Skip to main content

பிடிக்காத மனைவியை வித்தியாசமான முறையில் கொன்ற கணவன் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 23

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

 thilagavathi-ips-rtd-thadayam-23

 

தனக்குப் பிடிக்காத மனைவியை வித்தியாசமான முறையில் கொன்ற கணவன் குறித்த வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்

 

உத்ரா என்கிற கோட்டயத்தைச் சேர்ந்த பெண் 2020 ஆம் ஆண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினர். பெற்றோருக்கு அதிர்ச்சி. மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அவர்கள் கூறினர். போஸ்ட்மார்ட்டத்தில் அந்தப் பெண்ணின் வயிற்றில் தூக்க மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாகப்பாம்பின் விஷம் ஏறி அந்தப் பெண் இறந்ததாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணின் தந்தை வசதியானவர். தாய் பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். இந்தப் பெண் பிறந்தபோது கற்றல் குறைபாடு இருப்பவராக இருந்தார். 

 

தங்களுடைய பெண்ணைக் குழந்தை போல் வைத்து பார்த்துக்கொள்ளும் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று பெற்றோர் முடிவு செய்தனர். சூரஜ் என்கிற பையன் வங்கியில் கிளார்க் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் அவரும் ஒரே பையன். அவருக்கு ஒரு தங்கையும் இருந்தார். அவருடைய தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். ஏழ்மையான குடும்பம் தான். அவர்கள் சம்பந்தம் பேச வந்தபோது மிகப்பெரிய வரதட்சணை கொடுக்க பெண் வீட்டார் தயாராக இருந்தனர். திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை வீட்டார் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். குழந்தை பிறந்தது.

 

வரதட்சணையையும் மீறி தொடர்ந்து பணம் கேட்டு பெண் வீட்டாரை அவர்கள் நச்சரித்துக்கொண்டே இருந்தனர். அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் வித்தியாசமான நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன. ஒருநாள் அவள் வீட்டில் பாம்பைப் பார்த்தாள். பாம்பு அகற்றப்பட்டது. அதன் பிறகு அவளுக்கு காலில் ஏதோ கடித்தது போன்று இருந்தது. கணவரிடம் கூறியபோது அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவளுக்கு வலி நிவாரண மாத்திரை கொடுப்பது போல் தூக்க மாத்திரை கொடுத்தார். ஆனாலும் அந்தப் பெண்ணால் வலி தாங்க முடியவில்லை. 

 

அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பெண்ணைப் பாம்பு கடித்தது தெரிந்தது. அவளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. டிஸ்சார்ஜ் ஆனவுடன் அந்தப் பெண் தன் குழந்தையுடன் தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்றாள். ஒருநாள் சூரஜ் அவளைப் பார்க்கச் சென்றபோது அந்தப் பெண்ணை நாகப்பாம்பு கடித்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவள் இறந்துவிட்டதாகக் கூறினர். மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீஸ் விசாரணை தொடங்கியது. நடந்த அனைத்தும் போலீசுக்கு தெரியப்படுத்தப்பட்டது. 

 

தாய் வீட்டில் இருக்கும்போது பாம்பு கடித்ததற்கு தான் என்ன செய்ய முடியும் என்று சூரஜ் வாதிட்டான். ஜன்னல் வழியே பாம்பு வந்திருக்கலாம் என்று அவனுடைய தாய் கூறினார். பெண்ணின் வயிற்றில் மாத்திரை இருந்ததால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றுதான் என்று போலீசார் நினைத்தனர். சூரஜ் ஒரு வருடம் மட்டுமே அந்தப் பெண்ணுடன் நிம்மதியாக வாழ்ந்தான் என்பது விசாரணையில் தெரிந்தது. விஷமுள்ள பாம்புகள் குறித்து கூகுளில் அவன் அதிகம் தேடியது தெரிந்தது. பாம்பு பிடிக்கும் ஒருவரின் மூலம் சூரஜ் பாம்பைப் பெற்றது தெரிந்தது. அந்தப் பெண்ணுக்கு தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கும்போது பாம்பை விட்டு கடிக்க வைத்திருக்கிறான் சூரஜ்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சயனைடு கொண்டு பெண்கள் கொலை; கோர்ட்டில் தானே வாதாடிய கொலையாளி - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 36

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-36

 

