Skip to main content

கடற்கரை காதலர்களிடம் கைவரிசை காட்டிய கும்பல் - ஏசி ராஜாராம் பகிரும் தடயம்: 10

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

rtrd-ac-rajaram-thadayam-10

 

தனியாக இருக்கும் காதலர்களுக்கு திருவான்மியூர் கடற்கரையில் நடக்கும் சிக்கல்களைக் குறித்தான சம்பவங்கள் பற்றி ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் விவரிக்கிறார்.

 

இப்பொதெல்லாம் இந்த சிக்கல் இல்லை. ஆனால் திருவான்மியூர் கடற்கரையில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் காதலர்களிடம் மிரட்டி நகை, பணம் கொள்ளையடிப்பது தொடர்ச்சியாக நடந்து வந்தது. 1998 கால கட்டத்தில் திருவான்மியூர் பீச்சில் காதலர்கள் சந்திக்கும் பொழுது அவர்களிடம் நகை முதலானவற்றை சில கும்பல் கொள்ளை அடித்து பறித்து வந்துள்ளது. சில  நேரங்களில் அது பாலியல் சீண்டலாகக் கூட மாறியுள்ளது. காதலர்கள் வீட்டிற்குத் தெரியாமல் வருவதால் போலீஸில் புகாரும் அளிக்கவில்லை. எனவே தான் இந்த கும்பல் சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வந்துள்ளது.  

 

அந்த கும்பல், கடற்கரையோரத்தில் உட்காரும் காதலர்களிடம் கைவரிசை காட்டுவதாகவும், மாட்டிக்கொண்டால் எளிதில் தப்பிக்க உடலில் எண்ணெய் தடவியிருப்பார்கள் பிடியில் சிக்காமல் நழுவி சென்று விடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்தநிலையில், காவலர் நால்வர் கொண்ட குழு ஒன்று அமைத்து இதைக் கண்டறிய திட்டமிடப்பட்டது. நான்கு காவலர்கள் மாறு வேடத்தில் ஒரு நாள் கடற்கரையை நோட்டம் விட சென்றுள்ளனர். அப்போது, காதலர்களிடம் கத்தியை காட்டி ஒருவர் மிரட்டிக் கொண்டிருந்துள்ளார். 

 

பின்னர் எழுந்த கூச்சலைக் கேட்டு அருகில் இருந்த காவலர்கள் விரைந்து அவனைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர். அதில், அவன் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் தெரிய வந்தது. மற்றும் அவனது இரு நண்பர்களும் இந்த கைவரிசை காட்டுவதற்கு பின்னால் உதவி  இருப்பதும் தெரிய வந்தது. அவர்களையும் அழைத்து வந்து விசாரிக்கையில், கரையில் நிற்கும் வாகனங்களையும், மணலில் இருக்கும் காதலர்களிடம் கொள்ளை அடிப்பதாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். 

 

காதலர்கள் தங்கள் உடைமைகளை தரமறுத்தால், அவர்கள் தாக்கப்படுவதும் உண்டு. இந்தக் கும்பலின் பாணியே தனியாக இருக்கும் காதலர்களிடம் கொள்ளையடிப்பது தான். தொடர்ந்து இவர்கள் பத்து சம்பவத்தில் சுமார் 25 சவரன் நகைகள் வரை திருடியதாக அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், இரு சக்கர வாகனங்களும் காவல்துறையினர் கைப்பற்றினர். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சயனைடு கொண்டு பெண்கள் கொலை; கோர்ட்டில் தானே வாதாடிய கொலையாளி - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 36

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-36

 

சயனைடு கொடுத்து இளம்பெண்களைக் கொலை செய்த கொலைகாரனின் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

 

தொடர்ச்சியாக பெண்களை கொலை செய்த கொலைகாரனை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. அங்கே சயனைடு மோகன்குமார் தன்னுடன் சிறையில் இருக்கும் சிறைவாசிகளுக்கு தான் ஆங்கிலம் கற்பிக்க விரும்புவதாக ஒருமுறை அவன் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினான். சேவை மனப்பான்மை உள்ளவன் போல் தன்னை அவன் காட்டிக்கொண்டான். இவனா கொலை செய்திருப்பான் என்று எல்லோரையும் யோசிக்க வைக்கும் அளவுக்கு நல்லவனாக காட்டிக் கொண்டிருந்திருக்கிறான்.

