Skip to main content

பணமும் கொடுத்து உயிரையும் விட்ட பணக்காரர் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 12

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

rajkumar-solla-marantha-kathai-12

 

பெண்களிடம் பணத்தை பறிகொடுத்த பணக்காரர் பற்றிய வழக்கு குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் ‘சொல்ல மறந்த கதை’ என்னும் தொடரின் வழியே நம்மிடம் விவரிக்கிறார்

 

பெண்களும் இந்த அளவுக்கு இறங்குவார்களா என்கிற ஆச்சரியம் இந்த வழக்கு பற்றி கேள்விப்பட்டபோது எனக்கு ஏற்பட்டது. தென் சென்னையில் நடைபெற்ற விஷயம் இது. பங்குச்சந்தை தரகர் ஒருவர் நிறைய பணம் சம்பாதித்து வந்தார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரிடம் ஒரு பெண் பணிபுரிந்து வந்தார். அவளுக்கு இவர் நிறைய பணம் கொடுத்து உதவினார். வாங்கிய பணத்தை அந்த பெண் திருப்பிக் கொடுக்கவில்லை. அந்தப் பணத்தை திரும்பப் பெற படித்த, சட்டம் தெரிந்த, ஒரு பெண்மணியை அவர் அணுகினார். 

 

ஆனால் நடந்தது என்னவோ அந்த இரண்டு பெண்களும் நண்பர்களானார்கள். இருவரும் சேர்ந்து அவரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள். அவரும் முடிந்த அளவுக்கு பணம் கொடுத்தார். கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறும் அவர் அழுத்தம் கொடுத்தார். இதனால் இருவரும் சேர்ந்து அவரைக் கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் ரவுடிகளிடம் பேசினர். சமாதானம் பேசுவது போல் அவரை அழைத்து வந்து கொலை செய்யலாம் என்று அந்த ரவுடிகள் ஐடியா கொடுத்தனர். பஞ்சாயத்து பேச அவரைப் படகில் அழைத்துச் சென்றனர். 

 

நடுக்கடலில் அவரைக் கொலை செய்து கடலில் தூக்கி வீசினர். அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் தேட ஆரம்பித்தனர். அவருடைய செல்போனை ஆராய்ந்தபோது அந்த ரவுடிகளின் இருப்பிடம் தெரிந்தது. அவர்களிடம் விசாரித்தபோது அனைத்து உண்மைகளையும் அவர்கள் தெரிவித்தனர். உண்மையை ஒப்புக்கொண்டு சிறை சென்றால், விரைவில் பெயில் வாங்கி வெளியே வந்துவிடலாம் என்பது அவர்களுடைய எண்ணம். அதுபோலவே அவர்கள் வெளியே வந்தனர். அவருடைய உடலும் கிடைக்கவில்லை.

 

உதவி கேட்டு வந்த ஒருவரைக் கொலை செய்த கொடூரமான சம்பவம் இது. உதவி கேட்கச் செல்லும்போது குறிப்பிட்ட நபரின் தரம் குறித்து அறிந்த பிறகே கேட்க வேண்டும். இந்த கேஸ் இப்போதும் நடந்து வருகிறது. கூலிப்படையினருக்கு காசு மட்டும் தான் முக்கியம். உலகம் முழுவதுமே கூலிப்படை என்பது இருக்கிறது. அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது. கொலை செய்வது மட்டுமே தொழில். நியாயம், தர்மம் எல்லாம் அதில் பார்க்க மாட்டார்கள்.

 

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிக்பாக்கெட் தொல்லை குறைஞ்சது எப்படி தெரியுமா? - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 17

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

rajkumar-solla-marantha-kathai-17

 

சென்னை என்றாலே சினிமாக்களில் பிக்பாக்கெட் அடிப்பதாக காட்டப்படுவதுண்டு; அது இப்போதெல்லாம் சுத்தமாக கிடையாது. அது எப்படி முழுவதுமாக ஒழித்துக் கட்டப்பட்டது என்பதை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் ‘சொல்ல மறந்த கதை’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

சென்னை எல்லீஸ் ரோட்டில் ஆட்டோக்களுக்கு பைனான்ஸ் பண்ணும் நிறுவனத்திற்கான கிளை ஒன்றிற்கு பணம் நிலுவைத் தொகை கட்ட வரும் ஆட்டோக்காரர்கள் அடிக்கடி பணம் தொலைந்து விட்டதாகவே கூறி வந்தார்கள். ஆரம்பத்தில் எங்கேயோ தொலைத்து விட்டார்களோ என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். ஆனால் தொடர்ச்சியாக இப்படி சொல்லப்படுவதால் என்னவென்று விசாரித்தபோது பணத்தை தொலைத்த எல்லோருடைய பை, பேண்ட், சட்டை ஆகியவற்றில் பிளேடு கொண்டு கிழிக்கப்பட்டிருக்கிறது. அப்போது ஒரு முடிவெடுத்தோம் தொடர்ச்சியாக பிக்பாக்கெட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

 

இது குறித்து விசாரித்து இதை தடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னராக அப்போது இருந்த விஜயகுமார் அவர்களிடம் பேசினேன். அவரும் செல்வமணி என்ற காவல்துறை அதிகாரியின் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து எங்களுடைய இன்சூரன்ஸ் குழுவும் இணைந்து ஏதேதோ முயற்சிகள் செய்து தேடினோம். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அப்போது ஏட்டையா ஒருவர் சொன்னார். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. அப்போதைய சென்ட்ரல் ஜெயிலில் பிக்பாக்கெட் வழக்கில் சிக்கியிருக்கிறவங்க கிட்ட கேட்டால் ஏதாச்சும் ஐடியா கிடைக்கும் என்றார்.

