Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; ராஜஸ்தானில் மட்டும்  193 குரூப்கள்; பகுதி – 23

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Digital Cheating part 23

 

வீடியோவில் சிக்கிய பின் அவர்களை எப்படி மிரட்டுவிங்க? 

 

வீடியோ ரெக்கார்ட் உருவானதும் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து மற்றொரு குரூப்புக்கு செல்போன் நம்பரோடு தருவோம். நாங்கள் யூடியூப் நிர்வாகத்தில் இருந்து பேசுகிறோம் அல்லது டெல்லி க்ரைம் ப்ராஞ்ச் அலுவலகத்தில் இருந்து அதிகாரி பேசுகிறேன், சிபிஐ அதிகாரி பேசுகிறேன். நீங்கள் ஆபாச சாட்டிங் செய்துள்ளீர்கள், ஆபாச வீடியோக்களை அடிக்கடி பார்ப்பதாக எங்களுக்கு ரிப்போர்ட் வந்துள்து. நீங்கள் நிர்வாண வீடியோ, வெப்சைட் பார்க்கும் வீடியோ காட்சிகள் எங்களிடம் உள்ளது. உங்கள் மீது வழக்கு போடப் போகிறோம் என புகைப்படத்தை அனுப்பி மிரட்டுவோம். 

 

போட்டோவை பார்த்துவிட்டு அவர்கள் எங்களை தொடர்புக்கொண்டால் அந்த எண் உபயோகத்தில் இருக்காது. சிபிஐ, சைபர்செல், சிஐடி, கூகுள் நிர்வாகத்தின் பெயரைச் சொல்லி மிரட்டி பணம் பறிப்போம்.

 

நிர்வாணமாக வீடியோவில் சிக்கியவர்களை மிரட்ட சிபிஐ பெயரை பயன்படுத்தியதை சொன்னதும் விசாரணை அதிகாரிகள் மிரண்டுள்ளனர். இவர்களே மிரண்டார்கள் என்றால் பொதுமக்கள் எப்படி பயந்திருப்பார்கள் என யோசித்துப் பாருங்கள்.    

 

இது ஒருவழி என்றால், நேரடியாக எங்காளுங்களே ‘இதோ பார், நீ நிர்வாணமா இருக்கற வீடியோ’ என ஸ்கிரீன்ஷாட் அனுப்பி உன்னோட செக்ஸ் வீடியோ இருக்கு, அதை நெட்ல போட்டுடுவோம்னு ஆரம்பிச்சி பணம் கேட்பாங்க.

 

 படிக்காத நீங்க எப்படி பார்ன் வெப்சைட் உருவாக்குனிங்க?

 

பணம் தந்தால் அப்படியொரு வெப்சைட் உருவாக்கித் தர ஆட்கள் இருக்காங்க. இதற்கான பயிற்சியை எங்களுக்கு ஜார்கண்ட் ஜம்தாராவை சேர்ந்தவர்கள் நேரில் வந்தும் கற்றுத் தந்தாங்க. ஆன்லைன் க்ளாஸ்களும் எடுத்தாங்க என பார்ன் வெப்சைட் வழியாக எப்படி ஆன்லைன் சீட்டிங் நடத்தியதை விவரித்துள்ளான்.

 

பார்ன் வெப்சைட் முதலில் உருவாக்குவோம். அந்த லிங்க்கை பரப்புவோம். 100 பேருக்கு அனுப்பினால் 90 பேர் அதனை கிளிக் செய்து பார்ப்பார்கள். அது ஆபாச வெப்சைட் எனத் தெரிந்த பின்பும் 80 பேர் பார்ப்பார்கள். அவர்கள் அதில் உள்ள வீடியோவை பார்ப்பார்கள். இரவில் லைவ் வீடியோ ஒளிபரப்பாகும் என சொல்வோம். 50 பேராவது லைவ் வீடியோ பார்க்க உள்ளே வருவார்கள். அப்படி பார்க்கும்போது அவர்கள் மொபைல், லேப்டாப்பில் பார்த்தால் அதிலுள்ள கேமரா வழியாக நாங்கள் அவர்கள் செய்வதை ரெக்கார்ட் செய்து கொள்வோம். பின்பு அந்த படத்தைக் காட்டி மிரட்டுவோம் என்றுள்ளார்.

 

இதுபற்றி புனே மாநகர சைபர் செல் இன்ஸ்பெக்டர் மீனல் பாட்டேல் கூறும்போது, ஆன்லைனில் கவனமாக இருக்க வேண்டும். பேஸ்புக், ட்விட்டர் என எதையாவது பார்த்துக்கொண்டு இருப்போம். இல்லை, ஏதாவது பொருட்கள் வாங்க வெப்சைட் ஓபன் செய்து பார்த்துக்கொண்டு இருப்போம். அப்போது திடீரென ஒரு பாப்-அப் வரும். அதனை கிளிக் செய்தால் ஆபாசத்தளத்துக்கு அழைத்து செல்லும். மறுபுறம் ஒரு பெண், தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாகப் பேசிக்கொண்டு இருப்பார். அந்த பக்கத்துக்கு வந்து வீடியோ பார்க்கும் நபரையும் பார்க்கச் சொல்வார். உடைகளை அவிழ்க்கும்போது அதனை ரெக்கார்ட் செய்துகொள்வார். லைவ் வீடியோ எனச் சொன்னாலும் உண்மையில் அது லைவ் இல்லை. ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோவை ஓடவிட்டு உள்ளே வரும் சபலிஸ்டுகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவார்கள் என்கிறார்.

