Skip to main content

ஆறு கோடி இன்சூரன்ஸ்; அதிகாரிகளை ஏமாற்ற நடந்த நாடகம் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 28

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
rajkumar-solla-marantha-kathai-28

நண்பர்கள் மூவர் இணைந்து போலி லைப் இன்சூரன்ஸ் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

கடந்த வருடம் பேப்பரில் வந்த பிரபலமான வழக்கு இது. அந்த நபர் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில் வேலை செய்து கொண்டிருந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புகிறார்.

வந்தவர் ஆறு  கோடி ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் வாங்குகிறார். மூன்று நண்பர்களுடன்  சேர்ந்து திட்டம் செய்கின்றனர். அதாவது அவரைப் போலவே உள்ள போலி நபர் ஒருவரை கொலை செய்து இறந்ததாக லைஃப் இன்சூரன்ஸ் வாங்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே போலி நபரை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பாம்பாட்டியை வைத்து பாம்பை கடிக்க வைத்து அந்த நபரை கொன்று விடுகின்றனர்.  

இன்னொரு கூடுதல் போலி நபர் இறந்த உடலை வாங்குகிறார். இறந்த நபரை வைத்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்க வருகிறார்கள்.  எங்கள் கம்பெனி இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கிறது. எதற்காக அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார், ஏன் பாலிசி எடுத்த மூன்று மாதத்தில் இறந்தார் என்று விசாரித்தோம். பாலிசி எடுத்த உண்மையான அமெரிக்கா நபர் காணவும் இல்லை. அந்த உடலை வாங்கியவர் தன்னை நாமினியில் போட்டிருக்கிறார். 

ஆனால் எல்லாமே முரண்பாடாக இருந்ததில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பின்னர் விசாரித்ததில் இறந்தது நிஜ நபரும் இல்லை, பாடியை வாங்கியவரும் போலி. உண்மையான நபர் ஏற்கெனவே இறந்தும் வேறு இருக்கிறார் என்று தெரியவந்தது. மூன்று போலிகள் சேர்ந்து இந்த போலி இன்சூரன்ஸ் நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடித்த போலீஸ், விசாரணைக்கு உட்படுத்தி எல்லாரையும் கைது செய்து ரிமாண்டும் செய்து விட்டனர். இந்த வழக்கு இன்னும் ட்ரயலில் தான் இருக்கிறது. 

Next Story

கொள்ளை அடித்து உதவி; மும்பையை கலக்கிய பெண் தாதா - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 27

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rajkumar-solla-marantha-kathai-27

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கொள்ளை அடித்து உதவும் ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

மும்பையில் (money in Transit) என்று சொல்லப்படும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இது.  75 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்க எடுத்து செல்கிறது. அந்த வண்டியை மறித்து ஒரு மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தும், யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதீப் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்து விசாரிக்கின்றனர். விசாரணையில், கிரிஷ்மா என்ற பெண்ணின் அறிவுரையின் பேரில் இந்த கொள்ளைகள் நடந்ததாக தெரியவந்தது. கிரிஷ்மா காட்கோபரில் வசித்து வந்தார். அவருக்கு பல வாகனங்கள் மற்றும் பங்களாக்கள் இருந்தன. அந்த பகுதியில் பெரிய ஆளாக மக்கள் பலருக்கு உதவி செய்பவராக இருக்கிறார். இதனால் மும்பை போலீசார் கிரிஷ்மாவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், விசாரணையில், மர்ம கும்பல் நடத்திய அனைத்து கொள்ளைகளுக்கும் கிரிஷ்மாதான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இவர், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 50 சதவீதத்தை உதவி செய்வதற்கு பயன்படுத்தினார். யாரை வைத்து கொள்ளையடித்தார்களோ அந்த கும்பலை 40 நாட்கள் கிரிஷ்மா வெளியில் விடாமல் தன் உடனேயே வைத்திருப்பார். இப்படி வித்தியாசமான முறையில் வழிப்பறி செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கு 'மனி இன் டிரான்சிட்' என்ற இன்சூரன்ஸ் பெயரில் மும்பையில் இருந்து எங்களுக்கு வந்தது.

இதே போல மும்பையில் 54 வயதான பேபி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் சிறந்து விளங்கினார். காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டிருந்ததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவருக்கு சில சலுகைகள் கிடைத்தது. இவர் குறிப்பாக மெட்ரோபில் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பிரபலமானவர். நார்கோட்டிக் சட்டம் வந்த பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கடினம் ஆகி இவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மும்பை, காஜா, தூத்துக்குடி, தேனி, கம்பம், வடசென்னை போன்ற இடங்களில் அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன. 

போதைப்பொருள் தொழில் எளிமையாக பணம் வந்து சேரக்கூடியது. எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை என்று தாதாக்கள், ரவுடிகள் இதை செய்கிறார்கள். ஆனால் இதை செய்து மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். 

