Skip to main content

வைகோவுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து கலைஞருக்கு பொறாமையா ? கடந்த காலத் தேர்தல் கதை -5

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

2004 ஆம் ஆண்டு  திமுக தலைமையில் பலமான கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கிறது ஜனநாயக முற்போக்கு கூட்டணி . நிச்சய வெற்றி என்று அந்த கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகமா களமிறங்கியிருக்கும் நிலையில் மதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் பரபரப்பாக செய்தி வெளியாகின . அப்போது இது பற்றி வைகோவின் கருத்தை அறிய அவரை சந்தித்து பேட்டி எடுத்த போது அவர் கூறியது . 

 

vaiko



அப்போது வைகோ அவர்கள் எங்கள் இரண்டு கட்சி தொண்டர்களிடையே அந்த மாதிரியான நெருடல்கள் எதுவும் இல்லை .விருதுநகர் மாநாட்டுக்கு சென்ற போது லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் பாசம் பொங்க அன்போடு என்னை வரவேற்றார்கள் . இரண்டு கட்சி தொண்டர்களும் ஒன்றாக சேர்ந்து அணைத்து இடங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து தேர்தல் குறித்து ஓன்றை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம் . நெருக்கமான உறவோடு தான் நங்கள் தேர்தலை சந்திக்கிறோம் .40 இடங்களிலும் வெற்றி பெற முடியும் , மக்கள் ஆதரவு அலை இருக்கிறது என்பதை தலைவரிடம் சொன்னேன் . அந்த அளவுக்கு இயல்பான நெருக்கத்தோடு செயல் படும் போது நெருடலுக்கு ஒன்றும் இடமில்லை . மயிலாப்பூர் பொதுக் கூட்டம் நடந்த அதே நேரத்தில்  தி .நகரிலும்  ஒரு கூட்டம் நடந்ததையும் ஒரு செய்தியாக சொல்ராங்க . நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் ஒரே நேரத்தில் இரு கூட்டங்கள் நடப்பது சாதாரண விஷயம் .ஒரே நாளில் ஐந்து , ஆறு கூட்டங்கள் கூட நடக்கும் .  அன்றைக்கு மயிலாப்பூர் கூட்டத்துக்கும் வந்து விட்ட வேட்பாளர் டி .ஆர் . பாலு , கூட்டம் முடியும் வரை காத்திருந்து , என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டுத்தான் சென்றார் . அதனால் நெருடல் என்ற பேச்சுக்கே இடமில்லை .எதிர் காலத்திலும் எந்த நெருடலும்  இருக்காது .

 

vaiko



அந்த சமயத்தில் வைகோ அவர்களுக்கு வரும் கூட்டத்தை பார்த்து கலைஞர் பொறாமை என்று கூட செய்திகள் வெளியாகின அதுக்கு வைகோ அவர்கள் கலைஞர் அவர்கள் ரொம்ப மகிழ்ச்சி அடைவார் . அவருடைய கவிதையை படிச்சு பார்க்கணும் . கவிதையை படித்து புரியாட்டி நாம அதுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது தான் . அவர் சங்கத் தமிழ் எழுதியவர் . குறளோவியம் தீட்டியவர் . பராசக்தி , மனோகரா , பூம்புகார் , குறவஞ்சி திரைக்காவியங்களை எழுத்திருக்கிறார் . அந்த பேனாவில் பல்லாயிருக்கணக்கான உடன் பிறப்பு மடல்கள் எழுத்திருக்கிறார் . அவர் , வைகோ வருக ... வாழ்க ... என்று பாசப்பட்டயமாக ஒரு கவிதை எழுதியிருக்காரே . அது காலத்தை வென்று நிற்கக்  கூடிய ஒரு கவிதை . அதுக்கு நான் தகுதியானவனா என்பது வேறு கேள்வி .

 

vaiko



ஆனால் அவர் அவ்வளவு பாசப்பிணைப்போடு , வீரன் நீ ., தீரன் நீ ., என்று எழுத்திருக்கிறார் . உன்னை நானறிவேன் என்னை நீயறிவாய் என்றெல்லாம் எழுத்திருக்கிறார் . இவை எல்லாம் இயல்பாக உள்ளத்தின் அடித்தளத்தில்  இருந்து வருவது . இன்னும் சொல்லப் போனால் , ஒரு கட்டத்தில்  ஒரு தாய் , மகனுக்கு வராகி கூடிய பெருமையை கண்டு எப்படி பூரித்திருப்பாளோ ? அப்படி தம்பிக்கு வரும் பெருமையை கண்டு நான் பூரித்து  புளகாங்கிதம் அடைகிறேன் என்று சொன்னார் . அந்த பாசத்தோடு தான் இருக்கிறார் இதெல்லாம் கற்பனையாக , எங்கேயாவது உருவாக்க முடியுமா ... என்கிற விசமத்தனமான நோக்கத்தில் யாரது எழுதலாம் , சொல்லலாம் தவிர  , இம்மியளவு கூட இதில் உண்மை கிடையாது . அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தான்  இது போன்ற செய்திகளை  பரப்புகிறார்கள் என்று கூறி இருந்தார்  .  2004 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க. சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியில் பங்கு ஏற்காமல், பிரச்சினைகளின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு அளித்தது. பல்வேறு பிரச்சினைகளில் அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, 2007 ஆம் ஆண்டு, அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.