 

காவலர் ஒருவரையே கைதி போல சிறைக்குள் அனுப்பி பிக்பாக்கெட் கேசில் சிக்கியவர்களோடு பழக வைத்தோம். மகேஷ் என்றவர் அறிமுகமானார். அடிக்கடி பிக்பாக்கெட் வழக்கில் சிக்கி சிறை செல்பவர். அவரை நீதிபதி அனுமதியோடு மருத்துவ காரணங்களை சொல்லி சிறையிலிருந்து வெளியே எடுத்து அவரைக் கொண்டு அவருடைய பிக்பாக்கெட் அடிக்கும் கூட்டாளிகளைத் தேடினோம். சென்னையில் பிரபலமாக இருக்கும் அனைத்து பஸ் ஸ்டாண்டுகளிலிலிருந்தும் பிக்பாக்கெட் அடிக்கும் அவனின் கூட்டாளிகள் சிக்கினர்.

 

அதில் ஒருவன்தான் சொன்னான். எங்களை ஏன் சார் பிடிச்சு வச்சிருக்கீங்க... எங்க டிரைனர் இருக்காரு சார், அவரை போயி பாருங்க என்றான். வியாசர்பாடி நாகராஜன் என்பவரை தேடிப் போனபோது அவரோ வீட்டின் பின்புறம் பெரிய பயிற்சி பட்டறை வைத்திருந்திருக்கிறார். 

 

பஸ் ஸ்டாண்டில் எப்படி திருடனும், கோவிலில் எப்படி திருடனும், பையிலிருந்து எப்படி எடுக்க வேண்டும் போன்ற எல்லாவற்றிற்கும் செய்முறை பயிற்சி எடுப்பதற்காகவே மாதிரிகளை உருவாக்கி ஒரு பட்டறையே வைத்திருந்திருக்கிறார். தினமும் சென்னை மண்ட்ரோ சிலை அருகே கூடி நின்று எந்த பஸ்சில் யார் போக வேண்டும். பிக்பாக்கெட் அடிக்கும் பணத்தை எங்கே கொண்டு வந்து பிரித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டி வேலை செய்திருக்கிறார்கள். அந்த குழுவையே ஒட்டுமொத்தமாக பிடித்து குண்டர் சட்டத்தில் சிறைக்கு அனுப்பினோம். அதன் பிறகு சென்னையில் பிக்பாக்கெட் ஒட்டுமொத்தமாக அடியோடு அழித்து ஒழிக்கப்பட்டது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

டீ கடையில் போட்ட திட்டம்; 15 கோடி நகையை திருடிய நண்பர்கள் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 16

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 rajkumar-solla-marantha-kathai-16

 

நண்பர்கள் மூவர் இணைந்து கொள்ளை அடித்து மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

 

வாழை இலை விற்பவர், ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தவர், வேலையில்லா பட்டதாரி நண்பர்கள் மூவர் ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது என்ன வாழ்க்கையில இப்படியே இருக்கோமே, இப்படியே இருந்தால் எப்பத்தான் செட்டில் ஆவது என்று யோசித்திருக்கிறார்கள். அதில் ஒருவன் சொல்லி இருக்கிறான் “பேங்க்கை கொள்ளை அடித்தால் தான் செட்டில் ஆக முடியும்” என்று. இது ஏதோ ஒரு சாதாரணமாக நண்பர்களுக்குள் கிண்டலாக பேசிக் கொள்வதாகத்தானே அனைவரும் நினைப்போம். ஆனால் இந்த நண்பர்கள் மூவரும் இதை சீரியசாகவே செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள்.

 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நகைகளை அடகு பிடித்து பணம் கொடுக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் இந்த மூன்று நண்பர்களில் ஒருவனான முருகன் என்பவன் கடைநிலை ஊழியராக சேர்கிறான். நீண்ட நாட்கள் திட்டப்படி ஒரு நாள் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு ஜுஸில் மயக்கமருந்து கொடுத்து விட்டு, மற்றொரு பெண் ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டி தனி அறையில் அடைத்து விட்டு அங்கிருந்த 15 கோடி மதிப்பில் உள்ள நகைகளை திருடிக்கொண்டு சென்று விடுகிறார்கள்.

 

மூவரும் சென்னையில் பல்லாவரத்தில் ஒரு லாட்ஜ் புக் பண்ணி, அங்கேயே தங்கி நகைகளை உருக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒரு அளவிற்கு மேலே முடியவில்லை. அதனால் மூவரும் தனித்தனியாக பிரிந்து சென்றுவிடலாம் என்று முடிவெடுத்து ஒருவன் மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரு ஊரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்துவிட்டு அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறான். மற்றொருவன் விழுப்புரம் அருகே உள்ள மனைவி ஊரில் மண்ணைத் தோண்டி புதைத்து வைத்திருந்திருக்கிறான்.

 

காவல்துறையின் தீவிர வேட்டையில் மூன்றே நாளில் மூவரும் பிடிபட்டார்கள். அவர்களிடம் திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டது. இதை திறம்பட செய்தவர் மறைந்த காவல்துறை அதிகாரி விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரே கண்டுபிடிக்க முடியாவிட்டால், அதற்கான இன்சூரன்சிற்கு நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்யும். இந்த நகைகள் பிடிபட்டதால் இன்சூரன்ஸ் தொகை எதுவும் வழங்கவில்லை.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்