Next Story

இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிக்கு அல்வா கொடுக்க நினைத்த எம்பி - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 26

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
rajkumar solla marantha kathai 26

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நோயை மறைத்து ஏமாற்றிய ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார். பொதுவாக பாராளுமன்றத்தில் எம்பி அவர்களுக்கு நிறைய அதிகாரம் இருக்கிறது. ஒரு எம்பி அவர் காருக்கு இன்சூரன்ஸ் கேட்டு வந்திருந்தார். அவருக்கு நான்கு மாதத்தில் பாலிசியை போட்டு வாங்கி கொடுக்கப்பட்டது. அந்த கார் விபத்து விபத்துக்குள்ளாகியது. அதற்கு செட்டில் பண்ண வேண்டியிருந்தது, இன்சூரன்ஸில் 64 விபி என்ற ஒரு ஆக்ட் இருக்கிறது. இன்சூரன்ஸ் ஆக்டிவ் ஒரு பிரிவு இருக்கிறது. அந்த இன்ஷூரன்ஸ் ஆக்ட் என்ன சொல்கிறது என்றால்,  இன்சூர் பண்ணுகிற அன்று கட்டிய பிரீமியம் பணம் அந்தப் பேங்கிற்கு வந்திருக்க வேண்டும். அதன்படி இவருடைய செக் ஹானர் ஆகி இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டியது.

செக் கிளியர் ஆகி வரவே இல்லை. எங்கள் பேங்கில் விசாரிக்கும்போது அது டெல்லியில் பார்லிமென்ட் ஹவுஸில் இருக்கும் ஒரு பேங்க் என்று தெரியவந்தது. நாங்கள் இருந்தது தமிழ்நாடு. செக் கவர் டெல்லியில் கொடுத்திருக்கிறார். நடுவில் செக் என்ன ஆனது என்று தெரிய விசாரிக்க வேண்டி இருந்தது. டெல்லியில் இருக்கும் எங்கள் கிளை அலுவலகத்திடம் விசாரித்த போது அந்த செக் டிஸ் ஆனர் ஆக இருக்கிறது என்ற விஷயம் தெரிய வந்தது. ஏன் என்ன ஏன் காரணம்? அடுத்து எம்பிக்கு அந்த தகவலை சொன்னோம். ஆனால் அவர் அப்படி அவர் ஒத்துக் கொள்ளவில்லை. அது தவறான அரசியல் உள்நோக்கம் கொண்டு தவறான புகார் அளிக்கிறீர்கள் என்று சொன்னார். திருப்பி அந்த பேங்கில் மீண்டும் சரிபார்க்கப்பட்டபோது, அவர் செக்கை கொடுத்த போது அவர் அக்கவுண்டில் 100 ரூபாய் தான் சார் இருந்தது என்று தகவல் வந்தது. 

இன்றும் நூறு ரூபாய் தான் இருக்கிறது என்று சொன்னார். அவரிடம் ரிப்போர்ட் ஒன்னு வாங்கிக் கொண்டோம். அடுத்து அந்த எம்பி சந்திக்க வந்தார். அவரிடம் பேங்க் அளித்த ரிப்போர்ட்டை கொடுத்தோம் அவரிடம் பொதுத்துறை நிறுவனத்தை ஏமாற்றுவதாக கம்பளைண்ட் கொடுத்தால் 138 வாரன்ட் போட்டால் அவர் பதவியை இழக்க நேரிடும் என்ற நிலைமையை எடுத்து சொன்னோம். கிளைமே தனக்கு வேணாம் என்று எழுதி கொடுத்து போய்விட்டார்.

பாராளுமன்றத்தில் டிசிப்ளினரி கமிட்டி என்று இருக்கிறது. அந்த கமிட்டியில் அப்ரூவ் பண்ண வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். ஆளுங்கட்சி தலைவர்கள் இருப்பார்கள். அவர்களெல்லாம் சேர்ந்து பார்லிமென்ட்ரி உறுப்பினர் மீது வழக்கு எடுக்கலாம் என்று முடிவு எடுக்க முடியும். இந்த கேஸ் வந்து கருப்பு வெள்ளை வழக்கு. இதை அவரால் மறுக்க முடியாது. மறுத்தால் பாதிக்கப்பட்ட கம்பெனி சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் பொழுது அவர் பக்கமே தான் சாதகமாக இருக்கும். எம்பி பக்கம் நிற்காது. பாராளுமன்றத்தில் 23 மெஜாரிட்டி இருந்தால் மட்டும்தான் சுப்ரீம் கோர்ட் நிதியை ரத்து பண்ண முடியும். ஆனால் அது நடைமுறையில் இல்லை.அதுவும் இல்லாமல் இது எக்கனாமிக்கல் அஃபென்ஸ் கேஸ். இதில் பாராளுமன்றமும் தலையிட முடியாது. எனவே செக் கொடுக்கும்போதோ இன்சூரன்ஸ் எடுக்கும் போதோ அக்கவுண்டில் அதற்கான பணம் இருக்க வேண்டும்.