Skip to main content

குடும்பத்தையே கொலை செய்த இளம்பெண்; கூடத்தாய் வழக்கு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 04

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 04

 

கேரளாவையே உலுக்கிய கூடத்தாய் கொலை வழக்கு பற்றிய திடுக்கிடும் தகவல்களை தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

 

ஜாலி கொடுத்த பிரட்டை உண்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிரட் தொண்டையில் சிக்கியதால் தான் குழந்தை உயிரிழந்ததாக அனைவரும் நம்பினர். சாஜு என்பவரோடு ஜாலிக்குப் பழக்கம் இருந்தது. அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாள். அந்த இரண்டு வயது குழந்தை பிற்காலத்தில் தனக்குப் பிரச்சனையாக வந்துவிடக்கூடாது என்று அதையும் கொன்று விடுகிறாள் ஜாலி. சாஜுவின் மனைவியிடமும் அவள் அன்பாகப் பழகினாள். 

 

ஒருமுறை மாத்திரை போடத் தண்ணீர் வேண்டும் என்று சாஜுவின் மனைவி கேட்டபோது ஜாலி தன்னுடைய பையில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள். அதைக் குடித்தவுடன் வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தார் சாஜூவின் மனைவி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அதன் பிறகு சில மாதங்களில் சாஜுவை ஜாலி திருமணம் செய்துகொண்டாள். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

இந்தக் கொலைகளில் ஜாலி தவிர வேறு யாருக்காவது சம்பந்தம் இருக்குமா என்கிற ரீதியிலும் போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். பல்வேறு முயற்சிகளின் மூலம் சிலரின் உதவியுடன் சைனைட் ஜாலியின் கைக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர். உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் மூலம் குடும்ப சொத்துக்களைத் தன் பெயருக்கு ஜாலி மாற்றி எழுதிக்கொண்டதும் தெரிந்தது. அனைவருமே குற்றவாளிகளாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். ஜாலி சிறையில் அடைக்கப்பட்டாள். 

 

ஜாலியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தான் செய்த குற்றங்கள் அனைத்தையும் போலீசாரிடம் ஜாலி ஒப்புக்கொண்டாள். கோழிக்கோடு பகுதியிலிருந்து ஜாலிக்காக வாதாட யாரும் முன்வரவில்லை. அந்த சமயத்தில் புனேவிலிருந்து வினு ஆண்டனி என்ற வழக்கறிஞர் வந்தார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர் தான். சமீபத்தில் கேரள நடிகை ஒருவரை நடிகர் ஒருவர் அடியாட்கள் மூலம் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், குற்றம் செய்த நடிகரின் சார்பில் ஆஜராகி அவர் வெளியே வர உதவியவர் தான் இந்த வினு ஆண்டனி. அவர்தான் ஜாலியின் சார்பில் ஆஜரானார்.

 

இந்த வழக்குக்காக கொல்லப்பட்டவர்களின் கல்லறைகள் மீண்டும் திறக்கப்பட்டன. கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியதாக ஜாலி கூறியதும் பொய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய கல்வி குறித்து ஜாலி அதுவரை சொல்லி வந்தவையும் பொய் என்பது தெரிந்தது. இன்னமும் சிறையில் இருக்கும் ஜாலி, இடையில் ஒருமுறை சிறையிலேயே தற்கொலை செய்யவும் முயன்றிருக்கிறாள். இனி ஜாலியுடன் வாழ்வதற்கு தனக்கு பயமாக இருக்கிறது என்று சாஜுவும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.


 

 

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.