சயனைடு கொடுத்து இளம்பெண்களைக் கொலை செய்த கொலைகாரனின் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

 

தொடர்ச்சியாக பெண்களை கொலை செய்த கொலைகாரனை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. அங்கே சயனைடு மோகன்குமார் தன்னுடன் சிறையில் இருக்கும் சிறைவாசிகளுக்கு தான் ஆங்கிலம் கற்பிக்க விரும்புவதாக ஒருமுறை அவன் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினான். சேவை மனப்பான்மை உள்ளவன் போல் தன்னை அவன் காட்டிக்கொண்டான். இவனா கொலை செய்திருப்பான் என்று எல்லோரையும் யோசிக்க வைக்கும் அளவுக்கு நல்லவனாக காட்டிக் கொண்டிருந்திருக்கிறான்.

 

அனிதா காணாமல் போனபோது தேடியதால் சிக்கியவன், அதற்கு முன்னே சுனந்தா என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவளுடைய பெற்றோரிடம் அவன் ஒருமுறை கேட்டிருக்கிறான். வரதட்சணை எதுவும் வேண்டாம் என்றிருக்கிறான். திருமணம் செய்த பிறகு அந்தப் பெண்ணை சயனைடு கொடுத்து அவன் கொன்றான். எந்தக் கொலையையும் அவன் செய்யவில்லை என்று போலீசாரிடம் பொய் கூறினான்.

 

அனிதா என்ற ஒரு பெண்ணையும் இவன்தான் கொலை செய்தான் என்பதை மக்களிடம் காவல்துறை தெரிவித்தது. காவல்துறையிலும் பல பெண்கள் இவனால் பாதிக்கப்பட்டிருந்தனர். தொடர் கொலைகளில் அவன் ஈடுபட்டிருக்கிறான். அவன் மீது 20 வழக்குகள் பதியப்பட்டன. ஒவ்வொரு வழக்கிலும் அவனுக்கு ஒவ்வொரு விதமான தீர்ப்பு வழங்கப்பட்டது. தன்னுடைய வழக்கைத் தானே வாதாட அவன் முடிவு செய்தான். அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த பெண்களிடம் குறுக்கு விசாரணை செய்து அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நிறுவ முயன்றான். 

 

ஒரு கீழமை நீதிமன்றத்தில் இவனுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். அங்கு வந்த தீர்ப்பை எதிர்த்து டிவிஷன் பெஞ்சுக்கு சென்றான். அவன் செய்த சில குற்றங்களுக்கு உறுதியான சாட்சியங்களும் தடயங்களும் இல்லை என்று கூறிய நீதிமன்றம், அந்த சந்தேகத்தின் பலனை அவனுக்கு வழங்கி, தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை வழங்கியது. எந்தவிதமான தண்டனைக் குறைப்பையும் அவனுக்கு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. 

 

அவன் ஆயுள் முழுவதும் சிறைக்குள்ளேயே இருப்பதுதான் சரி என்று நீதிமன்றம் முடிவு செய்தது. கடைசிவரை அவன் தன்னுடைய குற்றங்களை ஒப்புக்கொள்ளவே இல்லை. அனைத்து பெண்களும் தாங்களாகவே தற்கொலை செய்துகொண்டனர் என்றும், தான் யாரையும் கொல்லவில்லை என்றும் இறுதிவரை அவன் கூறினான். அவனுக்கு பல மனைவிகள் இருந்தாலும், ஸ்ரீதேவி என்கிற இளைய மனைவி மீது அவனுக்கு அதிக அன்பு இருந்தது. அவன் செய்த குற்றங்களை அந்தப் பெண் நம்பவே இல்லை. கர்நாடகாவையே உலுக்கிய ஒரு வழக்கு இது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

காணாமல் போன இளம்பெண்கள்; பூட்டிய கழிவறைக்குள் உடல்கள் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 35

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-35

 

இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

 

2009 ஆம் ஆண்டு அனிதா பார்மர் என்கிற 22 வயது பெண் காணாமல் போனார். ஆண்களோடு பேசுவதைக் கூட பாவம் என்று நினைக்கும் சமுதாயம் அவருடையது. அந்தப் பெண் ஒரு இஸ்லாமிய இளைஞனுடன் ஓடிப்போனார் என்கிற தகவல் பரப்பப்பட்டது. இது ஒரு லவ் ஜிகாத் என்கிற செய்தியைப் பரப்பினர். மக்கள் அனைவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அது ஒரு போராட்டமாகவே மாறியது. குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஒரு மாதம் டைம் வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டனர். பேச்சுவார்த்தை முடிந்தது.

