருமே களத்தில் இறங்கி சரி செய்தால் அதுவே பெரிய நற்பணி. அதுவே ஒரு தேச சேவை. அந்த சேவையை 40 ஆண்டுகளாக என் தோழர்களை பழக்கி, அதனை அடுத்தகட்ட பயணத்திற்கும் தயார்படுத்தி வைத்திருக்கிறேன்.

 

எல்லாவற்றையும் கடந்து இன்றைய நாள் என்பது அவர்கள் இந்தியர்களாக, தமிழர்களாக நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் நாள். அதனை நினைவு கோரும் நாளாக பார்க்கிறேன். அதற்கு உறுதுணையாக நிற்பதே நான் பிறந்ததற்கான காரணம் என நான் நம்புகிறேன்" என்றார் கமல்ஹாசன்.    

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“உறையவைக்கும் காட்சிகள்” - பிரபலங்களின் பாராட்டில் ஆடுஜீவிதம் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
maniratnam kamal praised aadujeevitham movie

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடுஜீவிதம்’ நாவலை, அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாகச் சேர்கிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலியை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது. 

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகின்ற 28 ஆம் தேதி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரையிடலுக்கு பின் பலரும் படக்குழுவை பாராட்டிய நிலையில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 

கமல்ஹாசன் கூறுகையில், “இயக்குநர் பிளெஸ்ஸிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உண்மையாகவே கடின உழைப்பை கொடுத்துள்ளார். கேமராமேனும் சிரமப்பட்டுள்ளார். படக்குழு இவ்வளவு தூரம் செல்வார்கள் என நினைக்கவில்லை. சிறந்த படம் என படமெடுப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை மக்களும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்றார். மணிரத்னம், பேசுகையில், “உறையவைக்கும் காட்சிகள். ப்ரித்விராஜ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மொத்த படக்குழுவும் தான். எப்படி இப்படத்தை உருவாக்கினார்கள் என தெரியவில்லை. அவர்கள் மீது பொறாமை கொள்ளவில்லை. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்றார். 

Next Story

‘சண்டை, பிரிவு, அன்பு’ - லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Lokesh Kanagaraj, Shruti Haasan inimel song released

கமலின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் இசையில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘இனிமேல்’. இப்பாடலுக்கு கமல் வரிகள் எழுதியிருக்கும் நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். துவர்கேஷ் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தின் டீசர் கடந்த 21ஆம் தேதி வெளியானது. 

டீசரில் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் ரொமான்ஸில் இருக்கும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றது. இந்த டீசர் சமூக வலைத்தலங்களில் வைரலானது. மேலும் இருவரும் இணைந்து புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தனர். இன்று மாலை 4 மணிக்கு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி தற்போது இனிமேல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இருவரும் அறிமுகமாவதில் தொடங்கி, காதலர்களாக மாறி திருமணம் வரை சென்று, பின்பு சண்டை, பிரிவு, அன்பு என அனைத்தும் கலந்து சொல்லப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.