 

அனிதா காணாமல் போனபோது தேடியதால் சிக்கியவன், அதற்கு முன்னே சுனந்தா என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவளுடைய பெற்றோரிடம் அவன் ஒருமுறை கேட்டிருக்கிறான். வரதட்சணை எதுவும் வேண்டாம் என்றிருக்கிறான். திருமணம் செய்த பிறகு அந்தப் பெண்ணை சயனைடு கொடுத்து அவன் கொன்றான். எந்தக் கொலையையும் அவன் செய்யவில்லை என்று போலீசாரிடம் பொய் கூறினான்.

 

அனிதா என்ற ஒரு பெண்ணையும் இவன்தான் கொலை செய்தான் என்பதை மக்களிடம் காவல்துறை தெரிவித்தது. காவல்துறையிலும் பல பெண்கள் இவனால் பாதிக்கப்பட்டிருந்தனர். தொடர் கொலைகளில் அவன் ஈடுபட்டிருக்கிறான். அவன் மீது 20 வழக்குகள் பதியப்பட்டன. ஒவ்வொரு வழக்கிலும் அவனுக்கு ஒவ்வொரு விதமான தீர்ப்பு வழங்கப்பட்டது. தன்னுடைய வழக்கைத் தானே வாதாட அவன் முடிவு செய்தான். அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த பெண்களிடம் குறுக்கு விசாரணை செய்து அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நிறுவ முயன்றான். 

 

ஒரு கீழமை நீதிமன்றத்தில் இவனுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். அங்கு வந்த தீர்ப்பை எதிர்த்து டிவிஷன் பெஞ்சுக்கு சென்றான். அவன் செய்த சில குற்றங்களுக்கு உறுதியான சாட்சியங்களும் தடயங்களும் இல்லை என்று கூறிய நீதிமன்றம், அந்த சந்தேகத்தின் பலனை அவனுக்கு வழங்கி, தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை வழங்கியது. எந்தவிதமான தண்டனைக் குறைப்பையும் அவனுக்கு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. 

 

அவன் ஆயுள் முழுவதும் சிறைக்குள்ளேயே இருப்பதுதான் சரி என்று நீதிமன்றம் முடிவு செய்தது. கடைசிவரை அவன் தன்னுடைய குற்றங்களை ஒப்புக்கொள்ளவே இல்லை. அனைத்து பெண்களும் தாங்களாகவே தற்கொலை செய்துகொண்டனர் என்றும், தான் யாரையும் கொல்லவில்லை என்றும் இறுதிவரை அவன் கூறினான். அவனுக்கு பல மனைவிகள் இருந்தாலும், ஸ்ரீதேவி என்கிற இளைய மனைவி மீது அவனுக்கு அதிக அன்பு இருந்தது. அவன் செய்த குற்றங்களை அந்தப் பெண் நம்பவே இல்லை. கர்நாடகாவையே உலுக்கிய ஒரு வழக்கு இது.

 

 

Next Story

காணாமல் போன இளம்பெண்கள்; பூட்டிய கழிவறைக்குள் உடல்கள் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 35

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-35

 

இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

 

2009 ஆம் ஆண்டு அனிதா பார்மர் என்கிற 22 வயது பெண் காணாமல் போனார். ஆண்களோடு பேசுவதைக் கூட பாவம் என்று நினைக்கும் சமுதாயம் அவருடையது. அந்தப் பெண் ஒரு இஸ்லாமிய இளைஞனுடன் ஓடிப்போனார் என்கிற தகவல் பரப்பப்பட்டது. இது ஒரு லவ் ஜிகாத் என்கிற செய்தியைப் பரப்பினர். மக்கள் அனைவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அது ஒரு போராட்டமாகவே மாறியது. குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஒரு மாதம் டைம் வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டனர். பேச்சுவார்த்தை முடிந்தது.