 

சிறப்புப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. அனிதாவின் போன் ரெக்கார்டுகளை சோதித்தபோது ஒரு குறிப்பிட்ட நபருடன் அவர் அதிகம் பேசியது தெரிந்தது. காவேரி என்கிற இன்னொரு பெண் தான் அது. காவேரியை ஒருவருடமாகக் காணவில்லை என்று தகவல் கிடைத்தது. புஷ்பா என்கிற பெண்ணுடன் காவேரி அதிக நேரம் போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. புஷ்பாவையும் காணவில்லை. புஷ்பாவின் போனில் வினுதா என்கிற பெண்ணின் நம்பர் கிடைத்தது. அவரைத் தேடியபோது அவரையும் காணவில்லை. 

 

காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. காவேரி என்கிற பெண்ணின் போன் திடீரென செயல்பாட்டுக்கு வந்து அதன் பிறகு ஆஃப் ஆனது. எங்கிருந்து போன் செயல்பட்டது என்பதை ஆராய்ந்து விலாசத்தைக் கண்டுபிடித்து போலீசார் நேரில் சென்றனர். அங்கு தனுஷ் என்கிற இளைஞர் இருந்தார். மோகன் குமார் என்கிற தன்னுடைய மாமா தான் இந்த போனை தன்னிடம் கொடுத்தார் என்று அவர் கூறினார். மோகன் குமார் என்பவர் சுமித்ரா என்கிற பெண்ணிடம் போனில் அதிகம் பேசி வந்தார் என்பது தெரிந்தது. 

 

சுமித்ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமித்ராவை வைத்து மோகன் குமாரை வரவழைக்க திட்டம் தீட்டப்பட்டது. சொன்னபடி அவர் ஒரு இடத்துக்கு வந்தார். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அவன் தான் குற்றவாளி என்பது தெரிந்தது. நடந்த அனைத்தையும் அவன் சொன்னான். இதுவரை 32 கொலைகள் செய்தவன் அவன். தன்னுடைய 20 வயதில் பள்ளியில் வாத்தியாராக அவன் வேலைக்குச் சேர்ந்தான். அங்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மேரி என்கிற பெண்ணைக் காதலித்து, அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து திருமணம் செய்துகொண்டான். பேங்கிங் துறை உட்பட பல்வேறு வகைகளில் அவன் குற்றங்கள் செய்து வந்தான். 

 

ஒரு பெண்ணை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொல்ல முயற்சி செய்தபோது மக்கள் அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்தப் பெண் தானாகவே குதித்தார் என்று அவன் சொன்ன பொய் சாட்சியை நீதிமன்றம் நம்பி அவனை விடுதலை செய்தது. அதன் பிறகு தான் அவனுக்கு அதீதமான தைரியம் உருவானது. இன்னொரு பெண்ணை அவன் திருமணம் செய்துகொண்டான். ஸ்ரீதேவி என்கிற இன்னொரு பெண்ணையும் அதற்கடுத்து திருமணம் செய்துகொண்டான். திடீரென கர்நாடகாவில் உள்ள பல பஸ் நிலையங்களுக்கு அருகில் இருக்கும் கழிவறைகளில் பெண்கள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்தன. 

 

எளிமையான பெண்களே தன்னுடைய குறியாக இருப்பார்கள் என்று அவன் வாக்குமூலம் கொடுத்தான். பெண்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திவிட்டு, அவர்களுக்கு மாத்திரை என்கிற பெயரில் சயனைடு கொடுத்து கழிவறைக்கு செல்லச் சொல்லி, அங்கு அவர்கள் இறந்துபோவதைக் கண்டு ரசிப்பான். இதே முறையைத் தான் அனைத்து பெண்களிடமும் அவன் கையாண்டுள்ளான். இவ்வளவு செய்த பிறகும் அவனை அவனுடைய குடும்பத்தினர் நல்லவன் என்றே நம்பி வந்துள்ளனர்.  

 

(காவல்துறையால் கைது செய்யப்பட்ட சயனைடு மோகன்குமார் தண்டனை என்னவானது என்பதை அடுத்த பகுதியில் காணலாம்).


- தொடரும்

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்