 

வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் வழியாகவும் எதிரில் இருப்பவர்களிடம் எங்கள் வீட்டு பெண்களை ஆபாசமாக பேச வைத்தும் நிர்வாணமாக வீடியோவில் தோன்றி அதனை வேறு ஒரு மொபைலில் இருந்து வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் கேட்போம் என்றுள்ளனர் சிக்கியவர்கள்.

 

இது ஏதோ அந்த கிராமம் மட்டும்மல்ல. பரத்பூரில் உள்ள காம்டி கிராமமும் இப்படிப்பட்ட குற்றங்களின் மைய கிராமம் எனப்படுகிறது. பரத்பூர் ஜீர்ஹெரா காவல்நிலையத்திற்கு வாராவாரம் இந்தியாவின் பிற பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் வந்து சம்பந்தப்பட்ட சைபர் க்ரைம் குற்றவாளிகளை தூக்கிச் செல்வது வாடிக்கை. 

 

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம், ராய்பூர் சுகேதி கிராமத்தில் பதுங்கியிருந்த ஷெஹ்பாத்கான் என்பவனை சஹாகர் காவல்நிலைய போலிஸ் உதவியோடு 2023 ஜனவரி 13ஆம் தேதி கைது செய்தது புனே தத்தவாடி காவல்நிலைய சப்–இன்ஸ்பெக்டர் ஹசன் முலானி தலைமையிலான டீம். இவன் நாடு முழுவதும் நடைபெற்ற செக்ஸ்டார்ஷன் குற்றங்களில் முக்கியமானவன். இவனால் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவனை நீதிமன்றத்தில் நிறுத்தி புனே சிறையில் அடைத்தனர்.

 

ராஜஸ்தான் மாநிலம் ஜீரஹாரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட நாக்லாகுந்தன் கிராம மக்களுடன் துப்பாக்கி சூடு, கண்ணீர் குண்டு வீசி சண்டை போட்டு ஹதிமுகமத், ஹசன், அசாரூதீன், அக்தர்கான், சதாம், சோயிப், மற்றொரு சதாம் என 7 பேரை பிடித்தனர் அல்வார் மாவட்ட எஸ்.பி அமன்தீப் சிங் கபூர் தலைமையிலான போலிஸார். 

 

இந்த 7 பேர் மீது ஆந்திரா, கர்நாடகா, பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி என 14 மாநில போலிஸாரால் செக்ஸ்டார்ஷன் வழக்குகள் உட்பட பல க்ரைம் குற்றத்தின் கீழ் தேடப்படுபவர்கள். ஆன்லைன் க்ரைம் வழியாக மக்களிடமிருந்து பறித்த பணத்தில் இவர்கள் வாங்கிப் பயன்படுத்திய 7 டிராக்டர்கள், 3 கார்கள், 3 இருசக்கர வாகனங்கள், 1 மடிக்கணினி, 7 மொபைல், 34 வங்கி கணக்கு புத்தகம், 12 ஏ.டி.எம் கார்டுகள், 3.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

 

இப்படி கடந்த சில ஆண்டுகளில் மட்டும் செக்ஸ்டார்ஷன் தொழிலை செய்த 193 குரூப்களை ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் மட்டும் பிடித்துள்ளது போலிஸ்.

 

அதன்பின் அது தடுக்கப்பட்டுவிட்டதா?

 

தொடரும்… 

 

 

Next Story

கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த அவலம்; மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Incident for pregnant woman at Hospital in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண். இவருக்கு, கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால்,  கன்வாடியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த கர்ப்பிணி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, அந்த பெண்ணுக்கு தீராத பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவ கல்வி துணை செயலாளர் உத்தரவிட்டார். 

அந்த குழுவினர், சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வாசலிலே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“ஆடையை கழட்டுமா...” - நீதி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A case of judge for A woman who went to court seeking justice in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், கரெவுளி மாவட்டத்தில் உள்ள ஹிண்டாவுன் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சில மர்ம கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தின் நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அப்போது, நீதிபதி காயங்களை காட்டுவதற்காக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றும்படி கூறியதாக கூறப்படுகிறது. 

இதில் அதிர்ச்சியடைந்த பெண், இது தொடர்பாக நீதிபதி மீது போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘என் வாக்குமூலத்தைப் பெற நீதிபதி என்னை அழைத்திருந்தார். அதன்படி, நான் நீதிமன்றத்திற்கு சென்று முழு அறிக்கையை கொடுத்தேன். அதன் பிறகு, நான் வெளியே வர ஆரம்பித்தேன். அப்போது, நீதிபதி என்னை மீண்டும் திரும்ப அழைத்தார். அப்போது, அவர் என் ஆடைகளை கழற்றச் சொன்னார். அதற்கு நான், ஏன் என் ஆடைகளை கழற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், என் உடலில் உள்ள காயங்களை பார்க்க விரும்புவதாக கூறினார். உங்க முன்னாடி என்னால துணியை திறக்க முடியாது என்று கூறி, மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹிண்டாவுன் நகர போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று (03-04-24) வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை ஆடைகளை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.