 

சிறப்புப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. அனிதாவின் போன் ரெக்கார்டுகளை சோதித்தபோது ஒரு குறிப்பிட்ட நபருடன் அவர் அதிகம் பேசியது தெரிந்தது. காவேரி என்கிற இன்னொரு பெண் தான் அது. காவேரியை ஒருவருடமாகக் காணவில்லை என்று தகவல் கிடைத்தது. புஷ்பா என்கிற பெண்ணுடன் காவேரி அதிக நேரம் போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. புஷ்பாவையும் காணவில்லை. புஷ்பாவின் போனில் வினுதா என்கிற பெண்ணின் நம்பர் கிடைத்தது. அவரைத் தேடியபோது அவரையும் காணவில்லை. 

 

காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. காவேரி என்கிற பெண்ணின் போன் திடீரென செயல்பாட்டுக்கு வந்து அதன் பிறகு ஆஃப் ஆனது. எங்கிருந்து போன் செயல்பட்டது என்பதை ஆராய்ந்து விலாசத்தைக் கண்டுபிடித்து போலீசார் நேரில் சென்றனர். அங்கு தனுஷ் என்கிற இளைஞர் இருந்தார். மோகன் குமார் என்கிற தன்னுடைய மாமா தான் இந்த போனை தன்னிடம் கொடுத்தார் என்று அவர் கூறினார். மோகன் குமார் என்பவர் சுமித்ரா என்கிற பெண்ணிடம் போனில் அதிகம் பேசி வந்தார் என்பது தெரிந்தது. 

 

சுமித்ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமித்ராவை வைத்து மோகன் குமாரை வரவழைக்க திட்டம் தீட்டப்பட்டது. சொன்னபடி அவர் ஒரு இடத்துக்கு வந்தார். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அவன் தான் குற்றவாளி என்பது தெரிந்தது. நடந்த அனைத்தையும் அவன் சொன்னான். இதுவரை 32 கொலைகள் செய்தவன் அவன். தன்னுடைய 20 வயதில் பள்ளியில் வாத்தியாராக அவன் வேலைக்குச் சேர்ந்தான். அங்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மேரி என்கிற பெண்ணைக் காதலித்து, அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து திருமணம் செய்துகொண்டான். பேங்கிங் துறை உட்பட பல்வேறு வகைகளில் அவன் குற்றங்கள் செய்து வந்தான். 

 

ஒரு பெண்ணை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொல்ல முயற்சி செய்தபோது மக்கள் அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்தப் பெண் தானாகவே குதித்தார் என்று அவன் சொன்ன பொய் சாட்சியை நீதிமன்றம் நம்பி அவனை விடுதலை செய்தது. அதன் பிறகு தான் அவனுக்கு அதீதமான தைரியம் உருவானது. இன்னொரு பெண்ணை அவன் திருமணம் செய்துகொண்டான். ஸ்ரீதேவி என்கிற இன்னொரு பெண்ணையும் அதற்கடுத்து திருமணம் செய்துகொண்டான். திடீரென கர்நாடகாவில் உள்ள பல பஸ் நிலையங்களுக்கு அருகில் இருக்கும் கழிவறைகளில் பெண்கள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்தன. 

 

எளிமையான பெண்களே தன்னுடைய குறியாக இருப்பார்கள் என்று அவன் வாக்குமூலம் கொடுத்தான். பெண்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திவிட்டு, அவர்களுக்கு மாத்திரை என்கிற பெயரில் சயனைடு கொடுத்து கழிவறைக்கு செல்லச் சொல்லி, அங்கு அவர்கள் இறந்துபோவதைக் கண்டு ரசிப்பான். இதே முறையைத் தான் அனைத்து பெண்களிடமும் அவன் கையாண்டுள்ளான். இவ்வளவு செய்த பிறகும் அவனை அவனுடைய குடும்பத்தினர் நல்லவன் என்றே நம்பி வந்துள்ளனர்.  

 

(காவல்துறையால் கைது செய்யப்பட்ட சயனைடு மோகன்குமார் தண்டனை என்னவானது என்பதை அடுத்த பகுதியில் காணலாம்).


- தொடரும்