Skip to main content

பாஜகவின் தேர்தல் யுத்திகள் - 1 பொக்ரான் அணுகுண்டு சோதனை!

Published on 02/03/2019 | Edited on 02/03/2019


 

pokhran



பாஜக ஆட்சிக் காலத்தில் எத்தனையோ பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மட்டுமே பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றதைப் போல ஒரு தோற்றத்தை பிரதமர் மோடி தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

 
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்குள் நடைபெற்ற பல பயங்கரவாத தாக்குல்கல்களுக்கு இந்துப் பயங்கரவாதமே பின்னணியில் இருந்திருப்பதை தேசிய புலனாய்வு நிறுவனம் ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறது. இந்தத் தாக்குதல்களுக்கு பாஜகவைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா உள்ளிட்ட பல முக்கிய சாமியார்களுக்கு தொடர்பு இருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.
 

அதுபோல, பாகிஸ்தானுடனான பதற்றத்தை அதிகரித்து அதை அப்படியே தேர்தலுக்கு பயன்படுத்தியதும், இந்திய வீரர்களின் உயிர்த் தியாகத்தை தனது அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தியதும் பாஜகதான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
 

இந்திய ராணுவத்தை தனது நலனுக்காக பாஜக அரசு எப்போது பயன்படுத்து தொடங்கியது என்றால், 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் முதன்முறையாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடனேயே தொடங்கிவிட்டது.
 

பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு!

 
1974 ஆம் ஆண்டு மே மாதத்திலேயே இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் இந்தியா பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது. அன்றே இந்தியா அணு ஆயுத நாடு என்ற பெருமையை பெற்றுவிட்டது. அதன்பிறகு, அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கு இந்தியா தகுதிபெற்றுவிட்டது.


 

pokhran


 

இரண்டாம் உலகப்போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்ட சமயத்திலேயே இந்தியாவில் அணு ஆயுத திட்டம் குறித்து 1944 ஆம் ஆண்டு அணு இயற்பியலாளர் ஹோமி பாபா முயற்சியை தொடங்கிவிட்டார். அதற்காக டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார்.

 
1950களில் தொடக்கநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. புளூடோனியம் தயாரிப்பு அணுகுண்டுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாக திட்டமிடப்பட்டன. 1962 ஆம் ஆண்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் போர் நடந்தது. அதைத் தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு சீனா அணுகுண்டு வெடித்து இந்தியாவை அச்சுறுத்தியது. லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகு விக்ரம் சாராபாய் இந்தத் திட்டத்துக்கு தலைமை ஏற்றார். சாஸ்திரி அணு ஆயுத தயாரிப்பை ஊக்குவிக்கவில்லை.
 

இந்நிலையில்தான் 1966ல் இந்திய பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்தை தீவிரப்படுத்தினார். இந்தத் திட்டத்துக்கு ராஜா ராமண்ணாவை தலைவராக்கினார். அணு ஆயுதங்களைத் தயாரிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். இதன் விளைவாகவே, 1974 ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியாவின் முதல் அணுகுண்டை வெடித்தது இந்தியா.
 

இதையடுத்து உலகின் வல்லரசுகள் பதற்றம் அடைந்தன. இந்தியா அணு ஆயுத நாடாக மாறுவதை அவை ஏற்கவில்லை. இந்தியா மீது அணு தொழில்நுட்பத் தடைகளை உலகின் பல நாடுகள் விதித்தன.
 

தொடர்ந்து இந்தியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததால் இந்திரா ஆட்சியை இழக்க நேரிட்டது. அதன்பிறகு வந்த ஜனதா ஆட்சியில் அணு ஆயுதத்திட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டது. 1980ல் மீண்டும் இந்திரா பிரதமரானதும் அணு ஆயுதத் திட்டத்துக்கு ராஜா ராமன்னாவை தலைவராக்கி வேகம் கொடுத்தார். பாகிஸ்தான் அந்த நேரத்திலேயே ஏராளமான நிதியை ஒதுக்கி அணு ஆயுதத் திட்டத்தை விரைவுபடுத்தியதை அறிந்ததால் இந்திராவும் விரைவுபடுத்தினார். 1984ல் இந்திரா கொல்லப்பட்டதும் பிரதமரான ராஜிவ் காந்தியும் இந்தத் திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கினார்.


 

pokhran


 

அணுகுண்டு, ஏவுகணைகள் தயாரிப்பிலும் சோதனையிலும் இந்தியா முன்னேற்றம் கண்டது. ஆனால், 1989ல் தேசியமுன்னணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் சற்று சுணக்கம் ஏற்பட்டது. ஆனால், 1991ல் ஆட்சிப் பொறுப்பேற்ற நரசிம்மராவ் காலத்தில் அணுகுண்டு தயாரித்து முடிக்கப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த அப்துல்கலாம் உள்ளிட்டோர் அந்த அணுகுண்டை சோதனை செய்ய விரும்பியும் நரசிம்மராவ் அனுமதிக்கவில்லை. பாகிஸ்தானும் அணுகுண்டு தயாரித்து வைத்திருப்பதை அறிந்ததால், இந்தியா வெடித்தால் அதுவும் வெடித்து அணு ஆயுத நாடு என்ற தகுதியைப் பெற்றுவிடும் என்பதால் அவர் மறுத்தார்.
 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், 1998 ஆம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமரான வாஜ்பாய், அணுகுண்டை வெடிக்கு அனுமதி கொடுத்தார். இந்தியா வெடித்தவுடன், அதுவரை பொறுமையாக இருந்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு நிகராக அடுத்தடுத்து அணுகுண்டுகளை வெடித்தது. இதன்மூலம் பாகிஸ்தானையும் இந்தியாவுக்கு நிகரான நாடாக வெளிப்படுத்தியதே வாஜ்பாய் அரசின் சாதனையாகிவிட்டது.

 

கூட்டணிக் குழப்பத்தால் 13 மாதங்களில் ஆட்சியை இழந்த வாஜ்பாய் தனது அரசுதான் இந்தியாவை அணு ஆயுத நாடாக்கியது போன்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது. இந்தியாவை ஆண்ட முந்தைய அரசுகளின் சாதனையை தனது சாதனையாக கூச்சமில்லாமல் பிரச்சாரம் செய்தது பாஜக.

 

அடுத்து கார்கில் சண்டையை குறித்து பார்க்கலாம்… 

 

 

 

Next Story

ஆதீனத்துக்கு மிரட்டல்; பா.ஜ.க நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The court is acting on the bail plea of ​​BJP executives for intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு கடந்த 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது, குடியரசு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.